குடலில் தொந்தரவு செய்யும் புழுக்களை அழிக்க சில இயற்கை மருத்துவ முறைகள்!

0

குடல் புழுக்கள் ஆனது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியான‌ முறையில் சாப்பிட முடியாது, வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும். குடல் புழுக்களை குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நீக்க வேண்டியது அவசியமாகும். குடல் புழுக்கள் வயிற்றில் வளர தொடங்கினால் குறைந்தது ஆறு மாதங்கள் வரையாவது வளரும் தன்மை கொண்டது.

குடல் புழுக்கள் வந்த உடன் அழிக்க சில இயற்கையான காய்கறிகளும், இயற்கை மருந்துகளும் உள்ளன. உடலுக்கு எந்த விதமான தீங்கும் இன்றி குடல் புழுக்களை நீக்கிவிடும் தன்மை கொண்டது. இந்த பகுதியில் குடற்புழுக்கள் எதனால் உண்டாகின்றன, அவை வராமல் பாதுகாக்க என்னென்ன வழிகள் உள்ளன, அவற்றை போக்க உதவும் வைத்தியங்கள் பற்றியும் விரிவாக காணலாம்.

குடல் புழுக்கள் வர காரணம்

அசுத்தமான சுற்றுப்புற சுகாதாரம் தான் குடல்புழுத் தொல்லைக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. குறிப்பாக, தெருவோரங்களைத் திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துதல், , மண் தரையில், தண்ணீரில் குழந்தைகள் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, காலில் செருப்பு அணியாமல் நடப்பது, சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தாமல் உண்பது,சுகாதாரமற்ற உணவு, சுத்தமில்லாத குடிநீர், ஆகியவை குடல்புழு ஏற்படுவதற்குத் துணைபோகின்றன.

குழந்தைக்கு மண் உண்ணும் பழக்கம் இருந்தால் குடலில் புழு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சமையலுக்கு முன்பு காய்கறிகளைக் கழுவிச் சுத்தம் செய்யத் தவறினாலும், குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

சுயசுத்தம் காக்கப்பட வேண்டும். குளிப்பறை மற்றும் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். திறந்தவெளிகளையும் தெருவோரங்களையும் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக் கூடாது. கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுங்கள். குழந்தைகளையும் இவ்வாறு செய்ய பழக்கப்படுத்துங்கள்.

சகதி, சேறு உள்ள அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக் கூடாது. சுத்தமான இடங்களில் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள். நகங்களைப் பத்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும்.நகங்கடிக்கும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.

ஈக்கள் மொய்த்த உணவுப்பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. காரணம், கழிவுகளிலுள்ள புழுக்களின் முட்டைகளைக் குடிநீருக்கோ, உணவுக்கோ கொண்டுவருவதில் ஈக்களுக்குப் பெரும்பங்கு உண்டு.

காய், கனிகளை உண்பதற்கோ சமைப்பதற்கோ பயன்படுத்தும் முன்பு தண்ணீரில் சிறிது உப்பு இட்டு நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். இதனால் உணவுகள் சுத்தமாகவும் நச்சுக்கள் இன்றியும் இருக்கும்.

குழந்தைகள் ஈரப்படுத்திய உள்ளாடைகளை உடனுக்குடன் மாற்றுவதும், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம். எக்காரணத்துக்காகவும் உள்ளாடைகளை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.

தண்ணீரை நன்றாகக் கொதிக்கவைத்து ஆறிய பின்னா் குடிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட உணவு வகைகளையே உண்ண வேண்டும்.

காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும். அசுத்தமான குளம், நீச்சல்குளம் போன்றவற்றில் குளிப்பதையும் நீச்சலடிப்பதையும் தவிர்க்க வேண்டும். புண்கள் இருந்தால் வீட்டுக்குள் நுழைந்ததும் பாதங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும்.

தரமான கடைகளில் மட்டுமே இறைச்சியை வாங்க வேண்டும். மீன், இறைச்சி போன்றவற்றை நன்றாக வேகவைத்த பின்னா் சாப்பிட வேண்டும்.

வீட்டில் வளர்க்கப்படும் செல்லபிராணிகளை சுத்தமாக வைத்திருத்தல் அவசியம், அதனுடன் விளையாடினால் கண்டிப்பாக கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

இஞ்சி,கோரைக்கிழங்கு,சம அளவு எடுத்து அரைத்து, சுண்டைக்காயளவு, சிறிது தேன் சேர்த்து சாப்பிட குடற்புழுக்கள் வெளியாகும்.

பூசணி விதை, தேன். அரை ஸ்பூன் அளவுக்கு பூசணி விதையினை பொடியாக்கி. இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டு வந்தால் குடல் புழுக்கள் வெளியேறும். பெரியவர்களுக்கு 1/2 ஸ்பூன் பூசணி விதை பொடியும், குழந்தைகளுக்கு 1/4 ஸ்பூன் அளவுக்கும் எடுக்கவும். இதை 3 நாட்கள் சாப்பிடலாம். 6 மாதத்துக்கு ஒருமுறை எடுத்துக்கொள்வது நன்மை தரும்.

ஒரு ஸ்பூன் பப்பாளி விதை எடுக்கவும். சிறியவர்களுக்கு என்றால் அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீா்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்த்து வாரம் ஒரு முறை என 4 வாரங்கள் குடித்துவர வயிற்று புழுக்கள் வெளியேறும்.

வேப்பம் பூவை முன்னோர்கள் வாரத்துக்கு ஒருமுறை உணவில் சேர்த்தார்கள். இதனால் குடல் புழுக்கள், தொற்று கிருமிகள் வராமல் தடுக்கப்பட்டது. வேப்பம் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. வேப்பம் பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் ஆரோக்கியம் கிடைக்கும்.

விளக்கெண்ணெய், மஞ்சள், பூண்டு. ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய்யில் பூண்டுகளை துண்டுகளாக்கி போட்டு வதக்கவும். இதில் கால் ஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். இதை இருவேளை சாப்பிடும்போது குடல் புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். செரிமானம் சீராகும். 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்த கூடாது.

கோவைக்காய் பித்தம்,நீாிழிவு, ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவை இலைச் சாறு, பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல மருந்தாகும்.

ஒரு பிடி குப்பைமேனிவேரை,ஒரு லி நீரிலிட்டு கால் லி.ஆகக் காய்ச்சிப் பருக நாடாப் புழுக்கள் வெளியாகும். சிறுவர்களுக்கு 60 மிலி கொடுக்கவும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுகம் ஜொலிக்க வேனுமா! அப்போ ரேவதியம்மா சொல்றத கேழுங்க‌!
Next articleசந்தோஷமாக வாழ நம் முன்னோர்கள் வகுத்து கொடுத்த வாழ்வியல் நெறிமுறைகள்! கட்டாயம் படியுங்கள்!