செப்டம்பர் மாத ராசிப்பலன் – 2018

0

கிரக மாற்றம்
1-9-2018 – துலாத்தில் சுக்கிரன்
2-9-2018 – சிம்மத்தில் புதன்
7-9-2018 – சனி வக்ர நிவர்த்தி
17-9-2018 – கன்னியில் சூரியன்
19-9-2018 – கன்னியில் புதன்

மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10-ல் பலமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குரு, சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியை உண்டாக்கும். மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் மாத பிற்பாதியில் வளமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது.

கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருப்பதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். வேலைபளு குறைவாகவே இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் சற்றே அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த நற்பலனை அடைய முடியும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும்.

சந்திராஷ்டமம் – 14-09-2018 இரவு 07.12 மணி முதல் 17-09-2018 அதிகாலை 04.51 மணி வரை.
பரிகாரம் -சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது, நவகிரகங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.

ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சூரியன், 6-ல் குரு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராகு 3-ல் இருப்பதால் நெருங்கியவர்களின் ஆதரவால் எதையும் எதிர் கொள்ளகூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறிது கஷ்டப்பட்டாலும் வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சற்று மந்தநிலை ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராது வகையில் கிடைக்கும் உதவியினால் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும்.

உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்த்து கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்ற கூடும். வேலை பளுவும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு தேவையற்ற நட்புகளின் சேர்க்கையால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். பயணங்களில் கவனமுடன் செயல்படுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 17-09-2018 அதிகாலை 04.51 மணி முதல் 19-09-2018 மாலை 05.22 மணி வரை.
பரிகாரம் – சனிபகவானை வழிபாடு செய்வதாலும், அனுமனை வழிபடுவதாலும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவுவதாலும் கஷ்டங்கள் குறைந்து நிம்மதி ஏற்படும்.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் தாராள தன வரவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகையால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் மன மகிழ்ச்சி உண்டாகும்.

திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள உதவும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள்.

சந்திராஷ்டமம் – 19-09-2018 மாலை 05.22 மணி முதல் 22-09-2018 காலை 06.15 மணி வரை.
பரிகாரம் -விநாயகர் வழிபாடு செய்வதும், விநாயகர் துதிகளை படிப்பதும் மற்றும் நவகிரக வழிபாடு செய்வதும் நல்லது.

கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் 6-ல் சஞ்சரிக்ககூடிய சனி வக்ர நிவர்த்தி அடைவதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுக்கு நிலவிய தடங்கல்கள் எல்லாம் விலகி முன்னேற்றம் ஏற்படும். மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மாத பிற்பாதியில் தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது.

பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமதநிலை ஏற்பட்டாலும் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

சந்திராஷ்டமம் – 22-09-2018 காலை 06.15 மணி முதல் 24-09-2018 மாலை 05.21 மணி வரை.
பரிகாரம் – ஞாயிற்றுக் கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவவழிபாடு செய்வதும், ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதையும் தைரியத்துடன் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள்.

கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. நம்பியவர்களே சில நேரங்களில் துரோகம் செய்ய துணிவார்கள். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகளில் தடை ஏற்படாது. எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்வதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற முடியும். வேலைபளு அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க முடியாமல் போகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 24-09-2018 மாலை 05.21 மணி முதல் 27-09-2018 அதிகாலை 01.58 மணி வரை.
பரிகாரம் -வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே தனக்கராகன் குரு 2-ல் வலுவாக சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். இம்மாதம் சூரியன் 12 மற்றும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும்.

குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

சந்திராஷ்டமம் – 30-08-2018 இரவு 08.05 மணி முதல் 02-09-2018 அதிகாலை 03.03 மற்றும் 27-09-2018 அதிகாலை 01.58 மணி முதல் 29-09-2018 காலை 08.28 மணி வரை.
பரிகாரம் – தினமும் விநாயகர் வழிபாடு செய்வது ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும்.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே வரும் 7-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்ககூடிய சனி வக்ர நிவர்த்தி அடைவது அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பணவரவுகள் சரளமாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். கடன்களும் சற்றே குறையும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும்.

பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது மட்டும் சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிட்டும்.

சந்திராஷ்டமம் – 02-09-2018 அதிகாலை 03.03 மணி முதல் 04-09-2018 காலை 07.32 மற்றும் 29-09-2018 காலை 08.28 மணி முதல் 01-10-2018 மதியம் 01.18 மணி வரை.
பரிகாரம் – சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்தால் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய், கேது சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் நல்ல பலன்களை அடைவீர்கள். மாத கோளான சூரியன் இம்மாதம் 10, 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் யாவும் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல லாபம் கிட்டும்.

பயணங்களால் தேவையற்ற அலைசல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப் பலனையும் அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை கை கால் அசதி சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும்.

சந்திராஷ்டமம் – 04-09-2018 காலை 07.32 மணி முதல் 06-09-2018 காலை 09.46 மணி வரை.
பரிகாரம் – சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது மூலம் மன சங்கடங்கள் குறையும்.

தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு அதிபதி குரு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் இம்மாதம் மாத கோளான சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் உங்களுக்கு நற்பலன்களை தரும் அமைப்பாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சிறப்புடன் செயல்பட்டு நற்பெயரை பெறுவீர்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும்.

தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சற்று அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பின் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார், உறவினர்களின் ஆதரவைப் பெற அவர்களிடம் விட்டு கொடுத்து செல்ல வேண்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வற்றாலும் அனுகூலப் பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த பணத்தை வசூலித்து விட முடியும். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலப்பலனை அடைய முடியும். மாணவர்கள் கல்வியில் கவனமாக இருப்பது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 06-09-2018 காலை 09.46 மணி முதல் 08-09-2018 காலை 10.31 மணி வரை.
பரிகாரம் – சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்தால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே ஜென்ம ராசியில் செவ்வாய், கேது 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருப்பது நல்லது. உடல் நிலையில் அஜீரணகோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு போன்றவை ஏற்பட கூடும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக தான் இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிறு தடைக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். ஆன்மீக காரியங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேற சற்று தாமதநிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். விளையாடும் போது கவனம் தேவை.
சந்திராஷ்டமம் – 08-09-2018 காலை 10.31 மணி முதல் 10-09-2018 காலை 11.10 மணி வரை.
பரிகாரம் – செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக கடவுளை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

கும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் ராகு 9-ல் குரு சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் 11-ல் சஞ்சரிக்ககூடிய சனி வக்ர நிவர்த்தி அடைவதால் தொழில் வியாபார ரீதியாக இருந்த தேக்கங்கள் விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலையும் உயரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தினாலும் அன்றாட பணிகளை சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும்.

ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் சேமிக்க முடியும். ஒரு சிலரின் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான லாபம் கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலப்பலன் ஏற்படும். உங்களுக்கு இருந்த வந்த கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. கல்வியில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் — 10-09-2018 காலை 11.10 மணி முதல் 12-09-2018 மதியம் 01.30 மணி வரை.
பரிகாரம் – பிரதோஷ காலங்களில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.

மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத தன சேர்க்கைகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரித்து அமைதியும் ஒற்றுமையும் நிலவும். பணம் கொடுக்கல்- சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும்.

உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் அவர்களால் வீண் பிரச்சினைகளும் ஏற்படும் என்பதால் சற்று அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபமும் அதிகரிக்கும். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளத் தொகைகள் கைக்கு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

சந்திராஷ்டமம் – 12-09-2018 மதியம் 01.30 மணி முதல் 14-09-2018 இரவு 07.12 மணி வரை.
பரிகாரம் – சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவதும், சனிக்கவசம் படிப்பதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதும் நல்லது.

சுப முகூர்த்த நாட்கள்
06.09.2018 ஆவணி 21 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை

12.09.2018 ஆவணி 27 ஆம் தேதி புதன்கிழமை திருதியை திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

20.09.2018 புரட்டாசி 04 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலாம் இலக்கினம். வளர்பிறை

23.09.2018 புரட்டாசி 07 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்தசி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

27.09.2018 புரட்டாசி 11 ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியை திதி அசுவினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை

30.09.2018 புரட்டாசி 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமெக்சிக்கோவில் 49பயணிகளுடன் சென்ற பேரூந்து கோர விபத்து!! பலரின் நிலை!
Next articleகடன் தொல்லைகளால் அவதிப்படுகின்றீர்களா? முருகப் பெருமானை இப்படி வழிபடுங்கள்!