தலைச் சுற்றல், மயக்கம், மன நோய், நெஞ்சு எரிச்சல், மார்பு வலி, வாயுத் தொல்லை, பித்தம், வயிற்றுப் பொருமல், கல்லீரல் கோளாறு, நரம்புத் தளர்ச்சி என்பன குணமாக சீரகத்தை இப்படி பயன்படுத்துங்க!!

0

* சீரகத்தை வாயில் போட்டு, குளிர்ந்த தண்ணீரை குடித்தால், தலைச் சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

* திராட்சை ஜூஸுடன், சீரகம் கலந்து பருகி வர, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், மன நோய் குணமாகும்.

* சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து, கொட்டைப்பாக்கு அளவு சாப்பிட்டு வந்தால், நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
* சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து உலர்த்தி, துாளாக இடித்து, ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை, தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு, மோர் குடித்து வந்தால், மார்பு வலி நீங்கும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து பருகினால், வாயுத் தொல்லை நீங்கும்.
* சீரகத்தை இஞ்சி மற்றும் எலுமிச்சம் பழ சாற்றில் கலந்து, ஒருநாள் ஊற வைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம், மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் குறையும்.
* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றை பொடித்து, தேனில் கலந்து சாப்பிட்டால், எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தை பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.
* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறுடன் சேர்த்து பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன், கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெற்று, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
*சீரகத்தை துாள் செய்து, தேனுடன் கலந்து லேகியமாக தர, ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாவர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசளி பிடுத்திருக்கா அத வெளியேற்றணுமா? எட்டு வழிகள்! இத செய்யுங்க!
Next articleபல்லியைக் ஏன் கொல்லக் கூடாது !!