இளைஞன் ஒருவன் காதலியை தேடிச் சென்ற போது ஏற்பட்ட‌ பரிதாபம்!

0

காலியில் காதலியை பார்க்க சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கரன்தெனியவில் காதலியை பார்த்த சென்ற இளைஞன் ஒருவர் மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

ரஞ்சித் சுரங்க என்ற 22 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்பபட்டுள்ளார்.

நேற்று இரவு 7 மணியளவில் மடுகும்புர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தை அவதானித்த பிரதேச மக்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞன் நேற்று அதிகாலை வீட்டின் ஜன்னல் ஒன்றை திறந்து விட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் மாலை வரை வீட்டிற்கு வராத காரணத்தினால், பெற்றோர் கரன்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பின்னர் பிரதேச மக்களுடன் இணைந்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது அவரது சடலம் காதலியின் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் மீட்கப்பட்டுள்ளது.

மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தப்படும் மின்சார கம்பியில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநான் முதலமைச்சர் ஆனால்! தர்மம், நியாயம் ஜெயிக்கும்! . நடிகர் விஜய் ஏன் இப்படி பேசினார் தெரியுமா?
Next articleவிசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்த தயாராகும் பொலிஸ் மா அதிபர்!