ஆட்டுப்பாலில் உள்ள மருத்துவ குணங்கள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள்! தீரும் நோய்கள்!

0

மருத்துவக் குணங்கள்:

காடுகள், மலைகள், மலைச்சாரல்கள், ஆற்றங்கரைகள் என பலவகை மூலிகைச் செடிகள் நிறைந்த புதர்ப்பகுதிகள் போன்ற இடங்களில் பலவித செடிகொடிகளையும், மூலிகைகளையும் மேய்ந்து வருகின்ற வெள்ளாடுகளின் பாலை பூலோக தேவாமிர்தம் எனக் கூறலாம்.
வெள்ளாட்டின் பாலை வயதிற்கு ஏற்ப 5 மி.லி. முதல் 100 மி.லி. வரை சம அளவு தண்ணீர் கலந்து காய்ச்சிப் பருகி வர எத்தகைய நோய், வலி வியாதிகளை உடையவர்களுக்கும் சிறந்த பலன் கிடைக்கும்.
வெள்ளாட்டுப் பாலை கறந்த உடனேயே அருந்தக்கூடிய வசதியுடையவர்கள் சம அளவு தண்ணீர் மட்டும் கலந்து காய்ச்சாமலேயே அருந்திட மேலும் மிகுதியான பலனைப் பெறலாம்.
வெள்ளாட்டுப் பால் வலிப்பு, புற்றுநோய், நீரிழிவு, சரும நோய்கள், யானைக்கால் வியாதி, மஞ்சள் காமாலை போன்ற எவ்வித கொடூர நோய்களையும் குணப்படுத்தக்கூடியது. ஆண்மைக்குறைவு, உடையவர்கள் வெள்ளாட்டுப் பாலை தொடர்ந்து 3 – 4 மாதங்கள் தினசரி ஒரு வேளை குடித்து வர நல்ல பலன் தெரியும்.
வெள்ளாட்டுப் பாலினால் வாத, பித்த, கப தொந்தரவுகளினால் ஏற்படக் கூடிய நோய்களைப் போக்குவதுடன் சுவாச காசம், சீதாதி சாரம், கபத்தோடம், விரணம், வாதத்தினால் உண்டாக்கிய வீக்கங்கள் முதலிய துன்பங்களைத் தீர்ப்பதுடன் பசியையும் உண்டாக்கும்.
இப்பாலை மஞ்சள்காமாலை நோய் உடையவர்களுக்குத் தினமும் கொடுக்க விரைவில் குணமடையும்.
செம்மறியாட்டுப்பால் மூத்திரப்பையின் கற்களை அகற்றும் மற்றும் இதனுடன் சேர்த்து காய்ச்சிய தைலத்தினால் தலைமுடி செழித்து வளரும் என்று சொல்லப்பட்டாலும் செம்மறியாட்டுப் பாலை தவிர்க்கவும். பலருக்கு ஒத்துக் கொள்ளாது. பல வியாதிகளை கிளப்பி விடும். வாயுவை அதிகரிக்கும்.
செம்மறி ஆட்டின் பால் பித்த கப தொந்தரவுகளையும், வயிற்று உப்புசம், மேற்சுவாசம் ஆகியவற்றை உண்டாக்கும். பத்தியத்திற்கு ஆகாது. ஆனால் வாயுவை அதிகரிக்கச் செய்யும். இப்பாலிற்கு அநேக நோய்களை உண்டாக்கும் குணத்தைப் பெற்றிருக்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெள்ளைப் பூண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள் என்ன தெரியுமா?
Next articleசமையலறையில் வீசும் நாற்றத்தைப் போக்கும் எளிய வழிமுறைகள்!