இன்றைய ராசிபலன் 4.7.2018 புதன்கிழமை !!

0

இன்றைய ராசிபலன் 4.7.2018 புதன்கிழமை !!

4.7.2018 புதன்கிழமை விளம்பி வருடம் ஆனி மாதம் 20-ம் நாள்.
தேய்பிறை சஷ்டி திதி இரவு 8.46 வரை பிறகு சப்தமி. பூரட்டாதி நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 2.37 வரை பிறகு உத்திரட்டாதி. யோகம்: அமிர்தயோகம் மறுநாள் பின்னிரவு 2.37 வரை அதன் பிறகு சித்தயோகம்.
குளிகை: 10:30 – 12:00
சூலம்: வடக்கு.
பொது: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம்.
பரிகாரம்: பால்.

நல்ல நேரம் 6-7.30, 9-10, 1.30-3, 4-5, 7-10.
எமகண்டம் காலை மணி 7.30-9.00.
இராகு காலம் மதியம் மணி 12.00-1.30.

மேஷம் : அனுபவம்
ரிஷபம் : நிகழ்வு
மிதுனம் : ஊக்கம்
கடகம் : பகை
சிம்மம் : பொறுப்பு
கன்னி : நட்பு
துலாம் : அந்தஸ்து
விருச்சிகம் : கடமை
தனுசு : செய்தி
மகரம் : நம்பிக்கை
கும்பம் : விமர்சனம்
மீனம் : கவலை

மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். சிறப்பான நாள்.

ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்: மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்
தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கடகம்: இரவு 8.15 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

சிம்மம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி புதிய பொறுப்பை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளை நல்வழிப் படுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

தனுசு: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

மகரம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

கும்பம்: இரவு 8.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும்.முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. நாவடக்கம் தேவைப்படும் நாள்.

மீனம்: தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅல்சர் நோய்க்கு அருமருந்தாகும் திராட்சை ! வெறும் வயிற்றில் திராட்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !
Next articleகஷ்டம் விலகுவதற்கு எந்த திசையை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும் தெரியுமா?