இலங்கையில் பட்டப்பகலில் மாணவன் மீது கொடூர தாக்குதல் – நெஞ்சை பதற வைக்கும் காணொளி!

0

குளியாப்பிட்டி பஸ் நிலையத்திற்கு அருகில் பாடசாலை மாணவர் ஒருவரை கும்பல் ஒன்று கொடூரமான தாக்கியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் கடந்த 28 ஆம் திகதி நடந்த போதும், அது தொடர்பான CCTV காணொளி தற்பொழுது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இடையேயான வாக்குவாதம் தாக்குதலாக மாறியுள்ளது.

தாக்குதலுக்குள்ளான 18 வயதான மாணவன் குருநாகல் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயது மாணவன், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நாளை (04) வரையில் வாரியபொல நன்னடத்தை பிரிவின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தாக்குதலுடன் தொடர்புடைய மூவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிறுமிகள் மூவர் துஷ்பிரயோகம்: தந்தை, சிறிய தந்தை உள்ளிட்ட நால்வர் கைது!
Next articleநடுவரின் முடிவால் அதிர்ந்துபோன சிறுமி.. அரங்கத்தையே பிரமிக்க வைத்த காட்சி!