கழிவறையில் அதிக நேரம் உட்காருவதால் ஏற்படும் பிரச்சனைகள் தெரியுமா?

0

கழிவறையில் அதிக நேரம் உட்காருவதால் ஏற்படும் பிரச்சனைகள் தெரியுமா?

தற்போது உள்ள நவீன உலகத்தில் கழிவறை வரைக்கும் போனை கையில் எடுத்துச் செல்லும் நிலைமைக்கு வந்துவிட்டோம்.

அதுமட்டுமின்றி அடுத்தவர்கள் தொந்தரவு இல்லாமல் உட்காரும் இடமாகவும் கழிவறை மாறிவிட்டது.

ஒரு சிலர் கழிவறைக்குள் சென்று பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் வரமாட்டார்கள். இப்படி நீண்ட நேரம் கழிவறையாக உட்காருவதால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி கழிவறையில் அதிக நேரம் உட்காருவதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி இங்கு பார்ப்போம்.

10 நிமிடத்துக்கு மேல் டாய்லெட்டில் அமரக்கூடாது. முடிந்தால் அதைவிட குறைந்த நேரத்தில் வெளியேறுவது சிறந்தது.

டாய்லெட்டில் அதிக நேரம் போனுடன் அமர்ந்திருப்பது. உங்கள் போனில் 18 மடங்கு கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது.

நீண்ட நேரம் டாய்லெட்டில் அமர்வது மூல நோய் வர காரணமாக அமைவதுடன், ஆசனவாயை சுற்றியுள்ள ரத்த நாளங்களை பாதிக்கும்.

அதிக நேரம் டாய்லெட்டில் அமர்ந்திருப்பதால், குடல் இயக்கத்தை கடினமாக்குவதுடன், மலக்குடல் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகரிசலாங்கண்ணி பற்றி பலர் அறிந்திடாத அரிய தகவல்கள் இதோ!
Next articleஆண்கள் மட்டும் படிக்கவும்! இந்த இலையில் சூப் செய்தால் கிடைக்கும் அதிசயம்!