33 ஆண்டுகள் தாயைப் பிரிந்திருந்த மகன் ஆனால் சேர்ந்திருக்க முடிந்ததோ 3 நாட்கள் மட்டுமே!

0

தாயாரும் மகனும் பிரிந்து இருந்தநிலையில் 33 ஆண்டுகளுக்கு பின் கமாருஸமான் கண்டுப்பிடித்து மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அரவது மகிழ்ச்சி நிலைத்திருக்கவில்லை. தாயாரை சந்தித்த முன்று நாள்களில் தாயார் உடல்நிலை காரணமாக இறந்துவிட்டார்.

மலேசியாவின் கமாருஸமான், பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து தாயாரின் இருப்பிடத்தைத் தேட முயன்றார்.

செய்தித்தாட்களில் 61 வயதுத் தாயார் மசிமா மூசாவின் படத்தை வெளியிட்டார். அதைப் பார்த்துத் தாயார் செய்தி அனுப்புவாரா என்று காத்திருந்தார். ஆனால் பலனில்லை.

பின்னர் நண்பர் ஒருவரின் உதவியால் Facebook பக்கத்தின் மூலம் இருவரும் இணைந்தனர்.

எப்போது மகனைப் பார்ப்பேன் என்று ஏங்கிக் கொண்டிருந்த தாய், இம்மாதம் 14ஆம் தேதி மலேசியாவின் பாசிர் புத்தேயில் மகனுடன் சேர்ந்துகொண்டார். ஆனால், அந்த மகிழ்ச்சி நிலைத்திருக்கவில்லை.

உடல்நலம் குன்றிய திருவாட்டி மசிமா, இரத்தத்தில் ஏற்பட்ட நோய்த் தொற்றால் 3 நாட்களில் காலமானார்.

மருத்துவமனையில் திருவாட்டி மசிமா, அதிகாலை 3.33 மணிக்கு இறந்தார்.

எனினும், தாயாரின் இறுதிக் காலத்தில் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் அருகே இருந்ததில் 43 வயது கமாருஸமான் மகிழ்ச்சி அடைந்தார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசகமாணவர்கள் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட 9-வயது பையன்?
Next articleயாழில் பொலிஸார் மீது சற்று முன்னர் தாக்குதல்!