மூல நோயை முடக்கும் துத்தி! எப்படி பயன்படுத்துவது!

0

பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படும் இன்னல்கள் சொல்ல முடியாதவை. மனிதனின் கீழ்குடலில் இருந்து மலவாய் வரையில் உள்ள குடல் பாதைகளில் உஷ்ணத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு வீக்கமாக காணப்படும். மலவாய் பகுதியில் நல்ல ரத்தத்தைக் கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான ரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றன. அசுத்த ரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மூல நோய் என அழைக்கப்படுகிறது. இதனால் அதிக வலி, ரத்தக்கசிவு, மலம் இறுகுதல், உட்காரும்போது வலி போன்றவை ஏற்படும். மூலநோய் உள் மூலம், வெளி மூலம் என இரு வகைப்படும். உள் மூலத்தில் மேல் பகுதி ரத்தக் குழாய்களும், வெளி மூலத்தில் கீழ்ப் பகுதி ரத்தக் குழாய்களும் வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமார்பகம் தொங்குவதை சரி செய்ய: ஒருசில இயற்கை வழிகளின் மூலம் தொங்கும் மார்பகங்களை சிக்கென்று சரி செய்ய முடியும்.
Next articleபிரம்மதண்டு மூலிகையின் ரகசியம்!