பாலை தினமும் குடித்து வந்தால் நீரிழிவு நோயிற்கு உதவும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். குறிப்பாக பாலை குடித்தால் சர்க்கரையின் அளவை அன்றைய நாள் முழுவதுமே குறைவாக வைத்து கொள்ளும் ஆற்றல் பாலிற்கு உள்ளது. இந்த கண்டுபிடிப்பு முக்கியமாக டைப் 2 நீரிழிவு நோயிற்கு உதவும்.
எப்படி பால் குடித்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். இதற்கு முழு காரணமும் புரதம் தான். பாலில் உள்ள அதிக புரத சத்தே சர்க்கரையை நோயை கட்டுக்குள் வைக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், இது அடிக்கடி பசி எடுப்பதையும் தடுக்கும்.
பாலை காலை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். மற்ற நேரத்தை காட்டிலும் காலை நேரமே சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த நேரம் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அத்துடன் இது உடல் பருமன் ஆவதையும் தடுத்து விடும்.
கிட்டத்தட்ட 60,000 பேரை கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் டப்ட் பல்கலைக்கழகம் இணைத்து நடத்திய இந்த ஆய்வில் 60,000 பேரை தினமும் காலை உணவில் பால் சேர்த்து உண்ண சொன்னார்கள். இவ்வாறு செய்வதன் விடையாக, சர்க்கரை நோயிற்கு ஒரு தீர்வு கிடைத்தது.
இந்த ஆய்வின் முடிவில் மேலும் சில முடிவுகள் கிடைத்தது. அதாவது, டைப் 2 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பால் சிறந்த உணவாக இருக்கிறதாம். மேலும், பாலை குடித்து வருவதால் டைப் 2 சர்க்கரை நோய் எளிதில் கட்டுக்குள் வருமாம்.
நாம் அன்றாடம் குடிக்கும் பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பால் குடித்து வருவதால் உடலின் நலன் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது. 1 கப் பாலில் உள்ள சத்துக்கள்.
புரதம் 8 கிராம்
கொழுப்பு 8 கிராம்
கால்சியம் 28%
பாஸ்பரஸ் 22%
வைட்டமின் பி2 18%
வைட்டமின் டி 24%
பொட்டாசியம் 10%
செலினியம் 13%
பால் சார்ந்த உணவுகளை எடுத்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக யோகர்ட், தயிர், நெய் போன்றவை சிறந்த பால் சார்ந்த உணவுகள். இவற்றை உணவில் அளவாக சேர்த்து கொள்வதால் சர்க்கரை நோயாளிகளுக்கும், சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கும் நலன் தரும்.
முக்கிய குறிப்பு.
உங்களின் ரத்தத்தில் அதிகமான சர்க்கரை அளவு இருந்தால் முதலில் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். இல்லையேல் உங்களது உடல் நலம் சீரற்ற முறையில் வேலை செய்ய தொடங்கி விடும். எனவே, பாலை அளவாக குடித்து ஆரோக்கியமாக வாழுங்கள் நண்பர்களே.