சுளீர் வெயில் பெருகும் வியர்வை என கோடையைச் சமாளிக்க சில பாரம்பரிய டிப்ஸ்!

0

சுளீர் வெயில்… பெருகும் வியர்வை… என கோடையைச் சமாளிக்க சில பாரம்பரியப் பொருட்கள் நமக்கு உதவும். சுடும் வெயிலில் இருந்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடல் நலனையும் பாதுகாக்கும் பொருட்கள் இங்கே…

நன்னாரி சிரப்

உடல் வெப்பம் தணிய சிறந்த மூலிகை நன்னாரி. வெயில் காலத்தில் வரும் நோய்களான நீர்க்கடுப்பு, மூலச்சூடு, வெட்டைச்சூடு, பித்தம் அதிகரித்தல் ஆகிய பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வு. தினமும் பருக ஏற்ற பானம் இது. சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

தண்ணீர் குவளை

குளிர்சாதனப் பெட்டியில் வைத்த நீரைக் குடிப்பது உடலுக்கு நல்லது இல்லை. இயற்கையான முறையில் ‘சில்’ என்ற நீரைக் குடிப்பதால், வெயில் காலத்துக்கு இதமாக இருக்கும். அதற்கான பிரத்யேகக் குவளை இது. பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலைப் பயன்படுத்தாமல், மண்ணால் ஆன ஜக்கில் தண்ணீரைப் பிடித்து, சில மணி நேரங்கள் வைத்திருந்து குடிக்கலாம்.

சீயக்காய்த் தூள் (250 கிராம்)

‘சீயக்காயைக் காயவைத்து, அரைத்துக் குளிக்க நேரம் இல்லை’ என்று சொல்வோருக்குச் சிறந்த மாற்று. வெயில் சூட்டைத் தணிக்க, வாரம் இருமுறை எண்ணெய்க் குளியலுக்கு இந்த சீயக்காய்த் தூளைப் பயன்படுத்தலாம். கூந்தலும் ஆரோக்கியமாக வளரும்.

நாட்டுச்சர்க்கரை (1/2 கிலோ)

பிரதான இனிப்பு சுவையூட்டியாக இருந்தது. வாதம் மற்றும் செரிமானப் பிரச்னைகளைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. அடிக்கடி தொண்டை வலி, தொற்று ஏற்படாமல் தடுக்கும் திறன் இந்த நாட்டுச்சர்க்கரைக்கு உள்ளது.

கருப்பட்டி (பனை வெல்லம்) (1/2 கிலோ)

ஆயுர்வேத மருந்துகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது பனைவெல்லம்தான். வாதம், பித்தம் நீங்கும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொல்லைகள் அருகில் வராது. உடல் உஷ்ணம், நீர்க்கடுப்புக்கு பனை வெல்லத்தால் தயாரிக்கப்பட்ட பானம் சிறந்த மருந்தாக அமையும்.

வெட்டி வேர்

வெட்டி வேர் இருந்தால் வெயிலைச் சுலபமாகச் சமாளிக்கலாம். வெட்டி வேர் மணப்பாகு, சர்பத் எனப் பல வகைகளில் வெட்டி வேரைப் பயன்படுத்த முடியும். மேலும், கூந்தல் எண்ணெய், பருக்கள் நீங்க, தழும்புகள் மறைய என அழகு தொடர்பான பிரச்னைகளுக்கும் மருந்தாகும்.

மூலிகைக் குளியல் பொடி (100 கிராம்)

வியர்வை துர்நாற்றத்தைப் போக்கும். தினசரி குளியல் பொடியாகப் பயன்படுத்தலாம். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். எந்தவித ரசாயனமும் இல்லாததால், அலர்ஜியை ஏற்படுத்தாது. வியர்க்குரு, சூட்டுக் கட்டிகள் வராமல் தடுக்கும்.

பேபி சோப்

குழந்தைகளின் மிருதுவான சருமத்தைப் பாதுகாக்க, இயற்கை சோப்பைப் பயன்படுத்தினால் நல்லது. இதில், பாதாம் எண்ணெய், பழங்கள் மற்றும் காய்கறிகள் எக்ஸ்ட்ராக்ட் இருப்பதால், சருமத்துக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசுக்கு காபி மருத்துவ பயன்கள்: sukku kaapi payangal சுக்கின் பயன்கள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்! சுக்கு காபி மருத்துவப் பயன்கள்!
Next articleஎண் 5 (5, 14, 23) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்!