43 வயதில் கோடீஸ்வரரை 4 வது திருமணம் செய்யும் உலக பிரபலம்

0

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 4 ஆவது திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

43 வயதான இவருக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். இவர் 1996-ம் ஆண்டு தொலைக்காட்சி பிரபலம் ஜானி லீ மில்லரை திருமணம் செய்தார். 2000-ம் ஆண்டில் விவாகரத்து செய்தார்.

பின்னர் நடிகர் பில்லி பாப் தாம்டனை 2-வது திருமணம் செய்தார். 2000-ம் ஆண்டு நடந்த இந்த திருமணம் 3 ஆண்டில் முடிவுக்கு வந்தது.

3-வது முறையாக நடிகர் பிராட் பிட்டை 2014-ல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் 2016-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

3வது கணவர், தனது முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏஞ்சலினா நான்காவது திருமணத்திற்கு தயாராகியுள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் சேட்டோ மிராவல் என்பவரை திருமணம் செய்து பிரான்ஸ் நாட்டில் குடியேறப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉலகமே வியக்கும் வகையில் கோலாகலமாக நடந்து முடிந்தது அம்பானி மகன் திருமணம்! வெளியான புகைப்படங்கள்!
Next articleசர்ச்சையான புகைப்படம்! அம்பானி வீட்டு திருமணத்திற்கு கவர்ச்சி உடையில் உடல் தெரிவதுபோல வந்த நடிகை!