இந்தியாவில் தன்னை கடித்த பாம்பை துண்டு துண்டாக கடித்து துப்பிய வாலிபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உத்தரபிரதேசத்தின் அஸ்ரோலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், நேற்று மதுபோதையில் வீட்டில் படுத்திருந்தவரை விஷ பாம்பு ஒன்று கொத்தியுள்ளது.
இதனால் ஆத்திரத்தில் பாம்பை பிடித்து கடித்து துப்பியுள்ளார், இதில் பாம்பின் விஷம் உடலில் ஏறியதால் மயங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக பாம்பையும் எடுத்துக்கொண்டு ராஜ்குமாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: