உலகின் முக்கனியாக கருதப்படுவது மா, பலா, வாழை. மற்ற இரண்டும் குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே கிடைக்கும், ஆனால் வாழைப்பழமோ வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது.
அதனாலேயே வாழைப்பழம் அதிகப்படியான மக்களால் விரும்பப்படுகிறது. வாழைப்பழத்தின் விலையும், அதன் சத்துக்களுமே அதை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளது.
அனைத்து பழங்களுமே சத்துக்கள் நிறைந்ததுதான், ஆனால் எல்லாராலும் அனைத்து பழங்களையும் வாங்க இயலாது. வாழைப்பழத்தின் விலை மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு, அதுமட்டுமின்றி இது பசியினை கட்டுப்படுத்தக்கூடியது.
இதனால்தான் உலகில் உள்ள பெரும்பகுதியான மக்கள் வாழைப்பழம் வாங்குவதில் ஆர்வம் செலுத்துகிறார்கள். இதனை பயன்படுத்திதான் நம்மிடையே இந்த விஷத்தை வாங்க வைத்து நம்மை நோயில் விழவைக்கிறார்கள்.
வாழைப்பழம்
முன்பே கூறியது போல வாழைப்பழம் குறைந்த விலையில் அதிகளவு சத்துக்களை கொடுக்கக்கூடிய பழமாகும். இதில் உள்ள பதினாறு வகை சத்துக்கள் நமக்கு பல நன்மைகளை தருகிறது.
உலகம் முழுவதும் கிட்டதட்ட மூவாயிரம் வகை வாழைப்பழங்கள் உள்ளன. இந்தியாவில் வாழை உற்பத்தியில் தென்மாநிலங்களே முன்னணியில் இருக்கிறது.
ஆனால் இன்றைய உலகில் கலப்படம் இல்லாத, செயற்கை முறையில் தயாரிக்கபடாத உணவுகள் கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.
இதற்கு வாழைப்பழம் மட்டும் விதிவிலக்கா என்ன? இந்த கலப்பட உணவுகள் நன்மையை வழங்காவிட்டால் ஆரோக்கியத்திற்கு தீங்கை விளைவிக்காமல் இருந்தாலே போதும். ஆனால் இவை நம் உயிரை வாங்கும் அளவிற்கு ஆபத்தானவை.
மோரிஸ் பழம்
தற்போது அனைத்து பழ கடைகளிலும் கிடைக்கும் ஒரு பழம் இந்த மோரிஸ் வாழைப்பழம். நாட்டு வாழைப்பழம் கிலோ 80 ரூபாய்க்கு விற்கும்போது இந்த பழம் கிலோ 30 ரூபாய்க்கு கிடைக்கும்.
ஏனென்றால் இது பழமல்ல நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் விஷம்.
பயிரிடும் முறை
நம்ம நாட்டு வாழை மரம் பயிரிடும் முறைக்கும் இந்த மோரிஸ் பழம் பயிரிடும் முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.
இயற்கை முறையில் விளையும் நம்ம நாட்டு மரத்திற்க்கும் திசுவளர்ப்பு முறையில் வளர்க்கப்படுற இந்த மரத்திற்கும் உள்ள வேறுபாடு பாலுக்கும், கல்லுக்கும் இருக்கிற வேறுபாடு மாதிரி.
இரண்டுமே வாழைப்பழம்தான் ஆன பலன்கள் வேற வேற. இந்த மரபணு மாற்றப்பட்ட பழத்தோட காப்புரிமை நம்ம நாட்டுகிட்ட இல்ல எனவே வெளிநாடு மூலம்தான் இந்த பழம் பயிரிடப்படுது.
சைவம் பாதி, அசைவம் பாதி
இந்த மோரிஸ் பழ மரங்களை பூச்சிகள் தாக்கமால் இருக்க பலவித பூச்சிக்கொல்லிகள் பயன்டுத்தப்படுகிறது. அதற்கும் மேலாக இந்த மோரிஸ் பழத்தில் கரப்பான் பூச்சியின் மரபணுக்கள் சேர்த்துதான் இந்த வகை பழம் உருவாக்கப்பட்டது.
மோரிஸ் பழங்கள் அதிக நாட்கள் கெடாமல் இருக்க காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். இது உங்களுக்கு பல சரும பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தீர்வு
இதெற்கென்ன தீர்வு, நமது நாட்டு வாழைப்பழங்களை மட்டும் சாப்பிடுங்கள் அவ்வளவுதான். விலை குறைவென விஷத்தை வாங்கி தினமும் சாப்பிடுவதை விட விலை அதிகமானாலும் ஆரோக்கிய உணவை எப்போதாவது சாப்பிடுவது சிறந்தது.