மெக்சிக்கோவில் 49பயணிகளுடன் சென்ற பேரூந்து கோர விபத்து!! பலரின் நிலை!

0

Albuquerque–நியு மெக்சிக்கோவில் 49-பயணிகளுடன் சென்று கொண்டிருந்த கிரேஹவுன்ட் பேரூந்து ஒன்றும் செமி- டிரக் வண்டி ஒன்றும் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் 8-பேர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர். நியு மெக்சிக்கோவின் 1-40 நெடுஞ்சாலையில் விபத்து நடந்துள்ளது.

செமி-டிரக்கின் சக்கரம் ஒன்று பறந்ததால் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசோனா எல்லைக்கு அருகில் விபத்து நடந்துள்ளது.

10-பேர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இவர்களில் சிறுவர்களும் அடங்குவர். காயமடைந்தவர்கள் நியு மெக்சிக்கோ பல்கலை கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்

விரிவான விபரங்கள் தெரிய வரவில்லை. புலன்விசாரனை தொடர்கின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதாயின் அலட்சியத்தால் 7வது மாடியில் இருந்து விழுந்து 4 வயது சிறுமி பலி!
Next articleசெப்டம்பர் மாத ராசிப்பலன் – 2018