மனிதன் உயிர் வாழ நிச்சயம் உடலில் இருக்கும் எலும்புகளின் உதவி தேவைப்படுகிறது.
உடலில் இருக்கும் எலும்புகளின் ஆரோக்கியத்தை வைத்தே மனிதனின் ஆயுள் காலம் நிர்ணயிக்கப்படுகிறது என்றே சொல்ல வேண்டும்.
எமது உணவு பழக்கங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் இருக்கின்றது. அதிலும் 30 வயதை கடந்து விட்டால் எலும்புகளின் ஆரோக்கியம் குறைய தொடங்கிவிடுகிறது.
இப்படியே என்றால் ஆயுற்காலம் 60 வயது தொடக்கம் 70 வயது வரை என கூறப்படுகின்ற நிலை மாறி.. 40 தொடக்கம் 50 வயது வரை என்றாகி விடும்.
இது இப்படி இருக்க நடக்கும் விபத்துகளின் மூலம் பலரது எலும்புகள் தள்ளாடும் நிலையில் தான் தற்போது உள்ளது.
இதற்கு தீர்வு பூசணி
இது சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடிய ஒன்று.
இதனை கழுவி சுத்தப் படுத்து காயவைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதனை தூளாக்கியும் வைத்துக் கொள்ளலாம். இதனை நீங்கள் நிலக்கடலை, பாதாம் சாப்பிடுவது போல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாபிடுங்கள்.
முறிந்த எலும்புகள் கூட ஆரோக்கியமானதாக மாறிவிடும். தூளாக்கி கொள்பவர்கள் தண்ணீரில் தூளை கலந்து குடியுங்கள் இதுவே சிறந்த மருந்து.
உளுந்து
இதுவும் எல்லா நாட்டிலும் கிடைக்க கூடியது. உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து பொட்டனி கட்டுங்கள்.
நல் எண்ணெயை சூடாக்கி இறக்கி வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் உளுத்தம் பருப்பு பொட்டணியை வைத்து அந்த சூட்டுடன் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் குறந்தது 10 நிமிடம் வரை ஒத்தடம் கொடுங்கள்.
கொடுத்துவிட்டு துணி ஒன்றினால் சுற்றி வைத்துவிடுங்கள். இப்படி ஒரு நாளைக்கு ஒரு முறை வீதம் செய்யுங்கள். வைத்திய சாலையால் கைவிடப்பட்ட எலும்பு முறிவுகள் கூட இதனால் குணமாகும். இது அனைத்தும் எமது அதித் தமிழர்கள் எமக்காக விட்டுச் சென்ற குறிப்புகள்.