உலகத்தையே உலுக்கிய புகைப்படம் இறக்கும் தருவாயில் 7 மாத தங்கையை காப்பாற்றிய 5 வயது சிறுமி!

0

சிரியாவில் தான் இறக்கும் தருவாயில் தனது 7 மாத தங்கையை காப்பாற்றிய 5 வயது சிறுமியின் செயல் புகைப்படமாக வெளியாகி காண்பவர்களின் கண்களை கண்ணீர் மல்க வைத்துள்ளது.

சிரியாவில் அரசுப் படைகளும் கிளர்ச்சியாளர்களும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இட்லிப் மாகாணத்திலுள்ள அரிஹா என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியதில் அப்பகுதியில் இருந்த 5 மாடிக்கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

அப்போது, அம்ஜத்அல் அப்துல்லா என்பவரது வீடும் நொறுங்கியது மட்டுமின்றி, அவரது மனைவி ஆஸ்மாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அப்போது இடிபாடுகளில் சிக்கிக்கொண்டிருந்த 5 வயது மகள் ரிஹாம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சமயத்தில் கூட தனது தங்கை கீழே விழுந்துவிடக்கூடாது என்று அவரது சட்டையைக் இறுக்கமாக பிடித்துக் கொண்டுள்ளார்.

குறித்த 7 மாத குழந்தை தனது அக்காவின் செயலால் கீழே விழாமல் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளது. தற்போது செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகின்றது. தனது தங்கையின் உயிரைக் காப்பாற்றிவிட்டு கடைசியில் பரிதாபமாக உயிரிழந்தார் ரிஹாம். தங்கையைக் காப்பாற்ற 5 வயது சிறுமியின் புகைப்படம் தற்போது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபோட்டோஷீட்டின்போது காற்றில் தூக்கிய துணி! நல்லவேளையாக கையால் மறைத்த பிரபல நடிகை !
Next articleஇன்றைய ராசிப்பலன் – 30.07.2019 செவ்வாய்க்கிழமை !