வெள்ளை ஆட்டை சாப்பிடலாமா! சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா!

0

கடைக்குப் போய் ஆட்டுக்கறி வாங்கறது பிரச்சினையில்ல. நல்லதா பார்த்து வாங்கணும். அது தெரியாமலே நம்மில் பல பேரும் கடையில் போய் அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வார்கள்.

எப்படித்தான் மட்டனை நல்லதா பார்த்து வாங்கறது என்பது பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

தொடைக்கறி
பொதுவாக மட்டன் வாங்குகின்ற பொழுது, தொடைப் பகுதிகளில் சதை அதிகமாக இருக்கும் என்பதால் அந்த பகுதியைக் கேட்டு வாங்குவோம். ஆனால் தொடைப் பகுதியில் சதை அதிகமாக இருந்தாலும் சாப்பிடச் சற்று கடினமானதாக இருக்கும். அதற்குக் காரணம் என்ன தெரியுமா? பொதுவாக ஆடு நடக்கின்ற பொழுது, அதிகமாக அசைகின்ற தசைகள் கொஞ்சம்” கடினமானதாக இருக்கும்.

நெஞ்சுப்பகுதி
அதனால் தான் எப்போதும் மட்டன் வாங்குகின்ற பொழுது நெஞ்சுப் பகுதி மற்றும் நெஞ்சுக்குப் பின்புறம் உள்ள முதுகுத் தசைப்பகுதியை வாங்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள தசைகள் மிகவும் மென்மையானதாக இருக்கும்.

ரத்தம் தேங்குதல்
இறைச்சி பழையதா? அல்லது ஆரோக்கியமான ஆடா என்பதையெல்லாம் வெட்டி தொங்க விட்டிருக்கும் இறைச்சியில் தேங்கி வடிகின்ற ரத்தத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். ஆம். நல்ல ஆரோக்கியமான ஆடாக இருந்தால் வெட்டப்படும்போது உடலில் ரத்தம் எங்கும் தங்காமல் வடிந்துவிடும். எங்கும் தேங்கியிருக்காது. இதுவே ஏதேனும் நோய்வாய்ப்பட்ட ஆடாக இருந்தால் ஆங்காங்கே சிறிது சிறிது ரத்தம் தேங்கியிருக்கும். இதுவே ஆடு இறந்து போனபின் அறுத்ததாக இருந்தால் ரத்தம் முழுவதும் அப்படியே உடலில் படிந்திருக்கும்.

வெள்ளாட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
வெள்ளாட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வெள்ளாட்டில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கும். மென்மையானதாகவும் இருக்கும். அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவைப் பார்ப்போம்.

ஈரப்பதம் (நீர்ச்சத்து) – 74.2 சதவீதம்

புரதச்சத்து – 21.4 சதவீதம்

கொழுப்பு – 3.6 சதவீதம் தாது

உப்புக்கள் – 1.1 சதவீதம்

மருத்துவ குணங்கள்
வெள்ளாட்டில் உள்ள ஒவ்வொரு பாகங்களுக்கும் சில மருத்துவ குணங்கள் உண்டு. அதேசமயம் வெள்ளாட்டின் பல உறுப்புக்கள் வாயுவை ஏற்படுத்தக்கூடியதும் அஜீரணம் உண்டாக்குவதாகவும் இருக்கிறது. அதனால் தான் இதில் சீரகம், மிளகு, சோம்பு போன்ற மூலிகை சார்ந்த மசாலாப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெங்காயம் மற்றும் பூண்டை இப்படி செய்து சாப்பிட்டால் போதும்! புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியுமாம்!
Next articleதினமும் வாழைப்பூவை சாப்பிடுபவரா! நீரிழிவு நோயாளிகளே! இனி சாப்பிட்டால் முழுசா தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்!