பழம்பெரும் பாடலாசிரியர் மர(ண)ம்..!
சினிமா படங்களின் வெற்றிக்கு பாடல்களே பெரும்பாலும் உறுதுணையாக இருக்கின்றன அந்த படங்களுக்கு ஏற்றவாறு பாடல்களை அமைக்கும் பாடலாசிரியர்களின் பங்கு மிகமுக்கியமானதொன்றாகும்.
இந்த வகையில் 1962 தொடக்கம் சினிமாவில் பணியாற்றிய பாலிவுட் சினிமாவின் மூத்த பாடலாசிரியரான யோகேஷ் அவர்கள் மும்பையில் வசித்து வந்த நிலையில் நேற்று மர(ண)ம் அடைந்தார். அவருக்கு வயது 77. கடைசியாக 2018 ல் Angrezi Mein Kehte Hain என்ற படத்தில் பாடல் எழுதினார்.
இவரின் மறைவால் பாடலாசிரியர் ஜாவத் அக்தர் பல அற்புதமான பாடல்களை எழுதிய அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என வருத்தத்துடன் ஜாவத் கூறியுள்ளார்.மேலும் பிரபல டிவி நடிகர் சுமீத் ராகவன் டிவிட்டர் பக்கத்தில் ஆர்மோனியம் இசைத்தபடி யோகேஷின் பாடலை பாடி அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.
பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் இவர் எழுதிய பாடல்கள் நானும் பாடியுள்ளேன். அமைதியான, இனிமையான மனிதர் எனவும் கூறியுள்ளார்.
2018 mein humne Deenanath Puraskar se Yogesh ji ko sammanit kiya tha. pic.twitter.com/CgXCO9JCec
— Lata Mangeshkar (@mangeshkarlata) May 29, 2020
By: tamilpiththan