நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இத்திரைப்படம் தெலுங்கில் மறு ஆக்கம் செய்யப்பட்டு 2002இல் இதேபெயரில் வெளியிடப்பட்டது.
ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சமி திரைப்படத்தில் நடித்தார். பின்பு அடுத்தடுத்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் இவரும் ஒருவராவார்.
இதேவேளை, தற்போது ஜெயம் ரவியின் மகன் ஆரவ் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகின்றார். டிக் டிக் டிக் என்ற படத்தில் அறிமுகமாகி அதிக ரசிகர்களை தன்வசப்படுத்தியிருந்தார்.
மேலும் ஆரவ் இந்த படத்திற்காக டப்பிங்கும் பேசியுள்ளார். இதற்கான விருது கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படத்தினை மகிழ்ச்சியுடன் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். அது மாத்திரம் இன்றி ஒரே படத்தில் புகழின் உச்சம் சென்ற அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர்.