காதுவலி, தலைவலி, தலைசுற்றல், மூட்டுவலி போன்ற பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் தரும் வாத நாசக முத்திரை!

0

காதுவலி, தலைவலி, தலைசுற்றல், மூட்டுவலி போன்ற பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் தருகிறது வாத நாசக முத்திரை. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.

வாத நோய்களை குணமாக்கும் வாத நாசக முத்திரை
வாத நாடி கூடினால் சந்திவாதம், கீல் வாதம், முடக்கு வாதம் என 21 வகையான வாத நோய்கள் உண்டாகும். மேலும், காதுவலி, தலைவலி, தலைசுற்றல், சக்தியின்மை, பொறுமையின்மை, சுறுசுறுப்பின்மை, குறைவான நினைவாற்றல், தூக்கமின்மை, ரத்த ஓட்ட குறைவால் உடலில் மதமதப்பு ஏற்படுதல், மூட்டுவலிகள்(ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்),தலைமுடி, நகம், கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுதல், பிறப்புகளிலிருந்து வாயு பிரிதல், ஏப்பம் போன்ற நிறைய நோய்குறிகள் தோன்றும் அவற்றில் இருந்து நிவாரணம் தருவது இந்த முத்திரை.

ஆள்காட்டிவிரல், நடுவிரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து அதன் மீது கட்டைவிரலால் அழுத்தி பிடிக்கவும். மற்றவிரல்கள் நீட்டிய படி இருக்கட்டும். இதுவே வாத நாசக முத்திரை. காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். மிகுந்த பலனளிக்கும். 30 வினாடியிலிருந்த 15 நிமிடம் வரை செய்வது உத்தம பலன் கொடுக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடல் வலி மற்றும் வாத வலிகளை நீங்கும் மூலிகை மருத்துவம்! பூரண குணம் கிடைக்க செய்முறை குறிப்புகள் !
Next articleசீரற்ற இரத்த ஒட்டம் உள்ளவர்கள் இரத்த ஓட்டத்தை சீராக்க சில சித்த வைத்திய முறைகள் !