Millet Benefits in Tamil Siruthaniyam Payangal Cereals Benefits in Tamil சிறுதானிய பயன்கள் சிறுதானிய வகைகள் Siruthaniyangal சிறுதானிய அரிசி Millet Vagaigal

0

Millet Benefits in Tamil: Millet Benefits, Millet Nutrition, millet seeds, சிறுதானிய வகைகள் பெயர்கள், சிறுதானிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், சிறுதானியங்கள் பயன்கள், சிறுதானிய சத்து மாவு, Siru Thaniyangal, Siruthaniyam Name List in Tamil, Millets Meaning in Tamil, Siruthaniyam, Siruthaniyam Payangal, Siruthaniyam Vagaigal in Tamil, siruthaniyangal. தானியா வகைகள், Thaniya Arisi Vagaigal, தானிய வகைகள், Siruthaniya Maruthuva Payangal, siruthaniya pongal, Millet Health Benefits, Millet Names in Tamil, Cereals Benefits in Tamil.

Millet Benefits in Tamil
Millet Benefits in Tamil | Cereals Benefits in Tamil

சிறுதானிய வகைகளும், அதன் மகத்தான பலன்களும்(Millet Benefits in Tamil)

சிறுதானியம் என்பது வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவத்தில் சிறியவையாக இருக்கும் தானியங்களை குறிக்கும். சிறுதானிய வகைகளானது தானிய குடும்பத்தை சேர்ந்த “ancient grain”என அழைக்கப்படுகிறது. இது மனிதர்களின் உணவாக‌ உலகின் அனைத்து பாகங்களிளும் பயிரிடப்படுகிறது. இது வளர்முக நாடுகளில் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. இந்த வகை சிறுதானியங்கள் பொதுவாக வெப்பமண்டல பிரதேசங்களில் செழிப்பாக வளர்வதுடன், ஏழுவதே நாட்களில் அறுவடைக்கு தயாரரகிறது. என்றாலும் பரவலாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான சிறுதானியங்கள் பயிரிடப்பட்டு வருகிறது .

இதிலும் அதிகபடியாக பயிரிடப்படுவது Pennisetum glaucum ம், கம்பு வகை சிறுதனியமும்தான். இது முதலில் ஆபிரிக்காவிலும் பின்னர் ஆசியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளிலும் ஏறத்தள 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களின் உணவுக்காக பயிரிடப்பட்டு வருகிறதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இது தமிழர்களின் பாரம்பரிய உணவாக எமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. அவர்கள், ஆரோக்கியமாக நீண்டநாட்கள் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம், அவர்கள் சிறுவயதில் சாப்பிட்ட சிறுதானியங்களால் ஆன பாரம்பரரிய உணவுகள் தான். இவற்றில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளன. அந்தவகையில் சிறுதானியங்களையும், அவற்றில் ஒளிந்துள்ள எக்கச்சக்க பலன்களையும் குறிந்து இப்போது பார்க்கலாம்.

சிறுதனியத்திலிருந்து எமக்கு கிடைக்கும் சத்துப்பொருட்கள் எவை?

ஒரு கப் சமைத்த சிறுதனிய உணவில் கிட்டதட்ட 207 கலோரியும் அதனுடன் 6 கிராம் புரதம், 2 கிராம் நார்சத்து, 2 கிராமுக்கும் குறைவான கொழுப்பும் உள்ளது.

கனியுப்புக்களான கல்சியம், கொப்பர், இரும்புச்சத்து, மக்னிசியம், பொஸ்பரஸ், பொட்டாசியம், வைடமின் B6, C, E, மற்றும் K உள்ளது. அனேகமான சிறுதனிய வகைகளில் உயர் அளவில் நார் சத்துகள் காணப்படுவது விசேடமானது.

சிறுதனியத்திலிருந்து எமக்கு கிடைக்கும் ஆரோக்கிய பயன்கள் எவை?

சிறுதானிய உணவுகளை தினமும் உண்பதால் எமக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றில் சில கீழ்வருமாறு !

• இதயநோய்களை தவிர்க உதவும்

இது எமது உடலின் triglyceride அளவை குறைத்து stroke எற்படும் ஆபத்தை குறைக்கும்

• உடலின் பருமனை குறைக்க உதவும்

இந்த சிறுதானிய உணவு வகைகளில் அமினோ அமிலம், ரைப்டொஃபென்(Tryptophan) என்னும் பொருட்கள் இருப்பதால் உணவு செரிமானமடைவதையும் ,பசி வருவதையும் தாமதமாக்கி , உடல் பருமனை கட்டுக்குள் வைதிருக்க உதவும்.‍ யாருகெல்லாம் உடல் பருமன் குறைக்க வேண்டுமோ அவர்கள் இந்த சிறுதானிய வகை உணவுகளை ஒரு நாளில் பிரதான உணவாக எடுக்க வேண்டும்.

• உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுகிறது

இதில் மக்னீசியம் என்ற வேதிபொருள் இருப்பதால் இதயச்சுவரில் உள்ள தசை நார்களை தளர்வடைய செய்து இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. அத்துடன் ஆஸ்துமா மற்றும் அடிக்கடி வரும் தலையிடியையும் குறைக்கிறது.

• நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது

இதில் குறைவான‌ glycemic index இருப்பதால் மெதுவான உணவு செரிமான செயட்பாட்டை துண்டுவதுடன், இன்சுலின் சுரத்தலையும் தூண்டி இரத்தத்தில் சக்கரையின் அளவை சரியான அளவில் பேணுவதற்கு உதவுகிறது.

• நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது

இதில் உள்ள Tryptophan என்னும் சத்துப்பொருள் எமது உடலில் serotonin என்னும் வேதிப்பொருள் சுரப்பதை அதிகரித்து மனஅழுத்தத்தை குறைத்து அமைதியான ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கிறது.

• பெண்களுக்கு மாதவிடாயின் போது எற்படும் வயிற்றுவலியை குறைக்கிறது

சிறுதானிய வகை உணவுகளில் மக்னீசியம் இருப்பதால் இந்த நேரங்களில் இவ்வகை உணவுகளை உண்ணும் போது வயிற்று வலியை குறைக்க முடியும்.

• தாய் பால் சுரத்தலை அதிகரிக்கும்

பால் கொடுக்கும் தாய்மார்கள் குரக்கன் வகை உணவுகளை அதிகமாக எடுக்கும்படி வைத்தியர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். ஏனென்றால் பால் சுரத்தலை அதிகரித்து,குழந்தைக்கு அதிக காலம் பாலுட்டுவதற்கு உதவுகிறது.

• முகப்பருவினைக் குறைக்கிறது:

சிறுதானியங்களில் காணப்படும் ஒரு வகையான உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளான கொழுப்புத் திசு (Lipoic) உயிரணு வளர்சிதை மாற்றும் சுழற்சியினை அதிகரிப்பதன் மூலம் மதிப்பு மிக்க அழற்சியற்ற விளைவை உருவாக்குவதுடன் உடலின் இரத்த ஓட்டத்தினை அதிகரிப்பதன் மூலம் முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள் மற்றும் தோலின் சுருக்கங்களைக் குறைப்பதற்கு உதவுகின்றது.

• ஊட்டச்சத்து நிறைந்தது:

உடலின் சீரான இயக்கத்திற்கு அவசியமான பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் கொண்ட சிறுதானியங்களில் இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிப்பதற்கும் இரத்தசோகையைக் (Anemia) குணப்படுத்துவதற்கும் அவசியமான ,இரும்புச்சத்து எலும்புகளை வலுவடையச் செய்வதற்கு அவசியமான கல்சியம் மற்றும் செம்பு (காப்பர்) ஆகியனவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பாஸ்பரஸ் என்பனவும் காணப்படுவதுடன், இந்தத் தாதுக்கள் பலதரப்பட்ட தாவர ஊட்டச்சத்துடன் சேரும் போது சகலவிதமான நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கும் எதிராக ஒரு வல்லமை மிக்கப் பாதுகாப்பை உடலில் ஏற்படுத்துகின்றன.

• உடலின் ஈரப்பத்த்தினை அதிரிக்கிறது:

சிறுதானியங்களை அதிக அளவில் சாப்பிடுவதன் மூலம் இயற்கையான ஈரப்பத்தினைத் தக்க வைத்துக் கொள்ள முடிவதுடன், மந்தமான தோற்றம் மற்றும் வறண்ட சருமத்தினை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் மாற்றிக் கொள்ள முடியும்.

• கரோனரி தமனி கோளாறுகளைத் தடுக்கின்றது:

சிறுதானியங்களை அதிகளவில் உட்கொள்ளும் போது உடலில் உள்ளை டிரைகிளிசரைடுகளின் அளவானது குறைக்கப்படுவதுடன், இரத்தத் தட்டை அணுக்கள் தடிமன் ஏற்படுவதனைத் தடுத்து இரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்துக் கொள்ள உதவுவதன் மூலம் வாதம் மற்றும் கரோனரி தமனி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்படுகின்றன.

• இளமையான சருமம் பெறுதல்:

அதிக அளவு சிறுதானியங்களை உட்கொள்வதன் மூலம் சேதமடைந்த செல்களைப் புதுப்பிக்கவும், மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளவும், புதுப்பிக்கப்பட்ட செல்களை மேலும் பலப்படுத்தவும், இளமையுடனும் மிருதுவான தோற்றத்துடனும் விளங்கச் செய்யவும் முடியும்.

• அதிகளவான வைட்டமின் ‘பி’:

சிறுதானியங்களில் உள்ள வைட்டமின் ‘பி’ கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பினைத் உடைத்து அதனை சக்தியாக மாற்றுகின்றதுடன் இரத்தத்தில் உள்ள ஹோமோசைஸ்டீன் (Homocysteine) அளவினை குறைப்பதன் மூலம் கொழுப்புகள் ஒன்றோடொன்று சேர்ந்து கொழுப்புக் கட்டியாக மாறுவதும், கொழுப்புகள் உடலிலேயே தங்குவதனையும் தடுத்து நியாசின் இரத்த ஓட்டத்தின் போது கொழுப்பு எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கிறது. மேலும் நல்ல கொழுப்பு எனப்படும் உயரடர்த்தி லிப்போ புரதக் கொழுப்பின் (Low-density lipoprotein) அளவினை இரத்தத்தில் அதிகரிக்கச் செய்கின்ற அதேவேளை இரத்த நாளங்களின் தடிப்பு (Atherosclerosis) மற்றும் இரத்தக் கசிவு (Hemorrhage) ஏற்படுவதிலிருந்தும் இதயத்தைப் பாதுகாக்கிறது.

• நிறத்தைனை அதிகரிக்கிறது:

சிறுதானியங்களில் உள்ள வைட்டமின்-ஈ தோலின் அடுக்குகளில் ஊடுருவிச் சென்று இயற்கையாகவே காயத்திற்கான சிகிச்சை (Wound healing) தன்மைய அதிகரிக்கின்றதுடன், தோலிற்கு ஒரு பாதுகாப்பான அடுக்கினை ஏற்படுத்தி நுண்ணுயிரிகளின் அபாயத்திலிருந்து காயத்தினைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றதுடன், தோலின் நிறத்தையும் அதிகரிக்க உதவுகின்றது.

• பசையம் (குளுட்டன்) அறவே இல்லை:

தினசரி கார்போஹைட்ரேட் மூலம் தேவைப்படும் புரதச்சத்தின் அளவு இறைச்சி உணவுகளைவிட சிறுதானியங்களில் அதிகளவில் கிடைக்கிறதனால் அவை காய்கறிகளை மட்டும் விரும்பி உண்ணும் சைவப் பிரியர்களால் மிகவும் நேசிக்கப்படுகின்றது. ஏனெனில் இறைச்சி உணவுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பிற ஆரோக்கியமற்ற பொருட்கள் போன்ற தேவையற்ற மேலதிக பொருட்கள் சிறுதானியங்களில் இல்லாதிருப்பதுடன், அவற்றிலுள்ள் புரதக் கூட்டமைப்பு கோதுமையில் உள்ளது போலவே காணப்படுகின்ற அதேவேளை அதிகச் சத்துக்கள் அடங்கிய சிறுதானியங்களில் பசையம் (குளுட்டன் Gluten)) எனப்படும் ஒட்டும் தன்மை கொண்ட பசை போன்ற பொருள் காணப்படுவது இல்லை. பொதுவாக முழுக் கோதுமையில் அதிகளவான பசையம் காணப்படுகின்ற அதேவேளை சிறுதானியங்களில் அந்தளவிற்கு காணப்படாது விரைவான சமிபாட்டிற்கு வழிவகுக்கின்றது.

• சூரியன் மூலம் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது:

சிறுதானியங்களில் உள்ள செலினியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின்-பி போன்றவை சூரியனால் தோலில் ஏற்படும் சேதம், தோலின் நிறம் மந்தமடைதல், தோலினை உயிரற்றதாக மாற்றுதல் மற்றும் தோல் புற்றுநோய்க்கு எதிராகச் சருமத்தைப் பாதுகாக்கிறதுடன், இவற்றிலுள்ள சத்துக்கள் புதிய செல்கள் வளர்வதனை ஊக்குவித்து தோலினை இளமையாகவும், பொலிவுடனும் தோற்றமளிக்க உதவும் அதேவேளை இந்தச் சத்துக்கள் சூரிய ஒளியுடன் தொடர்புடைய தோலின் நிறமாற்றம் மற்றும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கவும் பயன்படுகின்றது.

• விரைவான உடல் எடை இழப்பு:

சிறுதானியங்களில் டிரிப்டோபான் (Tryptophan) எனப்படும் அமினோ அமிலம் காணப்படுவதனால் பசியின்மையைக் குறைத்து சரியான எடையை நிர்வகிக்க உதவுவதுடன், மெதுவான வேகத்திலான உணவு சமிபாட்டின் மூலம்; நீண்ட நேரத்திற்கு வயிற்றினை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், சிறுதானியங்களில் மிகதியாக உள்ள நார்ச்சத்துக்கள் அடிக்கடி பசிப்பதனைத் தடுத்து அதிகமாக உண்பதையும் தடுக்கின்றதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் ஒரு வேளை வீதம் தங்களின் முக்கிய உணவில் ஒன்றாகச் சிறுதானியங்களைச் சேர்த்துக் கொள்ளுவது மிகச் சிறந்த பலனைத் தரும்.

• வடுக்களைக் குறைக்கிறது:

திசுக்களில் ஏற்படும் வடுக்கள் ஆரோக்கியமான சருமத்தைவிட வித்தியாசமான செல் அமைப்பினைக் அதாவது கடினத்தன்மையுடன் காணப்படும் போது சிறுதானியங்களில் காணப்படும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளில் ஒன்றான ஆலியம் (Alium) இவ்வடுக்கள் நிறைந்த திசுக்களில் இரத்த ஓட்டத்தினை அதிகரித்து புதிய தோல்வளர்ச்சியில் கலந்து வடுக்கள் குறைவதற்குப் பயன்படுகிறதுடன் தோல் பரமரிப்பு அல்லது தோல் பழுது பார்க்கும் (Skin Repair) அமைப்பின் வேகத்தை அதிகரித்து தோலில் அமைப்பினை சேதமடைவதிலிருந்து பாதுகாக்கின்றது.

• க்கோலான் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது:

சிறுதானியங்களில் உள்ள நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் ஆகிய இரண்டும் சேர்ந்து க்கோலான் புற்றுநோய் (Colon cancer) உருவாகும் அபாயத்தைக் குறைப்பதுடன் லிக்னைன் (Lignan) எனப்படும் சிறு தானியங்களிலுள்ள தாவர ஊட்டச்சத்தானது பாலூட்டிகளின் குடலிலுள்ள லிக்னைனாக மாற்றி மார்பகப் புற்று நோயிலிருந்து பாதுகாக்க உதவுகின்றது.

• உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைத்தல்:

சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியமானது தமனிகளிலுள்ள உட்சுவரினை தளர்த்தி உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதனைக் குறைப்பதுடன் மூச்சுத்தடை நோய் (ஆஸ்த்துமா) மற்றும் ஒற்றைத் தலைவலிகள் என்பன ஏற்படுவதனைக் குறைக்கின்றது.

• விரைவில் முதுமையடைவதைத் தடுக்கிறது:

சிறுதானியங்களில் அதிகளவில் காணப்படுகின்ற உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள்; (Antioxidants) மன அழுத்தத்தை எதிர்த்துப் போரடுவதுடன், உடலிலுள்ள தேவையற்ற தீவிரமானவற்றை நடுநிலையாக பேணி, தோலின் மீது தென்படும் முதுமையடைவதற்கான அறிகுறிகளைத் தலைகீழாக மாற்றி, சரும செல்களுக்குப் புத்துயிர் அளிப்பதன் மூலம் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றது. இவ்வாறாக சிறுதானியங்களிலுள்ள யூபிகயிணோன் (Ubiquinone) முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைப்பதற்காக அழுகுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகன்றது.

• பசையம் ஒவ்வாமை நோயைத் (செலியாக் நோய்) தடுத்தல்:

சிறுகுடலைச் சேதப்படுத்தும் ஒரு வகையான நோயான பசையம் ஒவ்வாமை நோயின் போது (Celiac disease) சிறுகுடல் பாதிக்கப்பட்டு உணவில் இருந்து ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுவதனால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களினால் பசையம் (குளூட்டன்) போன்ற பசைத்தன்மைக் கொண்ட பொருளைத் தாங்கிக் கொள்ள முடியாது போவதனால் சிறுதானியங்களை உட்கொள்ள அதிகளவில் உட்கொள்ளுமாறு பரிந்துரை செய்யப்படுகின்றது. சிறுதானியங்களில் முற்றிலுமாகப் பசையம் (குளுட்டன்) என்ற பசையம் காணப்படாததனால் சிறுதானியங்களை ஆரம்பத்திலிருந்தே சாப்பிட்டு வருவதன் மூலம் இந்நோயிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

• நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது:

சிறுதானியங்களிலுள்ள குறைந்தளவான கிளைசிமிக் குறியீடு காரணமாக சமிபாட்டு செயல்முறைகள் குறைந்த அளவில் அதுவும் மெதுவாக நடைபெறுவதன் மூலம் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவினை ஒரு நிலையான விகிதத்தில் வைத்துக் கொள்ள முடிவதுடன், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும், நீரிழிவு அல்லாத சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் குறிப்பாக வைகை-2 நீரிழிவு எனப்படும் நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்தவும் கேழ்வரகு உதவுகின்றது.

• தோலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கின்றது:

சிறுதானியங்களிலுள்ள ‘எல்…லைசின்’ அல்லது ‘எல்…புரோலைன்’ என்று அழைக்கப்படும் அமினோ அமிலங்கள் சருமத்தின் திசுக்களுக்கு ஒரு அமைப்பைக் கொடுக்கக் கூடிய வெண்புரத இணைப்புத்திசு (Collagen) உருவாக்கத்திற்கு உதவுகின்றதனால், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் கொலாஜென் அளவு அதிகரித்து சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை (Skin Elasticity) மேம்படுத்தி தோலில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்க முடியும்.

• நார்ச்சத்து நிறைந்தது:

நார்ச்சத்து மிகுந்துள்ள சிறுதானியங்கள் செரிமானத்தை எளிதாக்குதன் மூலம் மிகுந்த செரிமானத் தன்மை மற்றும் ஒவ்வாமை (Allergenic) இல்லாத தானியங்களாகக் கருதப்படுகிறதுடன், இவற்றின் மலமிளக்கி பண்புகள் (Laxatives) மலச்சிக்கலுக்குச் சிறந்த தீர்வாக அமைகின்றதுடன், இவற்றிலுள்ள லெசித்தின் மற்றும் மீத்தியோனின் என்பன கல்லீரலில் இருந்து உடலுக்குத் தீங்குகளை விளைவிக்கும் கொழுப்பினை வெளியேற்ற உதவுகின்றன.

மேலும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவினை குறிப்பாப் பெண்கள் உட்கொள்ளுவதன் மூலம் பித்தப்பையில் கற்கள் உருவாகுவதற்குக் காரணமான பித்த அமிலங்களின் சுரப்பைக் குறைக்கப்படுவதுடன் குடல்களில் உணவு செல்லும் காலத்தை எளிதில் கரையாத நார்ச்சத்து அதிகப்படுத்துகிறது. இவ்வாறாக நார்ச்சத்து அதிகமாகவுள்ள உணவினை உண்ணாதவர்களை கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்களை உண்பவர்களுடன் ஒப்பிடும் போது நார்ச்சத்து உண்பவர்களுக்கு 13 சதவீதம் பித்தப்பை கற்கள் உருவாவது குறைக்கப்படுவதாகப் பல ஆராய்ச்சிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

• உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளின் ஆதாராம் :

சிறுதானியங்களில் உள்ள அதிகளவிலான உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் (Antioxidants) உடலிலுள்ள தீவிரமான நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடுவதுடன் மிக விரைவில் வயதாதாவற்கான செயல்முறையின் வேகத்தைதையும் குறைக்கின்றதனாலேயே இவற்றை சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனவருக்கும் மருத்துவர்கள் மிகப்பெரும் மருந்தாகச் பரிந்துரைக்கின்றனர்.

• அதிக அளவு பாஸ்பரஸ்:

சிறுதானியங்களில் உடலில் உள்ள செல்களின் வடிவத்தைக் கட்டமைக்க உதவும் பாஸ்பரஸின் அளவு அதிகமாக உள்ளதுடன் இதிலுள்ள ‘அடினைன் டிரைபாஸ்ட்’ (Adenosine triphosphate – ATP) எனப்படும் கலவைகள் உடலின் ஆற்றலைப் பலமடங்காக அதிகரிப்பதுடன் உடலின் அத்தியாவசியமான லிப்பிடு (Lipid) கூட்டமிப்பினை குறிப்பாக உயிரணு சவ்வுகள் மற்றும் நரம்பு மண்டல அமைப்பு போன்றவற்றிற்கு மிகவும் அத்தியவசியமான ஒன்றாக காணப்படுகின்ற வகையில் ஒரு கோப்பை சிறுதானியங்களில் ஏதேனும் ஒன்றை உட்கொள்ளும் போது ஒரு நாளைக்கு அவசியமான பாஸ்பரஸின் அளவில் 17 சதவீதத்தினை பூர்த்தி செய்ய முடியும்.

• தசைகள் சீரழிவதைக் குறைக்கிறது:

அதிகளவிலான புரதச்சத்து மற்றும் அமினோ அமிலங்களில் ஒன்றான லைசினையும் கொண்டுள்ள சிறுதானியங்கள் தசை குறைபாட்டைக் குறைத்து வலிமையான தசைகள் உருவாகுவதற்கு உதவுகிறதனால் தசைகளுக்கு மிகவும் ஏற்ற உணவாக கருதப்படுகின்றது.

• மாதவிடாய் கால முதுகுவலிக்கு நிவாரணம்:

சிறுதானியங்களிலுள்ள உயர்ந்தளவான மெக்னீசியம் மாதவிடாய் சுழற்சியின்போது பெண்களுக்கு ஏற்படும் தாங்க முடியாத வலி மற்றும் முதுகுவலியினை வராமல் தடுக்கிறதனால் சிறுதானியங்கள் மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்குச் மிகச்சிறந்த உணவாகக் கருதப்படுகின்றது.

• தூக்கக் குறைபாட்டினைக் குறைக்கிறது:

சிறுதானியங்களிலுள்ள டிரிப்டோபேன் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு அவசியமான செரோபோனின் அளவினைக் கூட்டுவதனால் தூக்கமின்மையால் அல்லல் படுபவர்கள் தினமும் இரவும் ஒரு குவளை சிறுதானியங்களால் செய்யப்படும் கஞ்சியினைக் குடித்து வருவதன் மூலம் ஒலியற்ற மற்றும் அமைதியான தூக்கத்தினைப் பெற முடியும்.

• மார்பகப் பால் உற்பத்தி அல்லது தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கிறது:

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தங்கள் உணவில் சிறுதானியங்களில் ஒன்றான கேழ்வரகை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளும் போது கேழ்வரகு உடலின் மார்பகப் பால் உற்பத்தியை அதிகரிப்பதுடன், தாய் தன் குழந்தைக்கு நீண்ட காலம் உணவளிக்க உதவும்.

• கீழ்வாதம் எலும்பு முறிவிலிருந்து மீள உதவுகிறது:

சிறுதானியங்களில் ஒன்றான கேழ்வரகினை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது கீழ்வாதம் (Rheumatism) வருவது தடுக்கப்படுவதுடன், எலும்பு முறிவிலிருந்து மிக விரைவில் மீள முடியும்.

சிறுதானியங்களால் கூந்தலுக்குக் கிடைக்கும் பயன்கள்:

• மயிர்க்கால்களை வலிமையாக்குகிறது:

பெரும்பாலான முடிகள் புரதத்தினாலேயே செய்யப்படுகின்றதனால், ஆரோக்கியமான மற்றும் வலிமையான முடிகளுக்குப் போதுமான அளவுப் புரதம் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது என்ற வகையில் முடி இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளில் முதன்மையானவையாக புரத்ச்சத்து நிறைந்துள்ள சிறுதானியங்கள் காணப்படுகின்றன. முடி செல்களின் உள்புறம் காணப்படும் கெரடின் என்ற புரதம் ஒவ்வொரு முடியின் கலவைக்கும் நேரடிப் பொருப்பாக காணப்படுகின்றது. இவ்வாறாக புரதத்தின் பற்றாக்குறை அல்லது புரதம் இல்லாத காரணத்தினால் கடுமையான முடி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதனால் சிறுதானியங்களைப் போதுமான அளவில் உட்கொண்டு; வேகமான முடி வளர்ச்சியினையும் வலுவான உடைந்து போகும் தன்மையினையும் குறைந்த முடியினையும் பெறமுடியும்.

• இளநரையைத் தடுக்கிறது:

திசுக்களில் ஏற்படும் ஆக்ஸினனேற்றம் மூலம் இளம் வயதிலேயே முடி நரைத்தல் அல்லது செம்பட்டையாக மாறுதல் மற்றும் திசுக்களில் ஏற்படும் அரிப்பு என்பவற்றினை சிறுதானியங்களில் உள்ள சக்தி வாய்ந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் (Antioxidants) தடுப்பதுடன் விரைவில் முதிர்ச்சி அடைந்து முடிகள் நரைப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்படுகின்றது.

• உச்சந்தலையில் ஏற்படும் வீக்கம் அரிப்பு மற்றும் வழுக்கை ஏற்படுவதைத் தடுகிறது:

சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் உச்சந்தலையின் வீக்கத்தினைக் குறைப்பதன் மூலம் உச்சந்தலையின் நிலைகளான அக்ஸிமா, தடிப்பு தோல் அழற்சி (Psoriasis);> பொடுகு (Dandruff) மற்றும் முன்கூட்டியே வழுக்கை ஏற்படுதல் போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகின்றதுடன், இவற்றைத் தொடர்ந்து உண்பது வளர்சிதை மாற்ற நோய்த்தாக்கத்திலிருந்து விடுபடவும், உடல்நலக் குறைவின் காரணமாக இளம் வயதிலேயே வழுக்கை ஏற்படுவதனையும் தடுக்கும்.

• முடி உதிர்வதைக் கட்டுப்படுத்துகிறது:

சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் உடலில் உள்ள கார்டிசோலின் அளவைக் குறைப்பதன் மூலம் மன அழுத்தம் காரணமாக உடலில் கார்டிசோல் (Cortisol) அளவு அதிகரித்து முடி அதிக அளவில் உதிர்வது கட்டுப்படுத்தப்படுகின்றது.

• முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது:

சிறுதானியங்கள் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தினை மேம்படுத்தி முடி வளர்ச்சியினை ஊக்குவிக்கின்றது.

எமது தழிழர்களால் பயன்படுத்தப்படும் சில வகை
சிறுதானியங்களும் அவற்றின் பயன்களும்

சிறுதானியங்களின் பெயர்கள் ( Millet ) இவைகளில் உள்ள சத்துபொருட்கள், மருத்துவ பயன்கள், இவற்றில் செய்ய கூடிய உணவு வகைகள்.

தினை / foxtail millet / Thinai Arisi திணை அரிசி

தினை
தினை

தினையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்

புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து,
சுண்ணாம்புச்சத்து

தினையின் மருத்துவ பயன்கள்

இதயத்தை பலப்படுத்தவும், கண்பார்வை சிறப்பாக இருக்கவும் உறுதுணையாக இருக்கும். தாய்ப்பால் நன்கு சுரக்க உதவும்.

தினையில் செய்யப்படும் உணவுகள்

இட்லி, அல்வா, காரப் பணியாரம், பாயசம், அதிரசம் ஆகியவற்றை செய்து சாப்பிடலாம்.

கேழ்வரகு, ராகி, குரக்கன் /finger millet / kelvaragu

கேழ்வரகு
கேழ்வரகு

கேழ்வரகில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்

சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, வைட்டமின் பி அதிக அளவில் உள்ளன.

கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

எலும்புத் தேய்மானம், ரத்தசோகை, இதய நோய், மலச்சிக்கல், சர்க்கரைநோய், உடல் உஷ்ணம் நீங்கும்; உடல் வலிமை பெறும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. அஜீரணக் கோளாறுகள் நீங்கும்; குடற்புண்கள் குணமாகும்; பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும். கர்ப்பிணிப் பெண்கள் தினமுமே சாப்பிட்டுவரலாம்.

கேழ்வரகில் செய்யப்படும் உணவுகள்

கூழ் செய்து பச்சிளம் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
இதில், இட்லி, தோசை, கொழுக்கட்டை, இடியாப்பம், அடை, இனிப்பு வகைகள் என
பலவற்றைச் செய்யலாம்

சாமை /little millet / samai rice

சாமை
சாமை

சாமையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்

நார்ச்சத்து, தாதுஉப்புகள் இரும்புச்சத்து.

சாமையின் மருத்துவ பயன்கள்

ரத்தசோகையை நீக்க உதவும். மலச்சிக்கலைப்போக்கும். வயிறு தொடர்பான
பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைத் தரும்.

சாமையில் செய்யப்படும் உணவுகள்

இட்லி, மிளகுப் பொங்கல் (வெண்பொங்கல்), இடியாப்பம், காய்கறி பிரியாணி

குதிரைவாலி /barnyard / Echinochloa frumentacea /  புல்லுச்சாமை /
kuthirai vaali

குதிரைவாலி
குதிரைவாலி

குதிரைவாலியில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்

இரும்புச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளன. புரதச்சத்தும்
உயிர்ச்சத்தும் கூட அதிகமாக இருக்கின்றன.

குதிரைவாலியின் மருத்துவ பயன்கள்

இதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களைத் தவிர்க்க உதவும். செல்களைப் பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகச் செயல்படும் தன்மை இதற்கு உண்டு. வாயுக்கோளாறுகளைத் தீர்க்கும். இடுப்புவலி, வயிற்றுக் கடுப்பு, காய்ச்சல் குறைக்கும்.

குதிரைவாலியில் செய்யப்படும் உணவுகள்

குதிரைவாலி களி, குதிரைவாலி கஞ்சி சிறந்த உணவாக இருக்கும்.

வரகு / kodo millet வரகு அரிசி / Varagu Rice / Varagu arisi

வரகு
வரகு

வரகில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்

புரதம், தாது உப்புகளைக் கொண்டது. இதில், பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ்,
காப்பர், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி அனைத்தும் நிறைந்துள்ளன.

வரகின் மருத்துவ பயன்கள்

சிறுநீர்ப் பெருக்கி; மலச்சிக்கலை போக்கும்; உடல்பருமனைக் குறைக்கும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யவும் உதவும்.
கல்லீரலைச் சீராக்கும், நரம்பு மண்டலத்தையும், எலும்புகளையும் பலப்படுத்தும்.

வரகில் செய்யப்படும் உணவுகள்

புட்டு, வெண்பொங்கல், கார பணியாரம், இட்லி, புளியோதரை, உப்புமா என
விதவிதமாகச் செய்ய முடியும்.

கம்பு/ pearl millet / கம்பு அரிசி / Kambu Rice / Kambu Arisi

கம்பு
கம்பு

கம்பில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்

வைட்டமின்கள் நிறைந்தது

கம்பின் மருத்துவ பயன்கள்

உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; சோர்வை நீக்கி, புத்துணர்வு தரும்; அஜீரணக்
கோளாறுகளைச் சரிசெய்யும். வயிற்றுப் புண் வராமல் தவிர்க்கும். வளரும் குழந்தைகளுக்கும் பூப்பெய்திய பெண்களுக்கும் ஏற்றது.

கம்பில் செய்யப்படும் உணவுகள்

கம்பங் கூழ்,சப்பாத்தி, கம்பு கழி, கம்பு சாதம்

சோளம்/ sorghum millet / Solam

சோளம்
சோளம்

சோளத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்

நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்த

சோளத்தின் மருத்துவ பயன்கள்

உடல் எடை அதிகரிக்க உதவும். ஆஸ்டியோபொரோசிஸ் பாதிக்கப்பட்ட
பெண்களுக்கு சோளத்தில் செய்த உணவுகள் சிறந்தவை. தோல் தொடர்பான நோய்கள், சொரியாசிஸ்.

சோளத்தில் செய்யப்படும் உணவுகள்

தோசை, பணியாரம் தயாரிக்கலாம ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சோளம்
ஏற்றதல்ல. சர்க்கரைநோய் உள்ளவர்கள், செரிமானக் கோளாறு பிரச்னை
இருப்பவர்கள், ரத்தசோகை இருப்பவர்களுக்கு சோளம் சிறந்தது. சிறுநீரைப்
பெருக்கும்; உடலில் உள்ள உப்பைக் கரைக்கும். இதில் உள்ள பீட்டாகரோட்டின் கண் குறைபாடுகளை சரிசெய்ய உதவும்.

நெல், கோதுமை மற்றும் சிறுதானியங்களின் ஊட்டச்சத்துக்கள் கட்டமைப்பு அட்டவணை (100 கிராம்)

நெல், கோதுமை மற்றும் சிறுதானியங்களின் ஊட்டச்சத்துக்கள் கட்டமைப்பு அட்டவணை (100 கிராம்)

தினை பயன்கள் (Thinai Benefits In Tamil)

கம்பு பயன்கள் (Kambu Benefits in Tamil)

ராகி/குரக்கன்/கேழ்வரகு பயன்கள் (Ragi Benefits in Tamil)

சாமை பயன்கள் ( Samai Benefits In Tamil)

Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

Article By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleWalnut Benefits in Tamil Walnut payangal வால்நட் பயன்கள் Walnut maruthuva payangal வால்நட் மருத்துவ பயன்கள் Akhrot Benefits அக்ரூட் பயன்கள் Walnut வால்நட்ஸ்
Next articleசரும நோய்கள், வெண்படலம், மலச்சிக்கல், வீக்கங்கள், பால் சுரப்பு என்பவற்றுக்கு சிறந்த நிவாரணி இலுப்பை ! இலுப்பை மரத்தின் மருத்துவப் பயன்கள்!