Home Jaffna News சுற்றுலா பயணிகளுக்கு சீகிரியா குன்றில் காணக் கிடைத்த அரிய காட்சி!

சுற்றுலா பயணிகளுக்கு சீகிரியா குன்றில் காணக் கிடைத்த அரிய காட்சி!

0
861

சீகிரியா மலைக்குன்றுக்கு விஜயம் மேற்கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அரிய காட்சி ஒன்றை பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

உலக சுற்றுலா தினமான நேற்று அதிகாலை 5 மணி முதல் சீகிரிய குன்றை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

வழமையாக காலை 7 மணிக்கு சீகிரியவை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படும் நிலையில் நேற்றையதினம் 5 மணிக்கு பார்ப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்று காலை 5 மணிக்கு சீகிரிய குன்றிற்கு ஏறிய உள்நாட்டு நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சூரியன் உதிக்கும் காட்சியை காண முடிந்துள்ளது.

கடந்த சில தினங்களாக மழை பெய்தமையினால் முகில்களினால் மூடப்பட்ட நிலை ஒன்றே காணப்பட்டுள்ளது. எனினும் நேற்று அதிகாலை 6 மணியளவில் சூரியன் உதிக்கும் காட்சியினை அவதானிக்க முடிந்துள்ளது.

சீகிரிய மலைக்குன்றில் இவ்வாறான காட்சியை காண்பது அபூர்வம் என சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

Previous articleபொலிஸாரி்ன் நெகிழ்ச்சியான காரியம்! முதியவரிடம் யாரும் நெருங்க முடியாதளவு நாற்றம்!
Next articleசிசிடிவியில் பதிவாகிய காட்சிகள்! பெண்ணொருவரின் மோசமான செயற்பாடு!