வெட்சி பூ பெருவாரியான மக்களால் இட்லி பூ எனவும் அழைக்கப்படுகிறது. குல்லை, செச்சை, செங்கொடுவேரி, சேதாரம் போன்ற பல பெயர்களால் அறியப்படுகிறது. அழகுக்காக வளர்க்கப்படும் வெட்சி செடியின் பூ, இலைகள் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது.
சளியை கரைத்து வெளியேற்றும். ரத்தம் கலந்து சளி வெளியேறும் பிரச்னையை தீர்க்க கூடியது. வெட்சி செடியின் இலைகளை அரைத்து போடும்போது தோல்நோய்கள் குணமாகும். கொப்புளங்கள், அரிப்பு, தடிப்பை சரிசெய்யும். அடிபட்ட இடத்தில் தசை நசுங்கி ரத்தநாளங்கள் சீர்கெட்டு போகும் நிலையில் மேல்பற்றாக போடும்போது புண்கள் விரைவில் ஆறிப்போகும். வயிற்றுப்போக்கை நிறுத்த கூடியது.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நீர்விடாமல் அரைத்த வெட்சி பூவை சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை வடிகட்டி பூசிவர தோல்நோய்கள் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். தலையில் தேய்த்து குளித்துவர பொடுகை போக்கி முடிக்கு வளத்தை கொடுக்கிறது.
வெட்சி பூ உடல் சோர்வு, காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது. உடல் அசதி, கழிச்சல், சீத கழிச்சல் ஆகியவை இருக்கும் போது வெட்சிப்பூ தேநீரை காலை, மாலை என இருவேளைகள் குடிக்க வேண்டும்.
பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய வெட்சி பூவை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும். கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும். புற்றுநோய் வராமல் தடுக்கும். வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தாக இது விளங்குகிறது.
வெளியே வெளிப்படையாக சொல்ல முடியாமல் பெண்கள் தவிக்கும் ஒரு பிரச்சனை தான் வெள்ளைப்படுதல் நிகழ்வு. இவைகள் சாதாரணமான உடலியக்க மாற்றங்களே ஆகும்.
வெள்ளைபடுதல் என்பது பல பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயல்பான அறிகுறிதான். இதற்கு நாம் பயப்படவே மருந்துகள் குடிக்கவே அவசியம் இல்லை.
இதனை நிரந்தமாக போக்க இயற்கை முறையிலான ஆரோக்கியம் நிறைந்த மருத்துவ முறைகளை பார்ப்போம்.
தேவையானவை
இட்லீ பூ (ixora flower)
தண்ணீர் – 200 ml
பனைவெல்லம் – 1 ஸ்பூன்.
செய்முறை
முதலில் தண்ணீர் நன்றாக கொதிக்க செய்ய வேண்டும்.
பின் இட்லீ பூவை தண்ணீர் போட்டு நன்றாக கொதித்த பின் பனைவெல்லம் 1 ஸ்பூனை பானத்தில் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதை இறக்கி வடிகட்டிய பின் அருந்துவது நல்லது.
இந்த பானத்தை 3 நாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் போதும். இது கர்ப்பபையிலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் நிரந்தரமாக தீர்க உதவி புரிகின்றது.