பல் வலி, பார்வை கோளாறு போக்கும் நந்தியா வட்டை !

0

1.பல் வலி போக்கும் நந்தியா வட்டை: அலங்கார தாவரமாக தோட்டங்களிலும், வேலியோரமாகவும் வளர்க்கப்படும் நந்தியா வட்டை பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. இலை, மலர், வேர், வேர்பட்டை, கட்டை, போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. கண்நோய், பல்நோய் போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் நந்தியா வட்டை பயன்படுத்தப்படுகிறது.

2.செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள், அதிக அளவில் காணப்படுகின்றன. சிட்ரிக், ஒலியிக் அமிலங்கள், டேபர்னோடோன்டைன், பாக்டீரியா எதிர்ப்பு அமிலம்.

3.பார்வை கோளாறு குணமடையும்: இலைகளின் பால் சாறு காயங்களின் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும். கண்நோய்களையும் குணப்படுத்த பயன்படுகிறது. நந்தியாவட்டப் பூ வானது நேந்திரகாசம், படலம் லிங்க நாச தோஷங்கள், சிரஸ்தாப ரோகம், ஆகியவற்றைக் கெடுக்கும். இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சி பெரும்.

நந்தியா வட்டைப்பூவும் தேள் கொடுக்கிலையும் ஓர் நிறையாகக் கசக்கிக் கண்களில் இரண்டொரு துளி விட்டுக் கொண்டு வர சில தினத்தில் கண்களில் காணும் பூ நீங்கும். மலர்களின் சாறு எண்ணெய் கலந்து பயன்படுத்தும் போது எரிச்சல் உணர்வை மட்டுப்படுத்தும். இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன் படுகின்றது. இது நிறத்திற்கும் பயன்படுகிறது. இதிலிருந்து அழியாத மை தயார் செய்கிறார்கள். நந்தியா வட்டப் பூ 50 கிராம், களாப் பூ 50 கிராம் 1 பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயில் ஊறவைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டுவர பூ, சதைவளர்ச்சி, பல வித கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.

4.பல் வலி நீக்கும்: நந்தியா வட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். கண் நோய் மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். வேர்ப்பட்டை வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. வேர் கசப்பானது. பல்வலி போக்கும். வலிநீக்குவி, கட்டை குளுமை தருவது. வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும்.

நந்தியா வட்டை முக்கியமான மூலிகைகளில் ஒன்றாகும். ஆயுர்வேத மருத்துவத்தில் இம்மூலிகை, பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. குறிப்பாக, கண்நோய் மற்றும் பல்நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நந்தியா வட்டையின் இலை, மலர், வேர், வேர்பட்டை, கட்டை, போன்ற அனைத்தும் மருத்துவ பயனுள்ளவை.

இதில், செயல்திறன் மிக்க வேதிப்பொருட்களான, அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள், அதிக அளவில் உள்ளன. சிட்ரிக், ஒலியிக் அமிலங்கள், டேபர்னோடோன்டைன், பாக்டீரியா எதிர்ப்பு சக்தி அமிலம் ஆகியவையும் உள்ளன.

கண் நோய்க்கு சிறந்தது: நந்தியா வட்டையின் இலைகளின் பாலை, காயங்களின் மேல் பூசினால் வீக்கம் குறையும். கண் நோய் நீங்கும். நந்தியா வட்டைப் பூ நேந்திரகாசம், படலம் லிங்க நாச தோஷங்கள், சிரஸ்தாப ரோகம் ஆகியவற்றை போக்கும்.

இதில் ஒற்றைப்பூ, இரட்டைப்பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுத்தால் கண் எரிச்சல் மற்றும் வலி நீங்கி குளிர்ச்சியாகும். நந்தியா வட்டைப்பூவை கசக்கி, கண்களில் இரண்டொரு துளி விட்டு வந்தால், சில தினங்களில் கண்களின் விழித்திரையில் படர்ந்துள்ள பூ மறைந்து போகும்.

மலர்களின் சாற்றை எண்ணெய் கலந்து பயன்படுத்தினால், கண் எரிச்சல் குறையும். நந்தியா வட்டை பூக்கள் வாசனையூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது. அழியாத மை தயாரிக்க, நிறமூட்டியாகவும் பயன்படுகிறது. நந்தியா வட்டைப்பூ, 50 கிராம், களாப்பூ, 50 கிராம் ஆகியவற்றை ஒரு பாட்டிலில் போட்டு, நல்லெண்ணெயில் ஊற வைத்து, 20 நாட்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளிகளை காலை மாலை கண்ணில் விட்டு வந்தால், கண்ணில் படரும் பூ, சதை வளர்ச்சி மற்றும் பலவித கண் நோய்கள் மற்றும் பார்வை குறை நீங்கும்.

பல் நோய்க்கு நந்தியா வட்டை வேரை, கஷாயமிட்டுக் குடித்தால் வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். தோல் நோய்கள் குணமாகும். வேர்ப்பட்டையின் கசப்பு தன்மை வயிற்றுப் பூச்சியை கட்டுப்படுத்தும். பல்வலி போக்கும். நந்தியாவட்டை வேரை வாயிலிட்டு மென்று துப்பினால் பல் வலி நீங்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதீராத தோல் நோய்கள், நீரிழிவுப் புண்கள், சோரியாஸிஸ் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் ஹோமியோபதிச் சிகிச்சை !
Next articleபார்வை நரம்புகளை பலப்படுத்தி கண்களுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள் இவை தான் !