இந்தியாவில் திருமணத்தின் போது மணமக்களின் மீது பணமழை பொழிந்த வீடியோ வைரலாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சுஷந்த் கோதா. இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார்.
சுஷந்துக்கும், மேக்னா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தின் போது மணமேடையில் தம்பதிகள் நின்றிருந்தனர்.
அப்போது அவர்களின் குடும்பத்தார் லட்சக்கணக்கில் பணத்தை ஒரு கூடையில் வைத்து கொண்டு வந்தனர்.
பின்னர் அதை அப்படியே சுஷாந்த் மற்றும் மேக்னா மீது கொட்டினார்கள். இதனால் தம்பதி இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
கீழே விழுந்து சிதறிய ரூபாய் நோட்டுகளை அங்கிருந்த சிறார்கள் எடுத்தபடி இருந்தார்கள். இது சம்மந்தமான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: