இன்றைய ராசி பலன் 25.02.2022 Today Rasi Palan 25-02-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 25-02-2022 மாசி மாதம் 13ம் நாள் வெள்ளிக்கிழமை ஆகும். இன்று நவமி திதி பகல் 12.58 வரை பின்பு தேய்பிறை தசமி. கேட்டை நட்சத்திரம் பகல் 12.07 வரை பின்பு மூலம். மரணயோகம் பகல் 12.07 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இன்ரைய தினம் அம்மன் வழிபாடு செய்வது நல்லது. இன்று புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம்: பகல் 10.30-12.00
எம கண்டம்: மதியம் 03.00-04.30
குளிகன்: காலை 07.30 -09.00
சுப ஹோரைகள்: காலை 06.00-08.00, காலை 10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் நிலவும். உங்கள் ராசிக்கு பகல் 12.07 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மதியத்திற்கு பின் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

ரிஷபம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.07 க்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேச்சில் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணியில் கவனம் தேவை.

மிதுனம் ராசிக்காரர்களே:

இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள்.

கடகம் ராசிக்காரர்களே:

இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்து மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம் ராசிக்காரர்களே:

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது.

கன்னி ராசிக்காரர்களே:

இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் அடைவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.

துலாம் ராசிக்காரர்களே:

இன்று நீங்கள் செய்ய நினைக்கும் செயல்கள் பாதியில் தடைபடலாம். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வந்து சேரும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே:

இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும்.

தனுசு ராசிக்காரர்களே:

இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

மகரம் ராசிக்காரர்களே:

இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார வளர்ச்சியில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் இருந்த பொருளாதார தடைகள் விலகி லாபம் உண்டாகும்.

மீனம் ராசிக்காரர்களே:

இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாக உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமகாசிவராத்திரி தினத்தில் 12 ராசிக்காரர்களும் இவற்றை கொண்டு சிவனுக்கு அபிசேகம் செய்தால் வாழ்வில் வெற்றிகள் கிடைக்கும்! செல்வச்செழிப்பு உண்டாகும்.
Next article12 ஆண்டுக்கு பின் மார்ச் 15 வரை நீடிக்கும் சூரியன் குரு சேர்க்கையால் ராஜயோகமான‌ வாழ்க்கையை அடையபோகும் ராசிக்காரர்கள்!