மின்சாரத் தைலம் எப்படி செய்யலாம். என்றும் அதன் உபயோகம் எப்படி என்பதையும் பார்க்கலாம்!

0

முதலில் நாட்டு மருந்துக் கடையில் புதினா உப்பு (மென்தால், MENTHOL) , ஓம உப்பு (தைமால்,THYMOL) , கட்டிக் கற்பூரம் இம்மூன்றையும் சம அளவு வாங்கிக் கொள்ளவும் . புதினா உப்பு மிக விலை அதிகம் 10 கிராம் அளவு 25 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை பல இடங்களில் , பல விலையில் விற்கப்படுகிறது. தேவையான அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.

இந்த மூன்றையும் காற்றுப் புகாத ஓர் கண்ணாடிப் புட்டிலில் போட்டு கீழே கொடுத்துள்ள காணொளிக்காட்சியில் காட்டியுள்ளபடி குலுக்க உடனே புட்டியின் வெளிப்பகுதியில் குளிர்ச்சி தென்படும் அதே நேரத்தில் உள்ளே உள்ள மூன்று பொருளும் சேர்ந்து திரவ நிலைக்கு வந்துவிடும் . (இதுவே மின்சாரத் தைலம்.)

இந்த மின்சாரத் தைலம் மிகக் காரமானது.இதை வலியுள்ள மூட்டுக்கள் , இடுப்பு ,கை மூட்டுக்கள் , புஜம் போன்ற இடங்களில் ஓரிரு சொட்டுக்கள் எடுத்து தேய்க்க உடனே வலி பறந்தோடும்.( ஓரிரு சொட்டுக்கள் மட்டுமே தேய்க்க வேண்டும் , வலி இல்லையானால் கடும் எரிச்சல் ஏற்படும் . எனவே கவனம் தேவை.)

இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 10 சொட்டுக்கள் கலந்து உபயோகிக்க சாந்தமாக வேலை செய்யும்.சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப்பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும்.உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும். மேலும் ஒரு குச்சியில் மின்சாரத் தைலத்தை தொட்டு உதறிவிட்டு ஒரு வெற்றிலையில் அந்தக் குச்சியில் லேசாக ஒட்டிக் கொண்டு மிச்சம் இருக்கும் தைலத்தை தடவிக் கொடுக்க ஆஸ்துமா உடனே கட்டுக்குள் வரும். இதை அடிக்கடி பிரயோகம் செய்யக் கூடாது .

மிக முக்கியமான உபயோகத்திற்கு வருவோம் . பல்வலி என்றால் என்ன என்று பல்வலி வந்தவர்களைக் கேட்டால் தெரியும் . அவ்வளவு அவஸ்தை கொடுக்கும் பல்வலி இந்த மின்சாரத் தைலத்தைக் கண்டால் பறந்தோடும் . நீங்கள் தேய்க்கும் பற்பொடி எதுவானாலும் அதில் பத்து சொட்டு மின்சாரத் தைலத்தை விட்டு பல் தேய்த்துக் கொண்டு வர உங்கள் ஆயுளுக்கும் பல்வலி வராது .பல்லரணை,பற்குத்து,ஈறு வீக்கம்,ஈறுகளில் சீழ் வடிதல்,
வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது.

மிக முக்கியமாக ஒன்றை கூற விட்டுவிட்டோம் . பல் ஏதாவது எதிர்பாராது பட்ட அடியினால் உடைந்துவிட்டாலோ வேருடன் வந்து விட்டாலோ அந்தப் பல்லை அதே இடத்தில் வைத்து பக்கத்து பல்லுடன் நூலை சேர்த்து கட்டி அசைய விடாமல் வைத்துக் கொண்டு அதன் வேர்ப்பாகத்தில் அல்லது உடைந்த இடத்தில் இந்த மின்சாரத் தைலத்தை ஒரு சொட்டு விட்டு வர பல் மீண்டும் ஒட்டிக் கொள்ளும் . பழைய வலு திரும்பும் வரை மின்சாரத்தைலம் கலந்த பல் பொடியை தேய்த்து வர பல் பழைய வலுவுடன் ஆகும். அது வரை அதற்கு நேரடியாக அதிக பலமான உபயோகம் கொடுக்காமல் இருந்தால் போதும்.chemical விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும்.மூன்றிலும் தலா 50கிராம் வாங்கி கொள்ளவும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉயர் ரத்த அழுத்தமா? கவலை வேண்டாம்! மொச்சை கொட்டைகளை இப்படி சாப்பிடுங்க!
Next articleதர்பூசணி விதையை கொதிக்க வைத்து 3 நாட்கள் குடியுங்கள்.