*சொந்த காலில் நில்*
அப்பா, அம்மா, அண்ணன் மாமா மச்சான் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்களுடைய சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும்.
*படிப்பில் உயரம்*
உங்கள் துறை சார்ந்த படிப்பில், முழுமை அடைந்திருக்க வேண்டும். பி.எச்.டி முடித்தால் தான் என்றில்லை. இன்றைய தேவைக்கு என்ன என்று அறிந்து வைத்திருந்தாலே போதுமானது.
*உலகம் சுற்றும் வாலிபன்*
குறைந்தபட்சம் 2 நாடுகளுக்காவது சென்று வந்துவிட வேண்டும். புது இடம், புதிய கலாச்சாரம் புதிய மனிதா்கள் என உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள, புத்துணர்ச்சி அடைய பெருமளவு உதவும்.
*பேரார்வம்*
பேரார்வம் என்பது உங்கள் வேலையை குறிப்பது. ஆரம்பத்தில், ஏதாவது ஒரு வேலை வேண்டும் என்பதற்காக சேர்ந்திருக்கலாம். ஆனால், 30 வயதுக்குள்ளாவது உங்களுக்கு பிடித்த துறை, தொழிலில் வேலையில் சேர்ந்துவிட வேண்டும்.
*தோல்வி*
தோல்வியில் கற்காத பாடத்தை நீங்கள், வேறு எங்கும் கற்க முடியாது. தோல்வி உங்களை ஒழுங்குப்படுத்தும் ஆசான். ஓர் தோல்வியையாவது நீங்கள் சந்தித்துவிட வேண்டும். இல்லையேல், 30 வயதை கடந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை கையாள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படலாம்.
*முதலீடு*
சம்பாதித்த பணத்தை, வருமானம் ஈட்டும் வகையில் வங்கியில் அல்லது சொத்து என எதிலாவது முதலீடு செய்து வைத்துவிட வேண்டும். அதை செலவு செய்யாமல், வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டும்.
*தீய பழக்கம்*
உங்களுக்கு இருக்கும் ஏதேனும் ஒரு கெட்டப் பழக்கத்தையாவது 30 வயதுக்குள் நிறுத்தி விடுதல் வேண்டும். புகை, மது, கெட்ட வார்த்தை பேசுதல், பெண்மையை கொச்சையாக எண்ணுதல் என எதையாவது ஒன்றையாவது. எந்த கெட்டப் பழக்கமும் இல்லையா, நீங்களே உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், நல்லவர்களை கேலி கிண்டல் செய்யும் உலகம் இது .
*உண்மையான நட்பு*
எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும், உங்கள் அருகில் நின்று தோள் கொடுக்க ஓர் தோழமை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான தோழமையை தேடிக் கொள்ள வேண்டும்.
*பிடிக்காவிடில் பிரிவு*
ஓர் நபருடன் பழகுவது பிடிக்கவில்லையா, உங்கள் உற்ராா், அலுவலக நண்பர்களுக்காகவும் விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா? முற்றிலுமாக பிரிந்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நல்லது நினைக்கும் நபர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு நீங்கள் பயணம் செய்வது தான் நல்லது.
*சேமிப்பு*
பெரும்பாலும் 30 வயதை கடக்கும் போது, சிலர் திருமணம் ஆகியும், சிலர் குழந்தை குட்டி என இருப்பார்கள். எனவே, அடுத்த தலைமுறைக்கான சேமிப்பை குறையாமல் எடுத்து வைக்க வேண்டும். இது உங்களுடைய கடமை.
*கைதேர்ந்தவர்*
நீங்கள் செய்யும் பணியில் கைதேர்ந்தவர் என்ற நற்பெயருடன் விளங்க வேண்டும். அட, அவரு கிட்ட இந்த வேலைய கொடுங்க, நான்றாக செய்வார் என நால்வர் கூறும்படி நடக்க வேண்டும்.
*ஆராய்ந்து செயல்படுதல்*
மனிதர்களை ஆழமாக ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
*நேரம் பொன் போன்றது*
நேரத்தை அளந்து செலவு செய்ய வேண்டும். 30 வயதுக்கு மேல் நேரத்தை வீண் விரயம் செய்வது, உங்கள் வாழ்க்கையில் பெரும் இழப்பாக அமையும்.
*நெட்வர்க்*
30 வயதுக்கு மேல் நீங்கள் ஓர் நெட்வர்க் போல, பணியிடம், வாழ்விடத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும். இது உங்களை பல நிலைகள் உயர உதவும்.
*நீங்களாக இருங்கள்*
மற்றவர்களுக்காக உங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வாழாமல் நீங்கள் நீங்களாக வாழ வேண்டிய தருணம் இது.
By: Tamilpiththan