இன்றைய ராசிபலன் 26.5.2018 சனிக்கிழமை!

0

இன்றைய ராசிபலன் 26.5.2018 சனிக்கிழமை!

26.5.2018 சனிக்கிழமை விளம்பி வருடம் வைகாசி மாதம் 12-ம் நாள்.
வளர்பிறை துவாதசி திதி இரவு 7.24 வரை பிறகு திரயோதசி. சித்திரை நட்சத்திரம் இரவு 10.15 வரை பிறகு சுவாதி. யோகம்: மரணயோகம் இரவு 10.15 வரை பிறகு அமிர்தயோகம்.
குளிகை: 6:00 – 7:30
சூலம்: கிழக்கு.
பொது: கணபதி சச்சிதானந்த சுவாமிகள் ஜெயந்தி, திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கல்யாணம்.
பரிகாரம்: தயிர்.

நல்ல நேரம் 7-8, 10.30-1, 5-8, 9-10.
எமகண்டம் மதியம் மணி 1.30-3.00.
இராகு காலம் காலை மணி 9.00-10.30.

மேஷம் : வெற்றி
ரிஷபம் : காரியம்
மிதுனம் : உதவி
கடகம் : தைரியம்
சிம்மம் : நம்பிக்கை
கன்னி : தீர்வு
துலாம் : நாவடக்கம்
விருச்சிகம் : கவலை
தனுசு : பேச்சு
மகரம் : திறமை
கும்பம் : நன்மை
மீனம் : விமர்சனம்

மேஷம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். தொட்ட காரியம் துலங்கும் நாள்.

மிதுனம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

கடகம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பணத்தட்டுப்பாட்டை சமார்த்தியமாக சமாளிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

கன்னி: காலை 10.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நிதானித்து செயல்படுங்கள். நண்பகல் முதல் குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்: காலை 10.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை வேலையாட்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். வாகனத்தில் கவனம் தேவை. திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.

தனுசு: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். புது பொருள் சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கும்பம்: காலை 10.15 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் விட்டுக் கொடுத்து போவது நல்லது. நண்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

மீனம்: காலை 10.15 மணி வரை சந்திராஷ்டமம் தொடங்குவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஓர் இயற்கை மருந்து! எல்லா நோய்களுக்குமான‌ நிவாரணி!
Next articleஉங்கள் உதடு வறட்சியாக இருக்கிறதா? அதை போக்க எளிய இயற்கை வழிகள்!