திருநாவுக்கரசின் அதிர வைக்கும் பின்னணி! மிரண்டு போன சிபிசிஐடி பொலிஸ்!

0

பொள்ளாச்சி செக்ஸ் மாஃபியா கும்பல் தலைவனை வைத்து நடத்தும் விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியான நிலையில், சிபிசிஐடி மிரளவிடும் அளவிற்கு திருநாவுக்கரசின் பின்னணி இருந்துள்ளது.

பொள்ளாச்சி எம்ஜிஆர் நகர் சபரிராஜன் என்ற ரிஸ்வந்த், மாக்கினாம்பட்டி திருநாவுக்கரசு, சூளேஸ்வரன்பட்டி சதீஷ், பக்கோதிபாளையம் வசந்தகுமார் ஆகியோர் மீது, கடந்த மாதம் 24ஆம் தேதியன்று பாலியல் புகார் அளித்தார் ஒரு இளம்பெண். பொள்ளாச்சி கிழக்கு பொலிசாரால் நால்வரும் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வெளியான வீடியோவொன்றில், இவர்களால் இரண்டு இளம்பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியதை அடுத்து முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீடுகள் மற்றும் குடியிருக்கும் வீடுகளிலும் பொலிசார் சோதனை நடத்தினர். அங்கு வசிக்கும் பொதுமக்களிடமும் விசாரித்தனர். சிபிசிஐடி பொலிசார். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான நிலையில், சிபிசிஐடி மிரளவிடும் அளவிற்கு திருநாவுக்கரசின் பின்னணி இருந்துள்ளது.

திருநாவுக்கரசின் குடும்ப பின்னணி, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள சின்னப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் கனகராஜின் 2-வது மனைவிக்கு பிறந்த மகன்தான் இந்த திருநாவுக்கரசு. தந்தை கனகராஜிக்கு ஆரம்பகாலங்களில் வசதி வாய்ப்புகள் குறைவு. டீத்தூள் வியாபாரம் பண்ணியிருந்துள்ளார். இவரது முதல் மனைவி சொந்தக்கார பெண் தான். அவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் திருமணத்தின்போது 100 பவுன் நகை வரதட்சணையாக வந்ததால் அதை விற்று வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை தொடங்கியுள்ளார் கனகராஜ்.

கடந்த 2002, 2003ம் ஆண்டுகளில் மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்ட நேரத்தில் 2, 3 ஏக்கர் நிலம் வைத்திருந்த விவசாயிகள் பலரும் கடும் சிரமத்திற்கு ஆளான சின்னப்பம்பாளையம், தாத்தூர், சுப்பேகவுண்டன் புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளை தேடிப்பிடித்து அதிக வட்டிக்கு கடன் கொடுத்துள்ளார் கனகராஜ். அதற்கு ஈடாக கடன் வாங்கிய விவசாய நிலங்களை எழுதி வாங்கிக்கொண்டார். இதனால் 80 ஏக்கர் நிலங்களுக்கு மேல் வந்துள்ளது.

கூடுதல் வட்டிக்கு விட்டதால் கனகராஜிடம் கோடிக்கணக்கில் பணம் புரண்டது. கனகராஜிக்கு முதல் மனைவி மூலம் 2 மகள்கள் பிறந்துள்ளனர். அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை கனகராஜ் பிரிந்தார். ஆனால் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சமாக கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கனகராஜ் 2வதாக திருமணம் செய்து கொண்ட லதாவுக்கு பிறந்தவர்தான் திருநாவுக்கரசும் அவரது தங்கை ஆவர். தங்கை பல் டாக்டருக்கு படித்து வருவதாக கூறப்படுகிறது.

திருநாவுக்கரசு காலேஜ் படிக்கும் போதே தனது தந்தை கனகராஜின் வட்டித் தொழிலையும் பார்த்து வந்துள்ளார். இதனால் பணம் அதிகளவில் புரண்டதால் பெண் மீது மோகம் வந்துள்ளது. இந்த சமயத்தில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரின் காரை திருநாவுக்கரசு தனது நண்பர்களுடன் சேர்ந்து கொளுத்தியிருக்கிறார்.

அதிக வட்டியால் தங்கள் சொத்துக்களை இழந்த சின்னப்பம்பாளையம் பகுதி மக்கள் கனகராஜிக்கு எதிராக பொலிசில் புகார், மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்பே பொலிசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு மற்றும் நண்பர்கள் சிலரை கைது செய்தனர். இதனால் தனக்கு பெரிய அவமானம் ஏற்பட்டுவிட்டதாக கருதிய கனகராஜ் குடும்பத்தோடு சின்னப்பம்பாளையத்தை காலி செய்து பொள்ளாச்சிக்கு சென்றுவிட்டார். அதிலிருந்து சின்னப்பம்பாளையம் பண்ணை வீட்டிற்கு வருவதை தவிர்த்துள்ளதால் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் திருநாவுக்கரசு கடந்த 2 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்வதாகவும் இருந்ததாம். அடிக்கடி அந்த பெண்ணுடன் சின்னப்பம்பாளையம் வீட்டிற்கும் வந்தும் தங்குவாராம். ஆனால் திருநாவுக்கரசின் சில தகாத செயல்கள் அந்த பெண்ணுக்கு பிடிக்காமல் போயுள்ளது. இதனால் அந்த பெண் மனம் நொந்து நாளடைவில் அவரை வெறுக்க தொடங்கினார். விட்டு விலகியும் சென்றுவிட்டதாக கூறுகிறார்கள்.

அதனை தொடர்ந்து திருநாவுக்கரசு திருமணம் செய்து கொள்ளவில்லை. அடிக்கடி தனது நண்பர்களுடன் காரில் பெண்களை அழைத்து வரும் திருநாவுக்கரசு சின்னப்பம்பாளையம் பண்ணை வீட்டிற்கு வந்து தங்குவார். சரக்கு போட்டு கும்மாளமிடுவது வாடிக்கையாக இருந்தது. பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு போட்டோ, வீடியோக்கள் எடுப்பதுமாக இருந்துள்ளார். திருநாவுக்கரசையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்ததோடு மட்டுமின்றி, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கிராம மக்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

சின்னப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிலர் தெரிவித்த தகவலில், அங்கு உள்ள வீட்டுக்கு கனகராஜ் மற்றும் திருநாவுக்கரசு வந்து செல்வார்கள். வீடு எப்போதும் பூட்டியே இருக்கும். ஆனால் வீட்டுக்குள் மின்விசிறி சுற்றும். சில வேளைகளில் ஆட்கள் இருப்பது போல் சத்தம் கேட்கும். நள்ளிரவு முழுவதும் அதிகமாக சத்தம் கேட்கும், அடிக்கடி அதிகாலை வேளையில் அந்த வீட்டில் இருந்து கார் புறப்பட்டு செல்லும். பெரும்பாலும் இரவு 11 மணிக்கு மேல் காரில் திருநாவுக்கரசு பெண்களுடன் வருவார். இதனை யாராவது பார்த்தாலும் நமக்கு ஏன் பிரச்சினை என்று விட்டுவிடுவார்கள். மேலும் அவர்களிடம் பணபலம், விஐபிகளின் பின்னணியும் உள்ளது என்பதால் அவர்கள் வீட்டை பற்றியும், அவர்களை பற்றியும் வெளியே சொல்வது இல்லை.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிகாலையில் இரு பெண்கள் ஆட்டோவில் வந்து இறங்கினர். அப்போது அவர்களிடம் விசாரித்தபோது, எங்களுடன் உல்லாசமாக இருந்த திருநாவுக்கரசு ஆனைமலைக்கு தனது காரில் அழைத்துச் சென்று எங்கள் ATM கார்டை வாங்கி அனைத்து பணத்தையும் எடுத்துக்கொண்டு எங்களை தவிக்கவிட்டு சென்று விட்டார் என்று புலம்பினர். அந்த பெண்கள் யார்? என்பது தெரியவில்லை. அவர்கள் கல்லூரி பெண்களைப்போல அழகாக இருந்தனர்.

மேலும், சமீபத்தில் இதே பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டிற்கு சென்று அதிகாலையில் ஒரு இளம் பெண் தன்னை காப்பாற்றும்படி கதறி அழுதுள்ளார். அப்போது அந்த பெண் தன்னை திருநாவுக்கரசு ஏமாற்றிவிட்டதாக கதறி அழுதுள்ளதால், அந்த பெண்ணை பத்திரமாக சொந்த ஊருக்கு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார்கள் கிராம மக்கள்… இந்நிலையில் திருநாவுக்கரசின் செக்ஸ் லீலைகள் நாட்டையே கதிகலங்க வைத்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்று உங்களது தகுதியை வளர்த்துக்கொள்ள எவ்வாறு செயற்படப்போகிறீர்கள்!
Next articleஜிம்மில் குத்தாட்டம் போடும் இளம் பெண்! உடல் எடையை குறைக்க இப்படி ஒரு வழியா! தீயாய் பரவும் காட்சி!