சீரகச் செடியைப் போல நாலைந்து அடி உயரம் வளரக் கூடியது சதகுப்பை. குடை விரித்தாற்போல் நரம்புகள் தோன்றி அவற்றின் இடையே சிவப்பு மலர்கள் ஒவ்வொரு காம்பிலும் நூற்றுக்கணக்கான மலர்கள் பூக்கும் தன்மை கொண்டது. அதனால் இது “சதபுஷ்பா” என்று பெயர் பெற்றது. விந்துவைக் குறைக்கும் தன்மை கொண்டது. இதயத்திற்கு நன்மை தருவதோடு மலத்தைக் கட்டும். இதன் வேரும் விதைகளும் மருந்தாகப் பயன்படுகின்றன. சூடு. இருமல், வாந்தி, கபம், வாதம் மற்றூம் பெண் குறியில் தோன்றும் நோய்கள் முதலியவற்றைப் போக்கும் மருத்துவக் குணம் உடையது.
பயன்கள்
பெண்களுடைய கருப்பை, மாதவிடாய் பிரச்சினை தீர சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் சம அளவாக எடுத்து பொடியாக்கி அதே அளவு பனை வெல்லம் சேர்த்து கலந்து காலை, மாலை இருவேளையும் சாப்பிட்ட பின்னா் சிறிது நேரம் கழித்து சோம்புக் குடிநீர் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
சதகுப்பைச் சூரணம் ஒரு கிராம் எடுத்து சர்க்கரை கலந்து சாப்பிட வாதநோயைக் கட்டுப்படுத்தும், பசியின்மையைப் போக்கும்.மேலும் இரைப்பை, நுரையீரல் ஆகியவற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
15 கிராம் சதகுப்பை இலையை அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்த பின்னர் வடித்து 30 மில்லியளவு 3 வேளையும் குடித்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், மூக்கு நீர்ப் பாய்தல், தலைநோய், காது வலி, கீழ்வாய்க் கடுப்பு குணமாகும்.
சூதகசந்தி, சூதகக்கட்டு, காக்கை வலிப்பு தீர சதகுப்பை இலையைக் ஒரு கைப்பிடியளவு அரைத்து 500 மி.லி விளக்கெண்ணையுடன் கலந்து காய்ச்சி வடித்து 5 சொட்டு வீதம் 3 வேளை கொடுத்து வர நோய் நீங்கும்.
இலைச்சாறு 5 மி.லி எடுத்து தேன் அல்லது கோரோசனையுடன் கலந்து 4 மணிக்கு ஒரு தடவை கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் இழுப்பு நோய் , வயிற்றுப் புழு வெளியேறும்.
சதகுப்பை விதையினை பொடியாக்கி 30 கிராம் எடுத்து 500 மி.லி வெந்நீரில் ஊற வைத்து இத்துடன் சுண்ணாம்பு தெளிந்த நீரைச் சிறிது சேர்த்துக் கொடுக்க தாய்ப்பால் இல்லாமல் அவதிப்படும் பெண்கள் பெரியவர்களுக்கு உண்டாகும் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, குணமாகும்.
By: Tamilpiththan