இந்த நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது வாழ்க்கையில் எல்லையில்லா பிரச்சினைகளை உண்டாக்கும் தெரியுமா!

0

சந்தான தர்மத்தின் படி வாழ்க்கையில் ஒவ்வொன்றுக்கும் இரு சரியான நேரம் இருக்கிறது. சாப்பிட, தூங்க, வேலைக்கு செல்ல என எப்படி அனைத்திற்கும் ஒரு நேரம் இருக்கிறதோ அதேபோல உறவில் ஈடுபடுவதற்கும் ஒரு சரியான நேரம் உள்ளது. சாஸ்திரங்களின் படி தவறான நேரத்தில் உறவு கொள்வதோ அல்லது புனிதமான நாட்களில் உறவு கொள்வதோ பாவமான செயலாக கருதப்படுகிறது. இதற்கு இந்த ஜென்மத்தில் இல்லையென்றாலும் அடுத்த ஜென்மத்தில் தண்டனை அனுபவிப்பார்கள்.

சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு மனதால் இணைந்திருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு உடல் அளவிலும் இணைந்திருப்பது அவசியமாகும். ஆனால் நினைத்த நேரத்திற்கெல்லாம் உறவில் ஈடுபடுவது உங்கள் மணவாழ்க்கையை பாதிப்பதுடன் உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். இந்த பதிவில் எந்தெந்த நாட்களில் உறவில் ஈடுபடுவது உங்கள் வாழ்க்கையில் ஏழ்மையையும், துயரத்தையும் ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்

பிரம்ம வைவர்த்த புராணத்தின் படி தம்பதியினர் சூரியன் உதிக்கும் நேரம் மற்றும் மறையும் நேரத்தில் உறவில் ஈடுபடக்கூடாது. இது அவர்கள் வாழ்வில் ஏழ்மையை உண்டாக்குவதோடு நிம்மதியையும் கெடுக்கும்.

மகாபாரதத்தின் படி நிலவில்லாத அமாவாசை நாட்களில் தம்பதியினர் உறவில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் இந்த பாவச்செயல் அந்த தம்பதிகள் தங்களின் மறுபிறவியில் எறும்பாகவோ அல்லது ஊர்ந்து செல்லும் உயிரினங்களாகவோ பிறப்பார்கள்.

சதுர்த்தசி நாட்களில் ஆணும், பெண்ணும் கலவியில் ஈடுபடக்கூடாது. ஏனெனில் இந்த நாளில் பலரும் விரதத்தில் ஈடுபட்டிருப்பார்கள். அந்த நேரத்தில் உடல்ரீதியான தொடர்புகளில் ஈடுபடுவது புனிதமான செயலாக கருதப்படுகிறது.

அஷ்டமி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக வடஇந்தியாக்களில் இது தேவி துர்க்கைக்காக கொண்டாடப்படும் முக்கியமான நாளாகும். இந்த பக்தியான நாளில் உடலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கிரகணம் என்பது பொதுவாக எந்த செயலை செய்வதற்கும் தகுந்த நேரமல்ல என்று கருதப்படுகிறது. அப்படி இருக்கையில் இது எப்படி உறவில் ஈடுபட ஏற்ற நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் உறவில் ஈடுபடுவது உங்களுக்கு துர்சகுனமாக இருப்பதுடன், பிறக்க போகிற குழந்தைக்கும் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

ஜென்மாஷ்டமி என்பது கிருஷ்ண பரமாத்மாவின் பிறந்த நாளாகும். எனவே அந்த நாளில் உங்கள் நேரம் அவரை வணங்குவதில் இருக்க வேண்டுமே தவிர உறவில் ஈடுபடுவதை பற்றி நினைக்கக்கூடாது. அவ்வாறு ஈடுபடுவது கிருஷ்ணரின் கோபத்திற்கு உங்களை ஆளாக்கும்.

ஜென்மாஷ்டமியை போலவே ராம நவமி என்பது இராமரின் பிறந்த தினமாகும். அந்த நாளில் ராமரை வழிபடுவது உங்களுக்கு சிறந்த பலன்களை அளிக்கும். எனவே அந்நாளில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை தவிர்த்து உங்கள் துணையுடன் ராமரை வழிபடுங்கள்.

சிவராத்திரி சிவபெருமானுக்காக கொண்டாடப்படும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். இந்த நாளில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவது என்பது உங்களுக்கு அளவற்ற புண்ணியத்தை வழங்கும். அதேசமயம் இந்நாளில் உறவில் ஈடுபடுவது உங்களுக்கு ஈசனின் கோபத்தையும், சாபத்தையும் பெற்றுத்தரும்.

நவராத்திரி என்பது துர்கை தேவிக்காக 9 நாட்கள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் முக்கியமான விழாவாகும், இந்த நாட்களில் விரதமிருந்து துர்கயை வழிபடுவது நீங்கள் விரும்பும் அனைத்தையும் நிறைவேற்றித்தரும். விரதத்தில் ஈடுபட்டிருக்கும்போது உறவில் ஈடுபடுவது பெரிய பாவமாகும்.

உங்கள் பிறந்தநாள் என்பது வாழ்வில் மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான நாளாகும். ஆனால் இந்த நாளில் உறவில் ஈடுபடக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 08.02.2019 வெள்ளிக்கிழமை !
Next articleஅப்படியான சந்தர்ப்பத்தில் பெண்கள் அழுவது ஏன் ! தெரிந்து கொண்டால் புரிந்து நடந்து கொள்ளலாம் !