நெஞ்சக சளியை கரைத்து, பல நோய்களுக்கு உடனடி நிவாரணம் தரும் இந்த பூ பற்றி உங்களுக்கு தெரியுமா!

0

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.

அந்தவகையில், வெள்ளைபோக்கு, உடல் சோர்வு, தோல்நோய்களுக்கு மருந்தாக விளங்கும் வெட்சி பூவின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.அழகுக்காக வளர்க்கப்படுவது வெட்சி பூ செடி.

இதற்கு இட்லி பூ என்ற பெயரும் உண்டு. வெட்சி செடியின் பூ, இலைகள் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. இது, வெள்ளைபோக்கு, வயிற்றுப்போக்கை நிறுத்த கூடியது. நெஞ்சக சளியை கரைத்து வெளியேற்றும். ரத்தம் கலந்து சளி வெளியேறும் பிரச்னையை தீர்க்க கூடியது. வெட்சி செடியின் இலைகளை அரைத்து போடும்போது தோல்நோய்கள் குணமாகும். கொப்புளங்கள், அரிப்பு, தடிப்பை சரிசெய்யும்.

அடிபட்ட இடத்தில் தசை நசுங்கி ரத்தநாளங்கள் சீர்கெட்டு போகும் நிலையில் மேல்பற்றாக போடும்போது புண்கள் விரைவில் ஆறிப்போகும்.

வெட்சி பூவை பயன்படுத்தி உடல் சோர்வு, காய்ச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: வெட்சி பூ, பனங்கற்கண்டு.
செய்முறை: பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விட்டு வெட்சி பூ போடவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர காய்ச்சல் குணமாகும். உடல் அசதி சரியாகும். கழிச்சல், சீத கழிச்சல் இருக்கும்போது இதை காலை, மாலை குடித்துவர கழிச்சல் சரியாகும்.

பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய வெட்சி பூ, உடல் சூட்டை தணிக்கும். வியர்வையை தூண்ட கூடியது.

காய்ச்சலை தணிக்கும். வலியோடு கூடிய மாதவிலக்கு, முறைதவறி வரும் மாதவிலக்கு, வெள்ளைபோக்கு பிரச்னைக்கு மருந்தாகிறது.வெட்சி பூவை பயன்படுத்தி வெள்ளைப்போக்கு பிரச்னையை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: வெட்சி பூ, மோர்.செய்முறை: வெட்சி பூவை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதை மோரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும். கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும். புற்றுநோய் வராமல் தடுக்கும். வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தாக இது விளங்குகிறது.

வெட்சி பூவை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பை சரிசெய்யும் தைலம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: வெட்சி பூ, தேங்காய் எண்ணெய்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் நீர்விடாமல் அரைத்த வெட்சி பூவை சேர்த்து தைலமாக காய்ச்சவும்.

இதை வடிகட்டி பூசிவர தோல்நோய்கள் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். தலையில் தேய்த்து குளித்துவர பொடுகை போக்கி முடிக்கு வளத்தை கொடுக்கிறது.
வெட்சி பூ இலைகளை பசையாக்கி பூசுவதால் அடிபட்ட வீக்கம் வற்றிப்போகும்.

தசை சிதைவு, நரம்புகளில் சிதைவு, ரத்த நாளங்களில் ஏற்படும் சிதைவு ஆகியவற்றை சரிசெய்யும் அற்புதமான மருந்தாக இந்த பசை விளங்குகிறது.மூட்டு வலியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: முருங்கை பட்டை, கடுகு. செய்முறை: முருங்கை பட்டையை சிதைத்து சிறிது கடுகு சேர்த்து கலந்து பூசிவர மூட்டுவலி குணமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாத வெடிப்பினால் வலியை விரைவில் குணமாக்கும் மருதாணி இலைகள்!
Next articleவழுக்கையா? ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் முடி வளரும்! நம்ப முடியவில்லையா? ஓர் அற்புத இயற்கை மருத்துவம்!