மாதவிடாய் காலங்களில் பெண்கள் சந்திக்கும் இன்னல்கள், வலிகள் என்ன என்பதை வார்த்தையால் கூறிவிட முடியாது.
ஆம் முதன்முதலாக வயதிற்கு வரும் போது விழாவாக நடத்துகின்றது இந்த சமூகம். அதுவே அடுத்த மாதம் வந்துவிட்டால் அவள் தீண்டத்தகாதவளாக ஒதுக்கி வைக்கப்படுவது இன்னும் சில கிராமங்களில் இருந்து வருகின்றனர்.
வெளியே சென்று நாப்கின் வாங்குவதற்கு கூட பெண்கள் தயங்கிக் கொண்டிருக்கின்றனர். அதுவே ஆண்கள் சிகரெட்டை மிகவும் தைரியமாக கடைக்குச் சென்று வாங்குகின்றனர், சிறு குழந்தைகளை விட்டும் வாங்கி வரக் கூறுகின்றனர்.
ஆனால் ஒரு பெண் மாதவிடாய் நேரத்தில் தனது நாப்கினை ஒரு ஆணை விட்டு வாங்கி வரக்கோரினால் அது தவறா?… மேலும் இத்தருணத்தில் பெண்களின் வேதனை புரியாமல் ஒதுக்கி வைப்பது சரியா?.. என்பதை மிக அழகாக விளக்கியுள்ளது இந்த காட்சி…
மாதவிடாய் காலங்களில், பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாகக்கொண்டு கோவை அரசுக் கல்லூரி மாணவர்கள் ‘இனிதி’ என்ற பெயரில் நான்கு நிமிட பாடல் ஒன்றைத் தயாரித்துள்ளனர். இணையத்தில் தற்போது தீயாய் பரவிவரும் குறித்த பாடலும் இதோ…