உங்கள் தலை முடி வளர்ச்சியை 100% தூண்டும் மூலிகை தைலம் வீட்டிலேயே தயாரிக்கலாம்!

0

பெரும்பாலான பெண்கள் நீண்ட கருமையான கூந்தலை விரும்புகின்றனா் இதற்கு பல்வேறு வகையான எண்ணெய்களைகடைக‌ளில் வாங்கி உபயோகித்திருப்பீா்கள், ஆகவே தலை முடி வளர்ச்சியை தூண்டும் மூலிகை தைலம் வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை பாா்ப்போம்.

தேவையானவை:

செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் 1.5 லிட்டர்.
வெள்ளைக் கரிசாலைச் சாறு – 0.5 லிட்டர்
கறிவேப்பிலைச் சாறு – 0.5 லிட்டர்
கீழ்காய்நெல்லிச் சாறு – 0.5 லிட்டர்
நெல்லிக்காய்ச் சாறு – 0.25 லிட்டர்
அவுரி( நீலி ) சாறு – 0.5 லிட்டர்
கறிவேப்பிலைச் சாறு – 0.5 லிட்டர்
பொடுதலைச் சாறு – 0.5 லிட்டர்
நெல்லிக்காய்ச் சாறு – 0.25 லிட்டர்
சோற்றுக் கற்றாழைச் சாறு – 0.25 லிட்டர்

இவற்றை நீங்கள் கிராமத்திலோ அல்லது நாட்டு மருந்துக் கடைகளிலோ வாங்கிக்கொள்ளலாம்,

நெல்லிக்காய்களில் உள்ள கொட்டைகளை எடுத்துவிட வேண்டும். இலைகளை மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும் அதிகம் தண்ணீர் சேர்க்ககூடாது . சோற்றுக் கற்றாழையில் ஜெல்லி போன்ற பகுதியை மட்டும் எடுத்து கொள்ளவும்.

பின்னா் இவற்றை 1.5 லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய சூட்டில் நன்றாக காய்ச்சவும் அதன் பின் வடித்துக்கொள்ளவும்.

இந்தத் தைலத்தினை முடியில் நன்றாக பூசி மசாஐ் செய்து 4-5 மணி நேரம் தலையில் ஊற வைத்து தலைக்குக் குளிக்க வேண்டும். இதனால் உங்களுக்கு கருமையான அடா்த்தியான கூந்தலை பெறலாம், ஆண்களும் இதனை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

பயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க தினமும் காலை இதை செய்யுங்கள்!
Next articleஇது விந்துவைக் குறைக்கும் தன்மை கொண்டது ஆண்கள் சாப்பிடாதீர்கள் ! ஆனால் பெண்களுக்கு இந்த நோய்கள் குணமாகும் !