குரு பெயர்ச்சி பலன் ரிஷபம் 2020 – 2021 guru peyarchi palangal rishabam rasi 2021

0

ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

சாந்தமான குணம் இருந்தாலும் கோபம் வந்தால் கட்டுப்படுத்த முடியாத இயல்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 8, 11-க்கு அதிபதியான ஆண்டுக்கோளான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20-11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 15-11-2020 முதல் 13-11-2021 வரை) பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சனி சேர்க்கை பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அற்புதமான அமைப்பாகும். இதனால் செல்வம், செல்வாக்கு உயரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு நினைத்தவரை கைபிடிக்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்புவதால் கடந்த கால கடன்கள் குறையும். பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கைகள் சிறப்பாக அமையும்.

நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் பலமும், வலிமையும் கூடும். சொந்த வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் யாவும் விலகி புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்கள் வெற்றி பெறும். வெளியூர் மூலம் அனுகூலங்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடைபட்ட உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள். குரு தனது விஷேச பார்வையாக 1, 3, 5 ஆம் வீடுகளை பார்ப்பதால் சிறப்பான ஆரோக்கியம், எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் வாய்ப்பு, புத்திர வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

உங்கள் ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது, கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. நீங்கள் முன்கோபத்தை குறைத்து கொண்டு நிதானமாக செயல்பட்டால் பல்வேறு மேன்மைகளை அடைய முடியும்.

பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக 10-ல் சஞ்சரிக்க உள்ள இக்காலத்தில் தொழில் உத்தியோகத்தில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சனி 9-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க முடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பலமும் வலிமையும் கூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் இல்லாமல் உடனே சரியாகி விடும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலப் பலன்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்கள் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். உணவு விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்ப வாழ்வில் குதூகலமும், பூரிப்பும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. புத்திரர்களால் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடைபெறும். தாராள தனவரவுகளால் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். உடன் பிறப்புகள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்க முயற்சித்தால் சாதகப்பலன் கிடைக்கும். உற்றார் உறவினர்களிடம் பேசும் போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்சி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் நல்ல லாபம் கிடைத்து பொருளாதார நிலை உயரும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்ற முடியும். பெரிய தொகைகளைக் கூட எளிதாக ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெற முடியும். நீண்ட நாட்களாக இழுபறி நிலையில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சில போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபத்தையும், வெற்றியையும் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பால் சாதகப்பலன் ஏற்படும். கூட்டாளிகளை மட்டும் சற்று அனுசரித்து செல்வது முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவர்களை கலந்து ஆலோசித்து செயல்படுவது நல்லது. வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவதால் நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் அனுகூலமான பலனை அடைவார்கள். தடைப்பட்ட உயர் பதவிகள் கிடைக்கப்பெற்று கௌரவமான நிலைகள் ஏற்படும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரிபவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெற முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மணவயதை அடைந்த மங்கையருக்கு திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடந்த கால கடன்கள் யாவும் விலகி கன்னியமிக்க வாழ்க்கை அமையும். செல்வம், செல்வாக்கு, உயரும். சிலர் அழகான புத்திர செல்வத்தைப் பெற்றெடுப்பர். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். தெய்வ வழிபாடுகளுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

அரசியல்

உங்களின் செல்வம் செல்வாக்கு உயரக்கூடிய காலமாகும். வெளியூர், வெளிநாடுகள் மூலம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். கௌரவமிக்க மாண்புமிகு பதவிகள் கிடைக்கும். மக்களின் ஆதரவுகள் அதிகரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விட முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் தகுந்த நேரத்தில் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பங்காளிகளிடம் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது.

கலைஞர்கள்

புதிய வாய்ப்புகள் தேடி வந்து கதவைத் தட்டும். தடைப்பட்ட பணவரவுகள் எல்லாம் தடையின்றி வந்து சேரும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். உடனிருக்கும் நன்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீங்கள் நடித்த கதாபாத்திரங்கள் சிறப்பாக அமைவதால் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்பு அமையும்.

மாணவ- மாணவியர்

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த மந்த நிலைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவியும் தக்க சமயத்தில் கிடைக்கும். அரசு வழியில் உதவிகள் கிட்டும். விளையாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி போன்றவற்றில் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள். உங்களால் உங்கள் பள்ளிக் கல்லூரிகளின் பெயர், புகழ் உயரும்.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 06-01-2021

குருபகவான் தனக்கு நட்பு கிரகமான சூரியன் நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதில் அமைதியும், உற்சாகமும் பிறக்கும். மனைவி, பிள்ளைகளும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடிக்க முடியும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் தற்போது கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தாராளமான தனவரவுகளால் குடும்பத்தேவைகள் அனைத்தும் கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். அசையும் அசையாச் சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சிறப்பாக லாபம் கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக நிலையில் இக்காலத்தில் ஓரளவுக்கே உயர்வினை எதிர்பார்க்க முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் பணியில் திருப்திகரமான சூழ்நிலையை உண்டாக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வந்து கதவைத் தட்டும். சேமிப்புகள் பெருகும்.

குரு பகவான் திருவோண நட்சத்திரத்தில் 07-01-2021 முதல் 04-03-2021

குரு பகவான் சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் 9-ஆம் வீட்டில் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிக்கும் இக்காலங்களில் உங்களுடைய பெயர், புகழ், பெருமை உயரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடல் நலம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். கேது 7-ல் சஞ்சரிப்பதால் நேரத்திற்கு உணவு உண்பது கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் சரளமாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் குறையும். குடும்பத்திலிருந்த தேவையற்ற செலவுகள் மறையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகி தடபுடலாக நிறைவேறும். சிறப்பான குழந்தைப் பாக்கியம் பெறுவார்கள். சொந்த வீடு மனை வாங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறுவதால் லாபங்கள் பெருகும். போட்டி, பொறாமைகள் விலகி பொருட் தேக்கங்கள் குறையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் நற்பலன்களை அடைய முடியும். பல பொது நல காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் அதன் மூலம் வெளிவட்டாரத் தொடர்புகளில் சாதகமான பலன்களும் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். மாணவர்கள் எதிலும் சிறந்து விளங்குவர்.

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 05-03-2021 முதல் 05-04-2021

குருபகவான் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் சனி சேர்க்கைப் பெற்று 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால மருத்துவ செலவுகள் குறைந்து மன நிம்மதி ஏற்படும். மனைவி பிள்ளைகளால் மனதில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். சுகவாழ்வு சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும். புதிய வீடு கட்டி குடிபுகும் யோகமும், வண்டி வாகனங்கள் வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடைபெறும். தடைபட்ட சுப காரியங்கள் யாவும் தடபுடலாக நடைபெற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபார ரீதியாக உள்ள வழக்குகளில் வெற்றி கிட்டும். கடந்த கால பொருட் தேக்கங்கள் மறைந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். இருக்கும் இடத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் உணர்சிவசப்படாமல் நிதானமாக செயல்படுவது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

குரு பகவான் அதிசாரமாக கும்ப ராசியில் 06-04-2021 முதல் 20-06-2021

குருபகவான் அதிசாரமாக ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் உடல்நிலையில் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் மன நிம்மதி குறையும். மனைவி வழியில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் சங்கடங்களை சந்திப்பீர்கள். சிலருக்குக் கேட்ட இடத்தில் கடன் தொகை கிடைப்பதில் கூட தடைகள் ஏற்படும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களும், ஒற்றுமைக் குறைவுகளும் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. அசையாச் சொத்துக்களின் பராமரிப்பிற்காக சுப செலவுகளை எதிர்கொள்வீர்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட்டால் தான் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். கூட்டாளிகள் ஒற்றுமையின்றி செயல்படுவார்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே இருப்பதை காப்பாற்றக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.

குரு பகவான் வக்ர கதியில் 21-06-2021 முதல் 17-10-2021

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் நன்மை, தீமை கலந்த பலன்களை அடைய முடியும் என்றாலும் சனி 9-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி பெறுவீர்கள். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பொருளாதார நிலை சற்று சாதகமாக அமைவதால் எதிலும் முன்னேற்றமான நிலையினை அடைவீர்கள். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளலாம். புத்திர வழியில் இருந்த கவலைகள் மறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் பிரச்சினைகளின்றி வசூலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளின்றி செயல்பட முடியும். வேலையாட்களை சற்று கவனத்துடன் கையாண்டால் தொழிலில் முன்னேற்றமான பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு இருந்தாலும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். மற்றவர்களிடம் பேச்சுக்களில் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். வெளியூர் பயணங்களால் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவீர்கள்.

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 18-10-2021 முதல் 20-11-2021

குருபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சகல விதத்திலும் சுபிட்சமான நிலைகள் உண்டாகும். சனி 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் மூலம் நல்ல செய்தி கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் யாவும் தடையின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் சாதகமான பலனைப் பெற முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவும், நல்ல நண்பர்களின் நட்பும் மன மகிழ்ச்சியினை உண்டாக்கும். பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொன் பொருள், ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபகரமான பலனகளை அடைய முடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு பதவி உயர்வுகளைப் பெற முடியும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள். வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன் தொகைகளை வசூலிப்பதில் எந்தத் தடையும் இருக்காது.

பரிகாரம்

ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8 நிறம் – வெண்மை, நீலம், கிழமை – வெள்ளி, சனி

கல் – வைரம் திசை – தென்கிழக்கு, தெய்வம் – விஷ்ணு, லக்ஷ்மி

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுரு பெயர்ச்சி பலன் மேஷம் 2020 – 2021 guru peyarchi palangal mesha rasi 2021
Next articleகுரு பெயர்ச்சி பலன் மிதுனம் 2020 – 2021 guru peyarchi palangal mithunam rasi 2021