குரு பெயர்ச்சி பலன் மிதுனம் 2020 – 2021 guru peyarchi palangal mithunam rasi 2021

0

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

தீர்க்கமான சிந்தனை, சிறப்பான அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் கொண்ட மிதுனராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7, 10-க்கு அதிபதியான பொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய குரு பகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முதல் 20-11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 15-11-2020 முதல் 13-11-2021 வரை) அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது சாதமற்ற அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் உண்டாகும். சனியும் 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமான பலனை பெறுவீர்கள். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. 6-ல் கேது சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிக்கும் யோகம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அதன் மூலம் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் சூழ்நிலை ஏற்படும். கணவன்- மனைவி இடையே ஒருவருக்கு ஒருவர் புரிந்து நடந்து கொண்டால் எதையும் எதிர் கொள்ள முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிப்பதால் இருக்கும் வாய்ப்புகனை தக்க வைத்து கொள்வது நல்லது. கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் அபிவிருத்தி குறைவதோடு பொருட்தேக்கம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். வேலை சுமையால் உடல்நிலை சோர்வடைந்து அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படுவதால் குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். குரு தனது சிறப்பு பார்வையாக 12, 2, 4 ஆம் வீடுகளை பார்ப்பதால் குடும்பத்தில் நல்லது நடக்கும் வாய்ப்பு, அசையும் அசையா சொத்து வழியில் சுப செலவுகள் ஏற்படும் வாய்ப்பு ஏற்படும்.

சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் தாமதமான நிலையே நிலவும். சிறு தடைக்கு பின்பு நல்லது நடக்கும். அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு உள்ள பொருளாதார நெருக்கடிகள் எல்லம் விலகி சகல விதத்திலும் மேன்மையான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும் வாய்ப்பு, கடன்களை குறைக்கும் சூழ்நிலை உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி பூர்வீக சொத்துகள் மூலம் ஆதாயம் ஏற்படும். உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நிலை எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் யோகம் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உங்களின் ஆரோக்கிய பாதிப்பால் உடல் சோர்வு, மந்தநிலை ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாவதால் மன அமைதி குறையும். நம்பியவர்களே துரோகம் செய்வதால் உங்கள் பலமும், வலிமையும் குறையும். மனைவிக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன், வீண் செலவுகள் உண்டாகும். உங்களது ஆரோக்கியம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சற்று சிறப்பாக இருக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் ஒற்றுமை ஒரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சாதகமாக இருப்பதால் ஏற்படும் மற்ற பிரச்சினைகளை தைரியத்துடன் எதிர் கொள்ள முடியும். உற்றார் உறவினர்களின் வருகையால் வீண் பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்கும். பணவரவுகளில் தடைகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே கடன் வாங்க நேரிடும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் ஏப்ரலுக்கு பின்பு நல்லது நடக்கும். புத்திர வழியில் மனசஞ்சலங்கள் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும் போது நிதானமாக செல்வது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் வீண் செலவுகள் ஏற்படும். எதிர்பார்க்கும் லாபங்கள் தடைப்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நீங்கள் செய்யும் எந்தவொரு காரியங்களிலும் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற இடையூறுகளையும், சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகளில் எந்தவொரு காரியங்களில் ஈடுபடும் போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த கடனுதவிகள் தாமதப்படுவதால் அபிவிருத்தி குறையக்கூடும். தற்போது இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்து கொண்டால் ஏப்ரலுக்கு பிறகு பொருளாதார மேன்மைகள் ஏற்படும். தொழிலாளர்களும் அனுகூலமாக அமைய மாட்டார்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் அலைச்சலை எதிர்கொள்ள நேரிடும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும். எவ்வளவு தான் பாடுபட்டாலும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை எடுக்க முடியாது. எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தாமதப்பட்டாலும் ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கும். நிலுவைத் தொகைகள் கைக்கு கிடைக்காமல் இழுபறி நிலையில் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியூரில் பணிபுரிய நேரிடும்.

பெண்கள்

குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் நிம்மதியற்ற நிலை ஏற்படும். எடுக்கும் காரியங்களில் இடையூறு உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர் கொள்ள முடியும். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். உடல்நிலையில் மாதவிடாய்க் கோளாறுகள், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தோன்றும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் ஏப்ரலுக்கு பிறகு சாதகமான பலன்கள் ஏற்படும்.

அரசியல்

அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்தால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெற முடியும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எதையும் முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலை நிலவும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் அலைச்சல் தாமத நிலை ஏற்படும் என்றாலும் பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் மன நிம்மதி ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். பட்ட பாட்டிற்கான பலனைப் பெறுவதில் இடையூறுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதமாக கிடைக்கும். சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலை கிடைக்காது என்றாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாக கூடிய காலம் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. பங்காளிடம் பேச்சை குறைக்கவும்.

கலைஞர்கள்

கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புக்களை நழுவ விடாமல் பார்த்துக் கொண்டால் ஏப்ரலுக்கு பிறகு உயர்வான நிலையை அடைய முடியும். தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைக்காமல் இழுபறி நிலையில் இருக்கும். பொருளாதார நிலையில் நெருக்கடி நிலவும். தேவையற்ற பயணங்களால் உடல் சோர்வு ஏற்படும். சேமிப்பு குறையும்.

மாணவ- மாணவியர்

மாணவர்கள் எவ்வளவு முயன்று படித்தாலும் அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாதபடி மனம் அலைபாயும். மதிப்பெண்கள் குறைவதால் பெற்றோர், ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதில் தடைகள் உண்டாகும். தேவையற்ற நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 06-01-2021

குருபகவான் சூரியன் நட்சத்திரத்தில் சனி சேர்க்கைப் பெற்று அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்பு அஜீரணக் கோளாறுகள் உண்டாகும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சற்று சாதகமாக இருந்து எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதே நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. எந்தவொரு புதிய முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும். சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தினாலும் உயர் பதவிகள் கிடைக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள்.

குரு பகவான் திருவோண நட்சத்திரத்தில் 07-01-2021 முதல் 04-03-2021

குருபகவான் சந்திரன் நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. அதிக அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு மன அமைதி குறையும். பொருளாதார நிலையில் தடைகள் இருந்தாலும் கேது 6-ல் இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். பண பற்றாக்குறையினால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும் என்பதால் அதிக முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவது சிறப்பு. எந்தவொரு புதிய முயற்சிகளில் ஈடுபடும் போதும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து முடிவெடுப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு வேலைபளு அதிகரிக்கும். தற்போது கையிலிருக்கும் வாய்ப்புகளை காப்பாற்றிக் கொள்வது மூலம் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும். முடிந்த வரை தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம்.

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 05-03-2021 முதல் 05-04-2021

குருபகவான் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிக்கும் இக்காலங்களில் நன்மை, தீமை கலந்த பலன்களையே அடைவீர்கள். உடல்நிலையில் சற்று சோர்வு, உடல் அசதி ஏற்பட்டாலும் கேது 6-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களை தடையின்றி செய்து முடித்து விட முடியும். வண்டி வாகனத்தால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது கஷ்டங்கள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் சாதகமான பலன்களை அடைய முடியும். திருமண சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் விலகும். அசையாச் சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சரள நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் வேலைபளு அதிகமாக இருந்தாலும் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு சாதகமான பலன்கள் கிட்டும். கூட்டாளிகளும் உதவிக்கரமாக இருப்பார்கள். தற்போது இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்வது மிகவும் நல்லது.

குரு பகவான் அதிசாரமாக கும்ப ராசியில் 06-04-2021 முதல் 20-06-2021

உங்களுக்கு அஷ்டம சனி நடைப்பெற்றாலும் குருபகவான் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். கேது 6-ல் இருப்பதால் உங்களின் தேவைகளும் ஆசைகளும் திருப்திகரமாக நிறைவேறும். எடுக்கும் காரியங்களை எளிதில் செய்து விடக்கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவச் செலவுகள் அனைத்தும் குறையும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களால் உங்களின் பெயர், புகழ் உயரும். கடன்கள் குறையும். எல்லோரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் மறையும். எல்லா வகையிலும் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும். சிலருக்கு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்பும் அதன் மூலம் தன லாபமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் அற்புதமான வளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் பணி சுமை குறைந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து வழியில் லாபம் கிட்டும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.

குரு பகவான் வக்ர கதியில் 21-06-2021 முதல் 17-10-2021

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் கேது 6-ல் இருப்பதாலும் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எடுக்கும் காரியங்களைச் சிறப்புடன் செய்து முடிக்க முடியும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகளில் சுமாராக இருக்கும். கடன்கள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு திருப்தியளிக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெற்றாலும் வேலையாட்களால் நெருக்கடிகள் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எதிர்நீச்சல் போட்டாவது இலக்கினை அடைந்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் பணியில் திருப்தியான நிலையினை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வேலை வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பொதுவாக பேச்சுகளில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 18-10-2021 முதல் 20-11-2021

குருபகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தேவையற்ற நெருக்கடிகளை சந்திப்பீர்கள். சனி 8-ல் சாதகமற்று சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்தையும் முழுமையாகச் செய்து முடிக்க இயலாதபடி தாமத நிலை உண்டாகும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்து லாபம் குறையும் என்றாலும் கேது 6-ல் சஞ்சரிப்பதால் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்க முடியாத நிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து உடல்நிலை சோர்வடையும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டி இருப்பதால் வீணான பழிச்சொல் உண்டாகும். புதியதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் அதிகபடியான அலைச்சல் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது.

சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டமச் சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்வது, கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது மிகவும் நல்லது. சனிப்ரீதியாக அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8, நிறம் – பச்சை, வெள்ளை, கிழமை – புதன், வெள்ளி

கல் – மரகதம் திசை – வடக்கு தெய்வம் – விஷ்ணு

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுரு பெயர்ச்சி பலன் ரிஷபம் 2020 – 2021 guru peyarchi palangal rishabam rasi 2021
Next articleகுரு பெயர்ச்சி பலன் கடகம் 2020 – 2021 guru peyarchi palangal kadagam rasi 2021