Walnut Benefits in Tamil Walnut payangal வால்நட் பயன்கள் Walnut maruthuva payangal வால்நட் மருத்துவ பயன்கள் Akhrot Benefits அக்ரூட் பயன்கள் Walnut வால்நட்ஸ்

0

Walnut Benefits in Tamil Walnut payangal வால்நட் பயன்கள் Walnut maruthuva payangal வால்நட் மருத்துவ பயன்கள் Akhrot Benefits அக்ரூட் பயன்கள் Walnut வால்நட்ஸ், Walnut Health Benefits, Walnut Health Benefits in Tamil, வாதுமை கொட்டை ஆரோக்கிய நன்மைகள், வால்நட் விலை, வால்நட் தமிழ் பெயர், Walnut Nutrition, Walnut Price, Akhrot Benefits in Tamil, Akhrot Payangal.

Walnut Benefits in Tamil

Walnut Benefits in Tamil தேவையற்ற கொழுப்பை கரைக்கும் வால்நட்

வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடலுள்ள தேவையற்ற கொழுப்பை இலகுவாக கரைத்து இதயநோய்கள் ஏற்படுவதனைத் தடுக்கின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடலிலுள்ள கொழுப்பின் அளவானது தேவையான அளவினை விட அதிகரிக்கும் போது அது மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட இதய பாதிப்புகளினை ஏற்படுத்தும் என்பதும், உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்பதும் யாவரும் அறிந்த ஒன்றாகும்.

அக்ரூட் பருப்பு (10) மற்றும் வேர்க்கடலை (10) இரண்டையும் இரவில் தண்ணீரில் ஊறவைத்து, அதிகாலையில் பருப்புகளை மட்டும் சாப்பிட்டு வரும்போது விந்து உற்பத்தி அதிகரிக்கும். இதனைவிட, உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பினைக் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

அக்ரூட் பருப்பு பயன்கள்

நரம்புத் தளர்ச்சி, கை கால் நடுக்கம் போன்ற வியாதிகளுக்கு அக்ரூட் பருப்பு மற்றும் சாரப் பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் தூளாக்கி, சூடான பாலில் கலந்து குடித்து வருதல் நல்ல பலனைத் தரும்.

பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உடலில் கொழுப்பு அதிகம் உள்ள ஆண், பெண் ஏராளமானோரை வயது வேறுபாடின்றி தெரிவு செய்து, முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணித்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மூல வேதனை மற்றும் வலி தீருவதற்கு அக்ரூட் விதையினை மலவாசலில் சிறிது நேரம் சொருகி வைத்துக் கொள்தல் போதுமானதாகும்.

பாலிபெனால் எனும் ஆன்டி ஆக்சிடன்ட் மிகையாக உள்ளதனால் முந்திரி, பாதாம் போன்ற சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது.

இவை உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை இலகுவாக கரைக்க வல்லது என்பதுடன் எமது உடலை நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

மலப்புழுக்களை கொல்வதற்கு அக்ரூட் எண்ணெய்யை தினமும் 5 மில்லி அளவுக்கு உட்கொண்டு வருதல் நல்லது.

இதய நோயாகிய மாரடைப்பு பற்றிய பயம் காரணமாக் கடுங்குளிரிலும் காலை நேர, நடைப்பயிற்சிக்குப் பலர் அவசரம் அவசரமாக ஓடுகின்றனர். தொடர்சியாக ஆறுமாதங்கள் தினமும் 28 கிராம் முதல் 85 கிராம் அளவு வரை வால்நட் பருப்பு சாப்பிட்டு வருவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரலில் பத்து புள்ளி வரை குறைவடைவதுடன், இதயம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் குணமாக்கி, இப்பயத்தினை ஆறுமாதங்களில் முற்றிலும் நீக்கிவிட முடியும்.

வாதுமை கொட்டை ஆரோக்கிய நன்மைகள்

அதுசரி, வால்நட் அதிகம் சாப்பிட்டால் கலோரி அதிகமாகுமே! இதனால் உடல் எடை அதிகரிக்காதா? என்ற சந்தேகம் பலரிடம் உண்டு. இப்பருப்பில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகளும், இரத்தத்தில் உறையாத கொழுப்பும் உள்ளதனால், நீங்கள் அதிகளவான கலோரி உடைய ஏனைய உணவுகளைப் தவிர்த்து விட்டு எந்தவித தயக்கமும் இன்றி வால்நட்டைச் சாப்பிட்டு வரலாம்.

தோல் சார்பான அனைத்து விதமான வியாதிகளிலிருந்தும் முழுமையாக விடுதலை பெறுவதற்கு அக்ரூட் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு, உளுந்து மற்றும் பாதாம் பருப்பு ஆகிய அனைத்திலும் சம அளவு எடுத்து அரைத்து, அப்பொடியில் ஐந்து கிராம் அளவினை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளையும்; சாப்பிட்டு வருதல் வேண்டும்.

வால்நட் பருப்பிலுள்ள சுருண்ட மடிப்புகள் மனித மூளையைப் போல் தோற்றமளிப்பது சிறப்பம்சமாகும். இது வயோதிப நிலையில் ஏற்படும் மறதி, நினைவற்றல் இழப்பு, மனத் தளர்ச்சி என்ற அழைக்கப்படும் டெமென்சியா நோயைத் தவிர்க்க உதவுகின்றதுடன், அல்செமியர்ஸ் நோயுடன் தொடர்புடைய இரத்த உறைவுக் கட்டிகளை கரைக்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

அக்ரூட் பருப்பு மருத்துவம்

உடல் உறுதி அதாவது வலிமை பெறுவதற்கு அக்ரூட் பருப்பு மற்றும் பேரீச்சம்பழம் இரண்டினையும் சம அளவு எடுத்து நன்றாக நசித்து தேனில் ஊற வைக்து; தினமும் பத்து கிராம் அளவு உட்கொண்டு வருதல் நல்ல பலனைத் தரும்.

பொதுவாக தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறுவார்கள்;. அதேபோல தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட் சாப்பிட்டால் படுக்கை அறையில் தம்பதிகளிடையே உறவு உற்சாகமாக கரை புரண்டு ஓடுமாம் என்று கூறுவார்கள் அனுபவசாலிகள். மேலும் அமெரிக்காவில் இடம்பெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி, வால்நட்டில் உயர்தர ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுவதனால் அது ஆண்களின் உற்சாகத்தையும், விந்தணுவையும் அதிகரித்து வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை பெருகும் என்று தெரியவந்துள்ளது.

ஆண்மை குறைபாடு நீக்கும் வால்நட்

ஆண்மை குறைபாட்டினால் படுக்கை அறையில் சரியாக செயல்பட முடியாமல் இருந்த 21 வயது முதல் 30 வயது வரை உடைய ஆண்கள் தெரிவு செய்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், தினசரி 75 கிராம் அளவுள்ள வால்நட் அவர்களுக்கு உண்ணக் கொடுக்கப்பட்டு, ஏறத்தாள ஒரு மாதத்திற்குப் பினனர்; அவர்களின் விந்தணுவை பரிசோதனை செய்தபோது குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது தெரியவந்ததுடன், அவர்களின் உற்சாகமும், ஆண்மையும் அதிகரித்து இருந்தது குறிப்பிடதக்கது.

நட்ஸ் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குவது மட்டுமன்றி, அதனை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை பூசி சருமத்தை பராமரித்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக பட்டுப் போன்று மின்னும்;. இதுவரை நட்ஸில் பாதாம் எண்ணெயை வைத்து மட்டும் தான் சருமத்தை பராமரிப்பது பற்றி அறிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அந்த நட்ஸில் ஒன்றான வால்நட்டை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இத்தகைய எண்ணெயில் வைட்டமின், புரோட்டீன் போன்றவை அதிகளவில் காணப்படுவதனால்;, அது சருமத்தில் ஒரு பெரிய அதிசயத்தை உண்டாக்குவதுடன், இதிலுள்ள நார்ச்சத்து, ஒமேகா-3 போன்ற சத்துக்கள் இந்த எண்ணெயிலிருந்து ஒரு நல்ல பலனை நிச்சயம் வழங்குகின்றது. அத்தகைய பலன்கள் பற்றி நோக்கின்!!!

சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, இளமையான தோற்றத்தைப் பெறுவதற்கு வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வருதல் வேண்டும்.

சருமத்தில் ஏதேனும் பூஞ்சைகள் தாக்கி, அதனால் தொற்றுநோய்கள் ஏற்பட்டிருந்தால், வால்நட் எண்ணெயை ஏதேனும் மூலிகை எண்ணெயையுடன் சேர்த்து கலந்து, சருமத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி வந்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும். அதாவது, சருமத்தில் தடிப்புகளுடன், சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று இருந்தால், அவற்றை நீக்குவதற்கு வால்நட் எண்ணெயைப் பயன்படுத்தலாம். மேலும், இந்த எண்ணெயை குளிக்கும் நீரில் சிறிது சேர்த்து இந்நீரில் குளித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் எரிவு அல்லது அழற்சி நீங்கும்.

இதய நோய், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் அழற்சி குறைபாடுகளான சொறி, படை, சிரங்கு போன்றவற்றை குணமாக்க கூடிய ஒமேகா-3 வால்நட் எண்ணெயில் உள்ளது.

வால்நட் நியூட்ரி பால்ஸ்

தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்

பாதாம் பருப்பு 10

வால்நட் 10

முந்திரிபருப்பு 10

பிஸ்தா பருப்பு 10

கறுப்பு எள் 1 மேசைக் கரண்டி

உலர்ந்த திராட்சை 10

தேன் 1 மேசைக் கரண்டி

நெய் 1 மேசைக் கரண்டி

வெல்லம் 1 கப் (தூளாக்கியது)

செய்முறை

முதலில், ஓட்ஸை நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். பின்னர், பாதாம் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் வால்நட், முந்திரி பருப்பு மற்றும் பிஸ்தா நான்கையும் சேர்த்து ரவை போல உடைத்துக்கொள்ளவும். பின்னர், கறுப்பு எள்ளை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். பின்னர், உலர்ந்த திரட்சையை நெய்யில் பொரித்துக் கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீருடன் வெல்லத்தை சேர்த்து கொதிக்கவிடவும்.

இவ்வாறு கம்பி பாகு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். தொடர்ந்து, ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடியாக்கப்பட்ட ஓட்ஸ், ரவை போல் உடைத்த நட்ஸ் கலவை, வறுத்த எள், பொரித்த திராட்சை, தேன் மற்றும் நெய் என்பன சேர்த்து அதனுடன் கம்பிபாகு வெல்லத்தை ஊற்றவும். பின்னர், அதனை நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.

இது ஒரு சத்து மிக்க குழந்தைகள் விரும்பி உண்ணும் மாலை நேர சிற்றுண்டி ஆகும்;

அக்ரூட்டிலுள்ள அமிலம், எலும்பை பலப்படுத்த உதவுகிறதுடன், போலிக் அமிலம், ரிபோபிளேவின், தையாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் சத்துகள் அக்ரூட்டில் அதிகமாக இருப்பதனால் இதனை கர்ப்பிணிகள் உணவில் அதிகமாக சேர்த்துகொள்வது சிறந்த பலனைத் தரும்.

வால்நட் முந்திரி பர்ஃபி

தேவையானவை:

வால்நட் பருப்பு – ஒரு கப்,

முந்திரி – கால் கப்,

ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி,

சர்க்கரை – ஒன்றரை கப்,

நெய் – அரை கப்.

செய்முறை:

முதலில் வால்நட்டின் ஓட்டை உடைத்து தோலை நீக்கிக் கொள்ளவும். பின்னர், கடாயில் கால் தேக்கரண்டி நெய் விட்டு வால்நட் மற்றும் முந்திரிப் பருப்புகளை வறுத்துக் கொள்ளவும். பின்னர், மிக்ஸியை குறைந்தளவான வேகத்தில் இயக்கி, பருப்புகளை தூளாக்கிக் கொள்ளவும். பின்னர், சர்க்கரையில் அரை கப் அளவான தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, கம்பிப் பதத்துக்கு வந்ததும் அதனுடன் பொடித்த பருப்புகளை சேர்த்து நன்கு கிளறவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து நெய் சேர்த்துக் நன்கு கிளறி, கடாயில் ஒட்டாமல் நுரைத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பின்னர், நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி, விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். இது மிகவும் குறைந்தளவான நேரத்தில், இலகுவாக தயரிக்கக்; கூடிய சுவையான இனிப்புப் பண்டமாகும்.

வால்நட் – முந்திரி பர்ஃபி: இதனுடன் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து செய்தால் கூடுதலான சுவையினைப் பெற முடியும்.

இதில் வைட்டமின் பி7 என்ற பயோடின் உள்ளதால் முடி உதிர்வதைத் தடுத்து, முடி வளர்ச்சிக்கும், உறுதித் தன்மைக்கும் உதவுகிறதுடன், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைக் குறைத்து முதுமையைத் தாமதப்படுத்துகின்றது. சிறப்பாக, ஆண்களுக்கு உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ஆயட்காலத்தை நீடிக்கும் தன்மையுடையது.

வால்நட், பாதாம் பாயாசம்

வால்நட் : 25 கிராம்

பாதாம் : 10 துண்டுகள்

சர்க்கரை : 100 கிராம்

நெய்இ ஏலம் : சிறிது

முதலில் வால்நட் பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். பின்னர் அக்கலவையுடன் சிறிது தண்ணீர் கலந்து அடுப்பில் வைத்து இரண்டு கொதி கொதித்தவுடன்; அதில் சர்க்கரையைப் போடவும். இது நன்கு கரைந்து வந்தவுடன் நெய், ஏலப்பொடி போட்டு கலக்கி இறக்கவும். சுவையான வால்நட், பாதாம் பாயாசம் ரெடி.

Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan 24-01-2020 இன்றைய ராசி பலன் 24.01.2020 இன்றைய பஞ்சாங்கம் வெள்ளிக்கிழமை Today Calendar 24/01/2020 Friday
Next articleMillet Benefits in Tamil Siruthaniyam Payangal Cereals Benefits in Tamil சிறுதானிய பயன்கள் சிறுதானிய வகைகள் Siruthaniyangal சிறுதானிய அரிசி Millet Vagaigal