நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளபோவது யார் என்ற கேள்விக்கு எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் முடிவில் பதில் கிடைத்துவிடும்.
5 பெண்களின் வீடுகளுக்கும் ஆர்யா சென்ற வாரம் சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று அந்த 5 பேரில் இருந்து இருவர் வெளியேற்றப்படுவதாக அறிவித்தனர்.
முதலில் ஸ்வேதா வெளியேற்றப்படுவதாக ஆர்யா அறிவித்தார். பின் அபர்ணதி வெளியேற்றப்படுவது போல டீசரில் காட்டப்பட்டது. அதில் ஆர்யாவிடம் அபர்ணதி கண்ணீருடன் சண்டை போடுகிறார்.
“நான் இங்கிருந்து போக மாட்டேன், இதெல்லாம் ஒரு காரணமா. எனக்கு தெரியாத பல விஷயங்களை உனக்காக செய்தேன். இவ்ளோ ஈஸியா நீ சொல்லிட்ட. நான் வெளியே போனால் எனக்கு பைத்தியமே பிடித்துவிடும்” என கூறி சண்டை போட்டுள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: