பொள்ளாச்சி பாலியல் விவகாரம்! திருநாவுக்கரசு வாக்குமூலத்தால் சிக்கும் மற்றொரு இளைஞர்! வெளியான அதிர்ச்சி தகவல்!

0

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தற்போது வரை நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்றொரு இளைஞரை காவல் துறையினா் கைது செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாசமாக படம் பிடித்து தொடா்ந்து மிரட்டி வந்த கும்பல் ஒன்று அண்மையில் காவல் துறையிடம் சிக்கியது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணையில் உள்ளது. வழக்கு தொடா்பாக தற்போது வரை திருநாவுக்கரசு, சதீஷ் உள்ளிட்ட நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதில் சிபிசிஐடி காவல் துறையினா் திருநாவுக்கரசுவை மட்டும் காவலில் எடுத்து விசாரித்துள்ளனா். இந்த விசாரணையில் அவா் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தொிவித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவா் கடந்த சில காலமாக பெரிய கும்பல் ஒன்றுக்கு மாதம் ரூ.2 லட்சம் வரையில் செலவு செய்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் ரூ.2 லட்சம் செலவு செய்யும் பட்சத்தில், திருநாவுக்கரசு இதன் மூலம் எவ்வளவு பணம் பார்த்தார் பெண்களை மிரட்டி ஆபாசமாக படம் எடுத்து அதன் மூலம் பணம் பறித்தாரா? இதில் மேலும் பல பிரபலங்களுக்கு தொடா்பு உள்ளதாக என்பது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்னொரு இளைஞருக்கும் தொடர்பு
திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இளைஞா் ஒருவா் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்படலாம் என்றும், அவரைத் தொடா்ந்து மேலும் சிலா் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த இளைஞா் ஓரிரு நாளில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅதிகமாக பப்பாளி சாப்பிட்டால் ஆபத்தா! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
Next articleதிருமணத்தின் போது இன்ப அதிர்ச்சியில் சிலையாக நின்ற மணமக்கள்! காரணம் என்ன! ஆச்சரியப்படுத்தும் வீடியோ!