வ‌யி‌ற்‌‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் கோளாறுகளினால் செ‌ரிமானத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு!

0

செ‌ரிமான‌த்‌தி‌ற்கு‌ம் உட‌ல் நல‌த்‌தி‌ற்கு‌ம் மு‌க்‌கிய‌ப் ப‌ங்கு உ‌ண்டு. செ‌ரிமான‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டா‌ல் வ‌யி‌ற்றுவ‌லி‌யி‌ல் துவ‌ங்‌கி அடு‌த்தடு‌த்து பல ‌வியா‌திக‌ள் ப‌ற்‌றி‌க் கொ‌ள்ளு‌ம்.

அதனா‌ல்தா‌ன் பெரு‌ம்பாலான ‌வியா‌திக‌ள் வ‌யி‌ற்‌‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் கோளாறுகளா‌ல் வரு‌கி‌ன்றன எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் ‌கு‌றி‌ப்‌பிடு‌கிறா‌ர்கள‌்.

எனவே ‌செ‌ரிமான‌த்தை‌ப் ப‌‌ற்‌றி மேலோ‌ட்டமாவது தெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டியது அவ‌சிய‌ம்.

பொதுவாக நா‌ம் சா‌ப்‌பி‌ட்ட உணவு 3 முத‌ல் 4 ம‌ணி நேர‌த்து‌க்கு‌ள் ‌ஜீரணமா‌கி‌வி‌ட வே‌ண்டு‌ம். நா‌ம் முத‌லி‌ல் சா‌ப்‌பி‌ட்ட உணவு ‌ஜீரணமா‌கி ப‌சி எ‌ன்ற உண‌ர்வு ஏ‌ற்ப‌ட்ட ‌பிறகுதா‌ன் அடு‌த்த உணவை உ‌ண்ண வே‌ண்டு‌ம்.

சா‌ப்‌பி‌ட்ட ‌பி‌ன்பு அ‌திகமாக ‌நீ‌ர் அரு‌ந்துவது ந‌ல்லது. ஆனா‌ல் சா‌ப்‌பிடு‌ம் மு‌ன் ‌நீ‌ர் அரு‌ந்துவது ‌ஜீரண இய‌க்க‌த்தை ‌கெடு‌த்து‌விடு‌ம். நடுநடுவேயு‌ம் ‌நீ‌ர் அரு‌ந்துவது கூடாது.

உலகில் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் ஒரே சொல் செரிமானம். செரிமானம் என்பது நாம் சாப்பிட்ட பின் தொடங்கும் செயல் அல்ல. ஒரு உணவைப்பார்க்கும் போதோ அதன் வாசனையை நுகரும் போதோ அல்லது பிடித்த உணவைப் பற்றி நினைத்தவுடனே, நம் வாயில் உமிழ் நீர் சுரக்கும்போதே ஆரம்பித்து விடுகிறது. உணவு சாப்பிட்டதும், வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவைச் சிதைத்து உடலுக்குத் தேவையான வகையில் மாற்றிக் கொடுக்கும் பணியைச் செய்கிறது. “முறையான உணவுபழக்கம்’’என்பது சாப்பிடும் உணவையும் , அதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தையும் மட்டும் குறிப்பதல்ல. இரண்டு உணவு நேரத்துக்கான இடைவேளையில் நாம் என்ன உண்கிறோம் என்பதும் தான்.

சாப்பிட்டவுடன் ரத்த ஓட்டம் முழுவதும் வயிற்று பகுதிக்குச் செல்வதால், மூளைக்குச் செல்லக் கூடிய ரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால், மூளை மந்தமாவதால், தூங்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. சாப்பிட்டதும் , படுக்கும்போது வயிற்றில் உள்ள அமிலத்துடன் கலந்த உணவானது, உணவுக்குழாய் வழியாகத் தொண்டைப்பகுதிக்கு மேல் நோக்கி வரும். உணவின் அமிலத் தன்மையால் உணவுக் குழாய் அரிக்கப்பட்டு நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

மேலும், நாம் படுக்கும் போது வயிற்றில் உள்ள உணவு, உதரவிதானம் (Diaphragm) பகுதியில் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்துவதால், குறட்டை பிரச்சினை ஏற்படுவதோடு தூக்கமின்மையும் வரும். எனவே, சாப்பிட்டதும் குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து தான் தூங்கச் செல்லவேண்டும். சாப்பிட்டது என்ன செய்யலாம் என்றால், மனதுக்கு பிடித்தவர்களிடம், கொஞ்சம் நேரம் மனம் விட்டு பேசுங்கள். உடனே செல்போனை தூக்கிவிடாதீர்கள் . உங்கள் மனைவி அல்லது தாய் , தந்தை ஆகியோரிடம் பேசுங்கள். மகிழ்ச்சி தாண்டவமாடும்.

காலையில் வெந்நீரில் குளித்த உடன், சாப்பிடும் பழக்கமும் சாப்பிட்டுவிட்டு, குளிக்கும் பழக்கமும் சிலருக்கு உண்டு. இவை இரண்டுமே தவறானவை. உணவு சரியாக செரிக்க சாப்பிட்டதும், ரத்த ஓட்டமானது நமது வயிற்றுப் பகுதிக்கு தான் செல்ல வேண்டும். ஆனால், வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிரிச்சியாக்க அதிக ரத்தம் சருமத்துக்குச் சென்றுவிடும். சாப்பிட்டவுடன் குளிப்பதால் ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்று பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவானது சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். எனவே, குளித்து அரைமணி நேரம் கழித்துச் சாப்பிடலாம். அல்லது சாப்பிட்டு விட்டு இரண்டு மணிநேரம் கழித்துக் குளிக்கலாம்.

வயிற்றின் அமிலத் தன்மையானது ஒன்றரையிலிருந்து மூன்று பி.ஹெச் (Ph) வரை இருக்கும். இந்த அளவில் தான் உணவானது அமிலத்துடன் சேர்ந்து நன்றாகச் செரிக்கப்படும். ஆனால், சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால், வயிற்றில் செரிமானத்துக்குத் தயாராக இருக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை நீர்க்கச் செய்துவிடும். இதனால்,வயிற்றில் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்னும் பின்னும் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும் போது, விக்கலோ அடைப்போ ஏற்பட்டால் மட்டும் சிறிது தண்ணீர் குடிக்கலாம். சாப்பிட்டபிறகு, வெந்நீர் குடிப்பது சிறந்தது.

அதேபோல உணவு சாப்பிட்டவுடன் பழங்களை எடுத்துக்கொள்ளகூடாது. உணவு செரிக்கப்படும் விதமும் பழங்கள் செரிக்கப்படும் விதமும் ஒன்றுக் கொன்று வேறுபட்டவை. பழத்தில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் எளிதான சர்க்கரை மூலக்கூறுகள் செரிப்பதற்கு, வேறு விதமான நொதிகள் பயன்படுத்தப்படும். உணவு சாப்பிடும் போதோ அல்லது சாப்பிட்ட உடனே பழங்களை எடுத்துக்கொள்ளும் போது, பழங்கள் உணவுடன் சேர்ந்து, வயிற்றிலேயே தங்கிவிடும். அதில், உள்ள சத்துக்களை உடலினால் உறிஞ்சிக் கொள்ள முடியாது.

எனவே,சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பும் பின்பும் பழங்கள் சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டவுடன் பழங்களை எடுத்துக் கொண்டால், உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட்டுடன் பழத்திலுள்ள சர்க்கரையும் சேர்ந்து, சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். இவர்கள் , சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரும் சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரம் கழித்தும் தான் பழங்களை எடுத்துக் கொள்ளவேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅனைவரையும் வியக்க வைக்கும் செயற்பாடு! இலங்கையில் இப்படியொரு பொலிஸ் அதிகாரியா?
Next articleபதற வைக்கும் வீடியோ! மனைவியுடன் சேர்ந்து தந்தையை இரக்கமின்றி தாக்கிய மகன்!