வயிறு வீக்கம், கருப்பை நீர்க்கட்டி, முடி வளர்ச்சி, இளநரை மற்றும் நச்சுக்களை முறிக்க தும்மட்டி பழங்களை இப்படி சாப்பிடுங்க!

0

கிராமங்களில், மணற்பாங்கான நிலங்களில் விளைந்திருக்கும் தும்மட்டி கொடிகளையும் சேர்த்தே, புல்லருப்பவர்கள் வெட்டி வந்து, கால்நடைகளுக்கு தீனியாகக் கொடுப்பார்கள். வயல்வெளிகளில் தானாகவே வளரும் இந்தச் செடிகள், விதைகள் மூலமும், வளர்க்கப்படுகின்றன. இந்தக் கொடி, கொம்மட்டி என்று கிராமங்களில் அழைக்கப்படுகிறது.

தும்மட்டியின் பொதுவான பயன்கள், உடலில் உள்ள புழுக்களை அழிக்கும், உடலில் சேர்ந்த நச்சுக்களை முறித்து, மலச்சிக்கல் போக்கும், சிறுநீர்ப் போக்கை இயல்பாக்கும். புழுவெட்டு போக்கி, முடியை மீண்டும் வளர வைக்கும். இள நரையைப் போக்கும். இதன் இலைகள், காய் மற்றும் வேர் போன்ற பாகங்கள், மருத்துவ பயன்கள் மிக்கவை.

வயிற்று பாதிப்புகள் மற்றும் வாயுத்தொல்லைகள் நீங்க :
தும்மட்டிக் காய், எலுமிச்சை, வெங்காயம், இஞ்சி மற்றும் நொச்சி இவற்றை தனித்தனியே சாறெடுத்து, அதை ஒன்றாகக் கலந்து, காய்ச்சி, சாறு கால் பாகமாக சுண்டி வந்ததும், ஆற வைக்க வேண்டும்.

இத்துடன் ஓமம், பெருங்காயம், மிளகு, வெந்தயம் மற்றும் கடுகு மஞ்சள் இந்துப்பு சேர்த்து, காய்ச்சிய சாற்றில் இட்டு நன்கு அரைத்து, அந்த விழுதை, தினமும் சாப்பிட்டு வர, வயிற்று பாதிப்புகள் யாவும் தீர்ந்து, செரிமான ஆற்றல் சீராகும்.

இளநரை போக்கி, தலை முடியைக் கருமையாக்கும் தும்மட்டி :
சிலருக்கு மிகவும் இளைய வயதிலேயே, இள நரை ஏற்பட்டு, வயது முதிர்ந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டு, மன வேதனையை உண்டாக்கி விடும். சிலர் உடல் பாதிப்புகள் தீர எடுத்துக்கொண்ட மருந்துகளின் ஒவ்வாமையால் முடி வெளுத்து, நரைத்த முடியுடன் காணப்படுவார்கள்.

இன்னும் சிலரோ, ஆர்வக் கோளாறில் முடியின் வண்ணத்தை, சிவப்பு, பச்சை வண்ணமாக்கி தற்கால நாகரிக விருப்பத்தில் செய்யும் செயற்கை பூச்சுக்கள், தலை முடிகளின் இயல்பான கருப்பு வண்ணத்தை அழித்து, முடியை வெளுக்க வைத்து விடுகின்றன.

இது போன்ற பாதிப்புகளில் இருந்து தலைமுடியை காத்து, பழையபடி கருப்பு வண்ணத்தை அடைய வைக்கவும், முடிகள் உதிர்வைக் கட்டுப்படுத்தவும், தும்மட்டிக் காய்கள் உதவுகின்றன.

உடலில் சேர்ந்த நச்சுக்களை முறிக்க :
தும்மட்டி கொடிகளை காய்களுடன் நன்கு உலர்த்தி, தூளாக்கி, அதில் சிறிது தினமும் இருவேளை, சாப்பிட உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் முறிந்து, உடல் நலமாகும். வயிற்றுப் புழுக்களும் அழிந்துவிடும்.

புழு வெட்டு பாதிப்புகள் தீர:
சிலருக்கு தலையில், உடலில் முடிகள் உதிர்ந்து, அந்த இடங்களில் மீண்டும் முடி முளைக்காமல், தலையில் முடிகளின் அடர்த்தி, இடைவெளியுடன் இருக்கும். இந்த பாதிப்பை, சொட்டை என்பார்கள். இதுபோல, உடலில், முகத்திலும் காணப்படும். இந்த பாதிப்பு மனநிலையில் அழுத்தத்தை ஏற்படுத்தி, பலவித இன்னல்களை ஏற்படுத்தி விடும்.

இதுபோன்ற பாதிப்புகளை சரி செய்ய, தும்மட்டி காய் பேருதவி செய்யும். புழு வெட்டு எனும், முடி உதிர்ந்த இடங்களில், தும்மட்டிக் காயை எலுமிச்சை போல, இரண்டாக வெட்டி, அதனைக் கொண்டு, முடி இல்லாத இடங்களில் தினமும் நன்கு தடவி வர, பாதிப்புகள் மறைந்து, விரைவில் முடி வளர ஆரம்பிக்கு

எண்ணெய் தயாரிக்கும் முறை :
தும்மட்டி பழங்கள், நெல்லிக் காய்கள், கரிசலாங் கண்ணி இலைகள் இவற்றை சேகரித்து வைத்துக்கொண்டு, தும்மட்டிப் பழங்களின் விதை நீக்கிய சதைகளையும், நெல்லிக்காயின் கொட்டை நீக்கிய சதைப்பகுதிகளையும், அரைத்து விழுதாக்கிய கரிசலாங்கண்ணி இலைகளுடன் சேர்த்து, அரை லிட்டர் தேங்காய் எண்ணையில் ஊற வைத்து, பாத்திரத்தின் வாய்ப் பகுதியை வெண்ணிற துணி கொண்டு மூடி, சூரிய ஒளி படுமாறு வைக்க வேண்டும்.

முடி வளர்ச்சி அதிகரிக்கும்:
இது போல, ஒரு வாரம் வைத்து எடுக்க, எண்ணையில் கரிசலாங்கண்ணி இலை விழுது, தும்மட்டி மற்றும் நெல்லி விழுதுகள் நன்கு கலந்து கரைந்திருக்கும்.

இந்த எண்ணையை வடிகட்டி ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு, அதை தினமும் தலையில் முடி உதிர்ந்த இடங்களில் மற்றும் உடலில் புழு வெட்டு பாதிப்பு ஏற்பட்ட மற்ற இடங்களில் நன்கு தடவி வர, சில தினங்களில் பாதிப்புகள் விலகி, மீண்டும் முடி வளர ஆரம்பிக்கும்.

இந்த எண்ணையை தலை முழுவதும் தடவி வர, முடி உதிர்தல் பாதிப்பு குறைந்து, முடி நன்கு கறுப்பாகும். தினமும் இந்த எண்ணையை தடவி, சற்று நேரம் ஊற வைத்த பின்னர், குளிக்கும்போது, சிகைக்காய்த் தூள் கொண்டு, தலையை நன்கு அலசி குளித்து வர வேண்டும்.

நீர்க்கட்டி :
பெண்களின் கருப்பையில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் பாதிப்புகளால், நீர்க்கட்டிகள் மற்றும் சாக்லேட் சிஸ்ட் எனும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவை காரணமாக, அவர்களுக்கு மாத விலக்கு சமயங்களில் அதிகப்படியான வயிற்று வலி மற்றும் மகப்பேறு அடைய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமூட்டு வலி, சிறுநீரக கல் மற்றும் நீரிழிவை குண்மாக்க‌ இந்த பழச்சாறு மட்டும் போதும்!
Next articleமூட்டு வலியை, சர்க்கரை வியாதி மற்றும் கொலஸ்ட்ரால் விரைவில் குணமாகும் ‘சோளக் கருது நாரில்’ தேநீர் தயாரிக்கும் முறை!