ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமான குங்குமப் பூ பற்றி அறியாத மருத்துவ குணங்கள்!

0

ஆங்கிலத்தில் சாப்ரன் எனவும் ஹிந்தியில் கேசர் எனவும் அழைக்கப்படும் குங்குமப்பூ அதிசயமான ஒன்று. ஒரு பூவின் உலர்ந்த சிவப்பு நிற மகரந்த காம்பு உயர்ந்த வாசனையுடன் இருப்பது அனைவரையும் ஈர்க்கும் ஒன்று. ஆனால் இதனை மிக சிறிதளவு வாங்குவதற்கே பலமுறை யோசிக்க வைக்கும். விலை உயர்ந்த பொருள்.

ஒரு அவுன்ஸ் உயர்ந்த குங்குமப் பூ சுமார் 4500 ஊதாநிற பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்டுகின்றது. ஒரு பூவில் 3 மகரந்த காம்புகள் கிடைக்கும். இதனை சிறிதளவு உணவில் (பிரியாணி, மசாலா, பால், இனிப்பு வகை) சேர்த்தால் போதும், மிக உயர்ந்த நறுமணத்தினைக் கொடுத்து விடும்.

குங்குமப்பூவின் மருத்துவ பலன்கள்!

புற்று நோய்க்கான ஆராய்ச்சியில் குங்குமப் பூவில் பல வேதிமப் பொருட்கள் புற்று நோய் எதிர்ப்பாக உள்ளதால் பெருத்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது.

இலுப்பு, கர்ப்பப் பைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்க உதவும் என்ற காரணத்தினாலேயே குங்குமப்பூ கர்ப்பிணிப் பெண்களுக்கு சிபாரிசு செய்யப்படுகின்றது. இது வயிற்றில் பிடிப்புகளை நீக்க உப்பிசம், வாயு சேர்வதை தவிர்க்க பாலுடன் கலந்து அருந்த அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஆலோசனை பெற்றே குங்குமப்பூ எடுத்துக் கொள்ள வேண்டும்.

மன உளைச்சல், மனச் சோர்வு உள்ளவர்களுக்கு குங்குமப் பூவினை எடுத்துக் கொள்ளும்போது செரடோனின் என்ற பொருள் உடலில் சுரப்பதன் மூலம் மன உளைச்சல் நீங்குகின்றது.

வயது கூடும்போது வரும் கண் தெரியாமை பாதிப்பு குங்குமப்பூ எடுத்துக் கொள்வதால் பாதிப்பின் கடுமை குறைகிறது. பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கவும் குங்குமப் பூ உதவுகின்றது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு குங்குமப் பூ ஒரு வரப்பிரசாதம். நுரையீரலில் உள்ள திசுக்களின் வீக்கத்தினை குறைத்து ரத்த நாளங்களை சீராக வைக்கின்றது. இதனால் காற்றுக் குழாய்கள் சீராக இயங்குகின்றன.

குங்குமப் பூ ஜீரண சக்தியினை கூட்டுகின்றது. வயிற்றின் உள்ள தசைகளை ரிலாக்ஸ் செய்வதன் மூலம் வலி, அசி டிடி, சிறுநீரகம் பிரச்சினை, கல்லீரல் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகின்றது.

குங்குமப் பூ ஒரு ரத்த சுத்தி.

மூட்டு வலி உடையோருக்கு குங்குமப் பூ எடுத்துக் கொள்வதன் மூலம் மூட்டு சதை வீக்கங்கள் குறைகின்றது. மூட்டு பலவீனம் நீங்குகின்றது.

உடற்பயிற்சி அதிகம் செய்வதால் உடலில் லக்டிக் ஆசிட் சேரும். இது உடலுக்கு சோர்வினையும், பாதிப்பினையும் உண்டாக்கும். குங்குமப் பூ லக்டிக் ஆகும் சேர்வினை நீக்குகின்றது.

ஈறுகளின் வீக்கம் குறைகிறது.

தூக்கமின்மை நீங்குகின்றது

கல்லீரல் புற்று நோய் கட்டுப்படுவதால் அரபு குடியரசு பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் அமீன் அவர்கள் தன் ஆராய்ச்சியில் கூறியுள்ளார். குழந்தை பிறந்த பிறகு அதிக ரத்தப் போக்கை நிறுத்தவும் இதனை உபயோகித்துள்ளனர். முறையான உதிரப் போக்கு மாத விலக்கின்போது ஏற்படவில்லை எனினும் இதனைக் கொடுத்துள்ளனர். தாய்பால் கொடுக்கும் தாய்கள் சிறிய அளவிலேயே குங்குமப் பூ எடுத்துக் கொள்ள வேண்டும்.

குங்குமப் பூ எண்ணெய்:
சரும பாதிப்பு, இருமல் ஆகிய வற்றிக்கு இதனை பயன்படுத்தும் ஏதுவதாக கூறப்படுகின்றது. இருப்பினும் எதனையும் உள் மருந்தாக எடுத்துக் கொள்ளும்போது மருத்துவர் ஆலோசனையை கண்டிப்பாய் பெற வேண்டும். பொதுவில் பாலில் சேர்த்த குங்குமப் பூவினை குடிக்கும் வழக்கமே நம் நாட்டில் உள்ளது.

குங்குமப் பூ சில எச்சரிக்கை:
குங்குமப் பூவினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால்
* வாந்தி
* மயக்கம்
* வயிற்றுப்பிரட்டல்
* பசியின்மை போன்றவை ஏற்படும்.
* கழிவுப் பொருள் வெளிப்போக்கில் ரத்தம்
* சிறுநீரில் ரத்தம்
* மூக்கில் ரத்தம்
* தலை சுற்றல்
* மஞ்சள் காமாலை போன்ற சற்று அபாயகரமான பாதிப்புகளும் ஏற்படலாம்.
குங்குமப் பூவில் போலிகளும் விற்கப்படுகின்றன. நல்ல குங்குமப் பூவினை கண்டறிய ஓரிரு துண்டுகளை சிறிதளவு தண்ணீரில் போட்டால் உடனே தண்ணீர் சிவப்பு நிறமானால் அது போலி. 10-16 நிமிடங்களில் நிறம் மாறி நல்ல மணமும் வந்தால் அதுவே அசல் குங்குமப் பூ

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசூட்டு கொப்பளங்கள் ( வேனல் கட்டிகள் ) மறைய எளிய வைத்தியம்!
Next articleகுடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்!