நவதானியம் Navathaniyam Types Of Grains Name Navathaniyam In Tamil Navadhaniyam பெயர்கள்

0

navathaniyam benefits in tamil, navathaniya vagaigal, navathaniya payangal, navathaniya nanmaigal, navadhanya health benefits, navathaniyam names, navathaniyam food, navathaniya list, navathaniya payirgal, navathaniyam uses, navathaniyam food recipes, grains benefits in tamil, types of grains, Navadhaniyam, navathaniya valipadu seiyum murai, navathanya peyargal, நவதானியம் பயன்கள், நவதானியங்கள் எவை, நவதானியம் பெயர்கள், நவதானியங்கள் நவகிரகங்கள், நவதானியம் நன்மைகள், நவதானியங்கள், நவதானியம் ஆரோக்கியம், நவதானிய வகைகள், நவதானிய வழிபாடு.

Navathaniyam

நவதானியங்கள் (Navadhanya)

உடலுக்குச் சக்தியை அளிக்கக்கூடிய புரதம் நிறைந்த உணவுகள் தான் தானியங்கள். நமது முன்னோர் ஒரு குறிப்பிட்ட, மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த‌ ஒன்பது தானியங்களின் கூட்டத்தையே நவதானியங்கள் என்று அழைக்கின்றனர். இவையே கோதுமை, நெல், துவரை, பயறு, கடலை, அவரை (மொச்சை), எள், உழுந்து, கொள்ளு ஆகும்.

இது பொதுவாக ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற தானியங்கள் அதாவது சூரியன் உச்சமாக இருக்கக்கூடிய நாளான ஞாயிறு அன்று உடலுக்கு வெப்பத்தினை அளிக்கக்கூடிய கோதுமையை வகுத்துள்ளனர். சந்திரன் உச்சமாக இருக்கக்கூடிய நாளான திங்களன்று அரிசியை வகுத்தனர். உடலில் உள்ள சீரான ரத்தச் சுழற்சிக்கு சிவப்பு கிரகம் ஆட்சி பெற்றிருக்கும் செவ்வாய்க்கிழமை சிவப்பு தானியமான முழு துவரையும், புத்தி கூர்மைக்கு புதனன்று பாசிப்பயறையும், வள‌மான தேகத்துக்கு வியாழக்கிழமையன்று கொண்டைக்கடலையும், உடலின் இனப்பெருக்க உறுப்புக்களின் ஆரோக்கியத்துக்காக வெள்ளி ஆட்சி பெற்றிருக்கும் நாளில் மொச்சையும், உடலுக்கான கடின உறுப்புக்கள் பலம் பெற சத்துக்களைக் கொண்ட எள்ளினையும், சனிக்கிழமைக்கும் மன ஆரோக்கியத்துக்கு முக்கியமான சாயா கிரகங்களான ராகு கேதுவுக்கு கொள்ளும்,கருப்பு உளுந்தினையும் வகுத்தனர்.

நவதானியங்களுக்கும் இந்துக்களின் நவராத்திரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவர்கள் புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சியின் போதும்,சில வழிபாடுகளின் போதும் இந்த நவதானியங்களை வழிபாட்டுப் பொருளாக வைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. இவை அனைத்தும் மிகவும் சத்துக்கள் நிறைந்தவையாதலால் நம் மூதாதையர்கள் இவற்றை முக்கியப்படுத்தினர்.

நவதானியங்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்

நவகிரகங்களுக்கு ஏற்ற நவதானியங்கள் மட்டுமல்லாது இன்று பல நாட்டு தானியங்களும் நமக்கு எளிதில் கிடைக்கின்றன. அவற்றிலும் நார்ச்சத்து வைட்டமின் தாது உப்புக்களுடன் தேவையான புரதச்சத்தும் அதிகம் உள்ளது.

கோதுமையில் புரதம்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து,பொஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோடீன்,நியாசின் என பல சத்துக்கள் நிறைந்துள்ளன.தவிடு நீக்காத அரிசியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

புரதம் நார்ச்சத்து வைட்டமின் சத்துக்கள் அரிசியில் நிறைந்துள்ளன.

கொண்டைக்கடலை மொச்சை கொள்ளு கருப்பு உளுந்து பாசிப்பயறு துவரை ஆகியவற்றில் தாது உப்புக்கள் நார்ச்சத்து கால்சிய பொஸ்பரஸ் இரும்புச்சத்து புரதம்சத்து என அனைத்துச் சத்துக்களும் நிறைந்துள்ளன.

எள்ளின் விதையில் உடலுக்கு தேவையான கால்சியம்,இரும்புச்சத்து வைட்டமின்பி1, வைட்டமின் சி,ஒக்ஸாலிக் அமிலம் ஆகியவை நிறைந்துள்ளது.

நவதானியத்தின் மருத்துவப் பயன்கள் Navathaniyam Payangal

  1. நெல் அரிசி:
    இலகுவில் செரிமானமடையக்கூடியது, ஜீரணக் கோளாறை சரி செய்யும். இவை உடலுக்கு சக்தியை கொடுப்பதோடு, தோலுக்கும், இரத்த நாளங்களுக்கும் ஊட்டத்தை கொடுக்கும். அரிசியில் குறைந்த கொழுப்பும், உப்பும் உள்ளதால் இரத்த அழுத்தத்தை குறைக்கும். இது அவர்களுக்கு சிறந்த உணவு. நெல் உமியிலிருந்து எண்ணெய் எடுக்கலாம்,இது சமைப்பதற்கும்,சவர்காரம் தயாரிக்கவும் பயன்படும்.
  2. கோதுமை:
    முளைத்த கோதுமையில் அதிகமான வைட்டமின் எ உம்,ஒக்ஸைடும் இருப்பதால் இவை இரண்டும் காயம் ஏற்பட்டால் இரத்தத்தை உடனே உறையச் செய்கிறது. மற்றும் இது இரத்தத்தை சுத்திகரிப்பதுடம் நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.
  3. கொண்டை கடலை:
    உடல் உறுதி பெறும், எலும்புகள் உறுதி பெறும், இரத்தச்சோகை வராது, ஆண்மை அதிகரிக்கும், சிறுநீர் பிரச்சனைகள் தீரும், சக்கரை நோய் வராமல் தடுக்கும், இதயம் பெலம் பெறும், புற்றுநோய் வராமல் தடுக்கும், முகம் பளபளப்பாக உதவும்.
  4. துவரம் பருப்பு:
    ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உதவும்,இரத்த அழுத்தம், இரத்தச்சோகை வராமல் தடுக்கும், நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். காயங்களை விரைவில் சுகப்படுத்தும், உடல் எடை குறைக்க உதவும்.
  5. உளுத்தம் பருப்பு:
    எலும்பு, தசை, நரம்புகள் ஊட்டமடைந்து உடல் வசீக‌ரமாகும்.உடல் சூடு தணியும்.இடுப்பு வலுப்பெற்று இடுப்பு வலி நீங்கும்.எலும்புகள் வலுப்பெறும். முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து, உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.
  6. பாசிப் பயறு:
    இப்பயறானது கண்கள், கேசம், நகங்கள், கல்லீரல், சருமம் ஆகியவற்றின் நலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது. இப்பயறில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின்
    குடலில் உணவுப்பொருட்கள் நன்கு செரிக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க‌ உதவும், ஆரோக்கிய உடல்எடை குறைப்பிற்கும், கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு குழந்தையானது குறைபாடுகள் இன்றி பிறக்கவும் வழிவகுக்கிறது.சருமம் பளபளபாக வைத்திருக்க உதவும்.
  7. கொள்ளு:
    உடல் எடை குறைக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், சிறுநீரகக் கற்களைக் கரைக்கும், விந்தணுக்கள் அதிகரிக்கும், சர்க்கரைநோயை தடுக்கும், மாதவிடாய்ப் பிரச்னைகளைச் சரிசெய்யும், இதை தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து அந்த நீரை அருந்தினால், ஜலதோஷம் குணமாகும். ரசமாக வைத்து சாப்பிட்டால், உடல்வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் சரியாகும் சுவாசத் தொந்தரவு நீங்கும் காய்ச்சலையும் குணமாக்கும்.
  8. எள்ளு:
    உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் அனைத்து வகையான நச்சுக்களும் சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுவதற்கு உதவுகிறது, தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு. தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மையும் நீங்கும்.எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும் எள்ளை தொடர்ந்து உண்பதன் மூலம் போக்க முடியும். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள், தடிமல் , சளி போன்ற பாதிப்புகளை விரைவில் நீக்கும். குழந்தைகளின் உடல்வளர்ச்சி மேம்படும்.
  9. அவரை (மொச்சை):
    இது ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்வதற்கு உடலுக்கு தேவையான இரும்புச் சத்தை கொடுக்கிறது,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கிருமிகள் நம்மை தாக்காது பாதுகாத்துக் கொள்கிறது,புற்று நோய் வராமல் தடுக்கிறது, எலும்புகளுக்கு உறுதி அளிக்க கூடியது.உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது,இதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இது ஒரு சிறந்த உணவு.

நவதானியத்தில் செய்யக்கூடிய உணவுகளாக நவதானிய சூப், நவதானிய அடை, நவதானிய சத்துமாவு, நவதானிய இட்லி, நவதானிய தோசை, நவதானிய கஞ்சி என்பன பாரம்பரியம் மிக்கவை.

நவ தானியங்களும் இந்து மதமும்

நவ என்றால் ஒன்பது என்று பொருள், இந்து சமய நம்பிக்கையுடையோர் தமது சமைய சடங்குகளிற்கு நவ தானிய வழிபாட்டை புனிதமாக கடப்பிடித்து வருகின்றனர் அந்த வகையில் புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சியின் போதும் வீடுகளின் முன்பு பந்தல் அமைத்தல் போன்ற நிகழ்வுகளின் போதும் நவதானியத்தை வழிபாட்டுப் பொருளாக வைத்து வழிபடும் வழக்கம் இன்றுவரை இருக்கிறது.

நவ தானியங்களின் பெயர்கள் types of grains

நெல் – Paddy
துவரை – Red Gram
உளுந்து – Black Gram
பாச்சை பயிறு – Green Gram
அவரை (மொச்சை) – Field Bean
எள் – Sesame Seed
கோதுமை – Wheat
கொள்ளு – Horse Gram
கொண்டை கடலை – Chickpeas

நவ தானியங்களும் நினைவுகூர்ந்து வழிபாடு செய்யும் நவக் கிரகங்களும் Nava Kiragangal

சூரியன் – கோதுமை
சந்திரன் – அரிசி (நெல்)
செவ்வாய் – துவரை
புதன் – பச்சைபயிர்
குரு – கொண்டை கடலை
சுக்கிரன் – மொச்சை
சனி – எள்
ராகு – உளுந்து
கேது – கொள்ளு

நவதானிய வழிபாடு செய்வதால் கிடைக்கும் நவகிரக பயன்கள்

சூரியனுக்கு கோதுமை வழிபாடு செய்வதால் காரிய சித்தி உண்டாகும்.

சந்திரனுக்கு அரிசி (நெல்) வழிபாடு செய்வதால் தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.

செவ்வாய்க்கு துவரை வழிபாடு செய்வதால் பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்.

புதனுக்கு பச்சைபயிர் வழிபாடு செய்வதால் சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்.

குருவுக்கு கொண்டை கடலை வழிபாடு செய்வதால் சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி.

சுக்கிரனுக்கு மொச்சை வழிபாடு செய்வதால் விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்.

சனிக்கு எள் வழிபாடு செய்வதால் வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்

ராகுவுக்கு உளுந்து வழிபாடு செய்வதால் எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்.

கேதுவுக்கு கொள்ளு வழிபாடு செய்வதால் வைடூரியம் பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.

நவதானியங்களை கொண்டு செய்யப்படும் பரிகாரங்களும் விலகும் தடைகளும்

சூரியன்: சூரிய பகவானுக்கு உரியதுதான‌ கோதுமையக்கொண்டு செய்த உணவையோ அல்லது சுண்டலோ பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க, சூரிய பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலகும்.

சந்திரன்: சந்திர பகவானுக்கு உரியதான‌ நெல் அரிசியால் தயாரித்த உணவை பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க, சந்திர தோஷம் நீங்கும். இன்னல்கள் ஏற்படாது விலகும்.

செவ்வாய்: செவ்வாய் பகவானுக்கு உரியதான‌ துவாரையை பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க விபத்து, காயங்கள் போன்றவற்றை ஏற்படாமல் இருக்கும். திருமணத் தடை நீங்கும்.

புதன்: புதனுக்கு உரியதான பச்சை பயறை பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க கல்வியில் ஏற்பட்ட‌ தடைகள் நீங்கும். பேச்சாற்றல் பெற முடியும். தொழில் வணிகத்தில் வெற்றி பெறலாம்.

குரு: குரு பகவானுக்கு உரியதான கடலையை பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க சுபாரியங்கள் நடக்கும். திருமண தடைகள் நீங்கி பாக்கியம் கிடைக்கும்.

சுக்கிரன்: சுக்கிர பகவானுக்கு உரியதான மொச்சை அதாவது அவரையை பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க கலைகளில் வித்தகராக திகழலாம்.

சனி: சனி பகவானுக்குரியதான எள்ளை பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க, எந்த தடையும் நீங்கும். தேவையில்லா விரோதம் பிரச்சனைகள் விலகும்.

இராகு: இராகு பகவானுக்கு உரியதான உளுந்தை பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க, நாக தோஷம் நீங்கும். முயற்சியில் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். துர்கை அம்மனின் அருளாசி பரிபூணமாக கிடைக்கும்.

கேது: கேது பகவானுக்குரியதான கொள்ளை பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க நோய்கள் தீரும். மருத்துவ செலவுகள் பெரிய அளவில் ஏற்படாது குறையும். மனதில் உற்சாகம் ஏற்படும், விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வழி பிறக்கும்.

நவ தானியங்களை கொண்டு நவக்கிரக வழிபாடு செய்வது எப்படி? Navadhanya Pooja

நவதானியங்களை கடைகளில் ஒன்றாக சேர்த்து வாங்காமல் அவற்றை தனித்தனியே வாங்கி வந்து வீட்டில் வைத்து அவைகளை ஒன்று சேர்த்து நவ கிரகங்களுக்கு வைத்து வழிபாடு செய்தால் ஒன்பது கிரகங்களின் தோசமும் விலகிவிடும்.

இந்துமத கோட்பாடுகளின்படி நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கும் பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பது தான். அந்தவகையில் நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும் மற்றைய‌ இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்றி வழிபட‌ வேண்டும் என்கிற ஒரு கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது. முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.

அது எத்தனை சுற்று தெரியுமா?

சூரியன் – 10 சுற்றுகளும்
சுக்கிரன் – 6 சுற்றுகளும்
சந்திரன் – 11 சுற்றுகளும்
சனி – 8 சுற்றுகளும்
செவ்வாய் – 9 சுற்றுகளும்
ராகு – 4 சுற்றுகளும் அடிப்பிரதட்சிணம்
புதன் – 5, 12, 23 சுற்றுகளும்
கேது – 9 சுற்றுகளும்
வியாழன் – 3, 12, 21 சுற்றுகளும்

நவக்கிரகங்கள் தரும் யோகம்

  1. சூரியன் – ஆரோக்கியம்
  2. சந்திரன் – புகழ்
  3. செவ்வாய் – செல்வச் செழிப்பு
  4. புதன் – அறிவு வளர்ச்சி
  5. வியாழன் – மதிப்பு
  6. சுக்கிரன் – வசீகரத் தன்மை
  7. சனீஸ்வரன் – மகிழ்வான வாழ்க்கை
  8. ராகு – தைரியம்
  9. கேது – பாரம்பரியப் பெருமை

மேலும் வாசிக்க: Millet Benefits சிறுதானிய பயன்கள்

Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

Article By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleலண்டனில் தமிழர் வீட்டில் பாட்டி, உள்ளே புகுந்த பொலிஸ்..!
Next articleஇன்றைய ராசி பலன் 03.06.2020 Today Rasi Palan 03-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!