வேறொரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த அஜித்குமார்! முதல் மனைவியோடு 15 நாட்கள்!

0

தமிழகத்தில் முதல் மனைவியிடம் விவாகரத்து பெற்றுவிட்டதாக கூறி வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்த நபரின் மீது பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர் அஜித் குமார் (45). இவருக்கும், கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் வேலை செய்து வரும் ஒரு பெண்ணுக்கும், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

அதன் பின் அஜித் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித் குமார் மீது தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் கிராம நாட்டாண்மை நெல்சனை அணுகி, எனது மனைவி இன்னொருவருடன் வாழ்ந்து வருகிறார்.

13 ஆண்டுகளாக மறுமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன். தற்போது, எனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால், திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். உங்கள் கிராமத்தில் பெண் இருந்தால் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து கிராமத்தைச் சேர்ந்த இருதய மேரி என்பவரின் மகள் கோகிலாவை அணுகியுள்ளனர். இருதய மேரி, இரண்டாம் தாரமாக பெண் தர மாட்டேன் என மறுத்துள்ளார்.

அப்போது அஜித் முதல் மனைவியோடு 15 நாட்கள் தான் வாழ்ந்தேன். அவர், இன்னொருவரோடு வாழ்வதால், அவரிடம் இருந்து விவகாரத்து வாங்கி விட்டேன். உங்கள் பெண், முதல் தாரம் மாதிரி தான் என்று அவரிடம் கூறியுள்ளார்.

இதை நம்பிய இருதய மேரி மகளை திருமணம் செய்ய சம்மதித்துள்ளார். கடந்த ஆண்டு வேளாங்கண்ணியில் கோகிலாவுக்கும், அஜித் குமாருக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது அவர், விவாகரத்து தீர்ப்பு நகல் கிடைக்கவில்லை. இதனால் திருமணத்தை புகைப்படமோ, வீடியோவோ எடுக்க வேண்டாம். நகல் கிடைத்தவுடன், பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அஜித் கூறியுள்ளார்.

ஆனால், திருமணத்திற்கு வந்த உறவினர்கள் தங்களது செல்போனில் திருமண நிகழ்வுகளைப் படம் பிடித்துள்ளனர்.

தற்போது திருமணம் முடிந்து 3 மாதங்கள் கடந்த நிலையில் கோகிலா திருமணம் பதிவு செய்வதை பற்றி கேட்டுள்ளனர். ஆனால் அஜித் மற்றும் அவரது தாயார் கோகிலாவை அடித்து கொடுமைபடுத்தியுள்ளனர்.

அதன் பின் கோகிலா தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். தற்போது கோகிலாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதை அறிந்த அஜித் முதல் மனைவியிடம் சமரசம் பேசி, அவரைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இதையறிந்த கோகிலா மற்றும் அவரது உறவினர்கள் அஜித் குமாரிடம் நியாயம் கேட்டபோது, முதல் மனைவியுடன் தான் சேர்ந்து வாழ்வேன் என்றும், தொடர்ந்து தொல்லை அளித்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த கோகிலா உடனடியாக காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்! தொகுப்பாளினியுடன் நெருக்கமாக இருப்பது யார்?
Next articleஇணையத்தில் கசிந்த காட்சி! குளியலறையில் இளம் பெண்கள் செய்யும் மோசமான செயல்!