8 வயது மகளை தந்தை செய்த அதிர்ச்சி செயல்! ஆபாச இணையதளங்களில் புகைப்படங்களை விற்றது அம்பலம்!

0

உக்ரைனில் எட்டு வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அது தொடர்பான புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் விற்ற தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உக்ரைனின் Zhytomyr Oblast மாகாணத்தின் Berdychiv பகுதியில் இருக்கும் 27 வயது தந்தையையே இந்த கொடூர செயலை செய்துள்ளார்.

இது குறித்து உக்ரைன் சைபர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 27 வயதான தந்தை ஒருவர் வீட்டில் தாய் இல்லாத போது, அவரின் 8 வயது மகளை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

அதன் பின் அது தொடர்பான புகைப்படங்களை அவுஸ்திரேலியா மற்றும் ரஷ்யாவின் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதைக் கண்ட அவுஸ்திரேலியாவின் சைபர் கிரைம், இது குறித்து உக்ரைன் சைபர் கிரைம்மிற்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன் பின் உக்ரைன் சைபர் கிரைம் பொலிசார் உதவியோடு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இவர் சிக்கியுள்ளார்.

27 வயதான இவர் முன்னாள் இராணுவ வீரராக இருந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தின் காரணமாக இவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை எனவும், வீட்டில் குழந்தையின் தாய் இல்லாத போது இது போன்ற அசிங்கமான செயலலில் ஈடுபட்டுள்ளார் என்றும், இந்த தகவலை அறிந்து தாய் அதிர்ச்சியைடைந்ததாகவும் சைபர் கிரைம் காவல் துறை அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

அதிகாலையில் பொலிசார் இந்த சோதனையை நடத்தியதால், அப்போது கைது செய்யப்பட்ட நபர் தொடர்பான புகைப்படத்தையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமகாலட்சுமி யார் யாரிடம் எல்லாம் தங்கமாட்டாள்?
Next articleயாழ்ப்பாணத்தில் மூன்று பெண்களுக்கு ஏற்பட்ட அவல நிலை!