இலங்கை ஒருநாள் அணிக்கு இவர் தான் புதிய கேப்டனா! ஆவலோடு எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

0

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு திமுத் கருணரத்னேவை கேப்டனாக நியமிப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறது.

இந்தாண்டு விளையாடிய 8 ஒரு நாள் போட்டிகளிலும் அந்த அணிக்கு தோல்வியே மிஞ்சியது.

பரிசோதனை முயற்சியாக கேப்டன் பதவி மலிங்காவிடம் வழங்கப்பட்ட நிலையில் அவரது கேப்டன்ஷிப் குறித்து அணி நிர்வாகம் திருப்தி அடையவில்லை.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் வேளையில் கேப்டனை மாற்றுவது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது. சமீபத்தில் டெஸ்ட் தொடருக்கு திமுத் கருணாரத்னே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அவரது தலைமையில் இலங்கை அணி தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. அங்கு டெஸ்ட் தொடரை வசப்படுத்திய முதல் ஆசிய அணி என்ற சிறப்பையும் பெற்றது.

இதனால் கருணாரத்னேவுக்கு கேப்டன் பதவியை கொடுக்கலாமா? என்பது குறித்து அணி நிர்வாகம் சிந்திக்க தொடங்கியுள்ளது.

டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்ட கருணாரத்னே 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

30 வயதான கருணாரத்னே இதுவரை 17 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 190 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நான் தான் கேப்டன் என்று எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

ஆனால் ஒரு நாள் போட்டி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக என்னிடம் தேர்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால் கிளப் போன்ற தொழில்முறை போட்டியை தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அதற்கு தயாராவதற்கு பயிற்சி முகாம்களில் பங்கேற்க வேண்டி இருக்கும். அவ்வாறு நிகழ்ந்தால் இங்கிலாந்தின் கவுண்டி அணியான ஹாம்ஷைர் அணிக்கு நான் விளையாட முடியாமல் போகலாம் என கூறியுள்ளார்.

கருணாரத்னேவை தவிர, மலிங்கா, மேத்யூஸ், சன்டிமால் ஆகியோரும் கேப்டன் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிருமணத்தின் போது இன்ப அதிர்ச்சியில் சிலையாக நின்ற மணமக்கள்! காரணம் என்ன! ஆச்சரியப்படுத்தும் வீடியோ!
Next article12 வயது தங்கையின் தலையை வெட்டிகொலை செய்த 3 அண்ணன்கள்! அதிர்ச்சி பின்னணி!