யு.எஸ்.-டென்வர், கொலராடோவில் முதல் வார பாடசாலை ஆரம்பத்தில் மாணவன் ஒருவன் தன் உயிரை தானே மாய்த்துக்கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. தான் ஒரு ஓரின சேர்க்கையாளன் என்பதை தனது சகமாணவர்களிடம் தெரிவித்த ஒரு சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டான். தனது மகனின் கொலைக்கு கொடுமைப்படுத்தியதே காரணமென பையனின் தாய் கூறினார்.
ஆரம்ப பள்ளி ஒன்றில் நான்காவது வகுப்பில் கல்வி பயின்றவன்.
கோடை விடுமுறையில் தான் ஓரின சேரக்கையாளனாக மாறியுள்ளதாக பயந்தவாறு தனது தாயிடம் தெரிவித்துள்ளான்.
இச்செய்தியை தனது சகமாணவர்களிடமும் தெரிவிக்க விரும்பியுள்ளான். தெரிவித்தும் உள்ளான்.
நான்கு நாட்கள் பாடசாலை சென்ற மகன் வியாழக்கிழமை இவனது வீட்டில் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டது. பாடசாலையில் கொடுமைப் படுத்தப்பட்டதால் அவன் தன்னை தானே கொன்றுவிட்டதாக தாயார் தெரிவித்தார்.
சகமாணவர்கள் எத்தகைய கொடுமைப்படுத்தலை செய்தனர் என்பது தெரியவரவில்லை. பாடசாலையில் மாணவர்கள் அவனை சாகும் படி தெரிவித்தாக தனது மூத்த சகோதரியிடம் தெரிவித்துள்ளான் என தாயார் கூறினார்.
இந்த பேரழிவு மூலம் கொடுமைப்படுத்துதலின் விளைவுகள் குறித்து விளிப்புணர்வை வெளிப்படுத்த தான் விரும்புவதாக பையனின் தாய் தெரிவித்தார்.